விளங்கனி |
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, |
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், |
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் |
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் |
|
5 |
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், |
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, |
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் |
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் |
|
10 |
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, |
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் |
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் |
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் |
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், |
|
15 |
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, |
|
மடத் தகை மெலியச் சாஅய், |
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
உரை |
மேல் |