ஆமை |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
உரை |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில |
|
மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை |
|
நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் |
|
பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் |
|
5 |
நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு |
தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது |
|
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! |
|
பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே |
|
கையகப்பட்டமை அறியாய்; நெருநை |
|
10 |
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை |
ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, |
|
பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது |
|
கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் |
|
தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, |
|
15 |
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், |
திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய |
|
அறனிலாளன்,'அறியேன்' என்ற |
|
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், |
|
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, |
|
20 |
நீறு தலைப்பெய்த ஞான்றை, |
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது. - மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் | |
உரை |
பெரும் பெயர் மகிழ்ந! பேணாது அகன்மோ! |
|
பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய |
|
முட் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ |
|
ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட, |
|
5 |
வார் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் |
கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து, |
|
பழன யாமை பசு வெயில் கொள்ளும் |
|
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர! |
|
இதுவோ மற்று நின் செம்மல்? மாண்ட |
|
மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி | |
இகழ்ந்த சொல்லும் சொல்லி, சிவந்த |
|
ஆய் இதழ் மழைக் கண் நோய் உற நோக்கி, |
|
தண் நறுங் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு |
|
ஊடினள் சிறு துனி செய்து எம் |
|
15 |
மணல் மலி மறுகின் இறந்திசினோளே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி, மற்று அது |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
உரை |
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண், |
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன, |
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண், |
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை |
|
5 |
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும், |
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து |
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என |
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய், |
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே! |
|
10 |
கரியாப் பூவின் பெரியோர் ஆர, |
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை |
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு, |
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று, |
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை |
|
15 |
வெவ் அறை மருங்கின் வியன் சுரம், |
எவ்வம் கூர, இறந்தனம், யாமே. |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |