எருமை(காரான்) |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
உரை |
நகை ஆகின்றே தோழி! நெருநல் |
|
மணி கண்டன்ன துணி கயம் துளங்க, |
|
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
5 |
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய |
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப, |
|
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும் |
|
தண் துறை ஊரன் திண் தார் அகலம் |
|
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய, |
|
10 |
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் |
புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி, யாழ் இட்டு, |
|
எம் மனைப் புகுதந்தோனே. அது கண்டு |
|
மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென்று, |
|
'இம் மனை அன்று; அஃது உம் மனை' என்ற |
|
15 |
என்னும் தன்னும் நோக்கி, |
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே. |
|
பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு |
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி, |
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ, |
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும் |
|
5 |
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், |
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள் |
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை |
|
யார்கொல் அளியள்தானே எம் போல் |
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி, |
|
10 |
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் |
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து, |
|
ஆயமும் அயலும் மருள, |
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, |
|
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் |
|
பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, |
|
நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை |
|
மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், |
|
5 |
சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் |
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன், |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து |
|
10 |
ஆராக் காதலொடு தார் இடை குழைய, |
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
வதுவை மேவலன் ஆகலின், அது புலந்து, |
|
அடுபோர் வேளிர் வீரை முன்துறை, |
|
நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை, |
|
15 |
பெரு பெயற்கு உருகியாஅங்கு, |
திருந்துஇழை நெகிழ்ந்தன, தட மென் தோளே? |
|
வாயில் வேண்டிச் சென்ற விறலிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, |
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு |
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, |
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, |
|
5 |
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் |
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் |
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், |
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, |
|
10 |
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ |
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! |
|
அது புலந்து உறைதல் வல்லியோரே, |
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, |
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, |
|
15 |
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
வைகுநர் ஆகுதல் அறிந்தும், |
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் | |
உரை |
மேல் |