காளை(பகடு, எருது, ஏறு, விடை) |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை, |
|
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து, |
|
துணை புணர் உவகையர் பரத மாக்கள் |
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, |
|
5 |
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும் |
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ, |
|
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி, |
|
பெருங் களம் தொகுத்த உழவர் போல, |
|
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி, |
|
10 |
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி, |
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ! |
|
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் |
|
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் |
|
தண் நறுங் கானல் வந்து, 'நும் |
|
15 |
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே? |
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் | |
உரை |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப, |
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் |
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப, |
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து, |
|
5 |
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர, |
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் |
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப, |
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி, |
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில், |
|
10 |
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய், |
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த |
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ |
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர் |
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன |
|
15 |
அம் கலுழ் மாமை கிளைஇய, |
நுண் பல் தித்தி, மாஅயோளே? |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து சொல்லியது. - குன்றியனார் | |
உரை |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உரை |
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை |
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென |
|
நல் வரை நாடன் தற்பாராட்ட |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, |
|
5 |
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் |
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, |
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் |
|
10 |
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், |
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து |
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் |
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, |
|
15 |
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
முகை தலை திறந்த வேனிற் |
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார் | |
உரை |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
|
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், 'என்றும் |
|
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
|
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
|
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
|
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் |
|
இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த |
|
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
என்றூழ் விடர குன்றம் போகும் |
|
5 |
கதழ் கோல் உமணர் காதல் மடமகள் |
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, |
|
'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச் |
|
சேரி விலைமாறு கூறலின், மனைய |
|
விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய |
|
10 |
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, |
இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும் |
|
மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு |
|
எவ்வம் தீர வாங்கும் தந்தை |
|
கை பூண் பகட்டின் வருந்தி, |
|
15 |
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே. |
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- அம்மூவனார் | |
உரை |
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
|
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
|
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
|
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
|
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | |
உரை |
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் |
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் |
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் |
|
5 |
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் |
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், |
|
வருவர் வாழி, தோழி! பல புரி |
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, |
|
10 |
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, |
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை |
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் |
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் |
|
15 |
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் |
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன் |
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் | |
உரை |
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ |
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, |
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, |
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் |
|
5
|
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, |
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் |
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் |
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, |
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு |
|
10 |
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, |
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, |
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், |
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை |
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, |
|
15 |
அறல் என விரிந்த உறல் இன் சாயல் |
ஒலி இருங் கூந்தல் தேறும்' என, |
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
|
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
|
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
|
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
|
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
|
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
|
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
|
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
|
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
|
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் | |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
|
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய |
|
நீர் சூழ் வியன் களம் பொலிய, போர்பு அழித்து, |
|
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி, |
|
கடுங் காற்று எறிய, போகிய துரும்பு உடன் |
|
5 |
காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின், |
இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் |
|
தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின், சினைஇ, |
|
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து, மயங்கி, |
|
இருஞ் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு, |
|
10 |
நரை மூதாளர் கை பிணி விடுத்து, |
நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் |
|
பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன, |
|
நலம் பெறு பணைத் தோள், நல் நுதல் அரிவையொடு, |
|
மணம் கமழ் தண் பொழில் அல்கி, நெருநை |
|
15 |
நீ தற் பிழைத்தமை அறிந்து, |
கலுழ்ந்த கண்ணள், எம் அணங்கு அன்னாளே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிய இடத்து,தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |