குதிரை(புரவி, பரி, கலிமா, இவுளி) |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
|
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
|
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
|
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
|
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் | |
உரை |
பெருநீர் அழுவத்து எந்தை தந்த |
|
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி, |
|
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ, |
|
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி, |
|
5 |
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித் |
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி, |
|
கொண்டல் இடு மணல் குரவை முனையின் |
|
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி, |
|
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப் |
|
10 |
பல் பூங் கானல் அல்கினம் வருதல் |
கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர், |
|
கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை |
|
கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை, |
|
எல்லையும் இரவும் என்னாது, கல்லென |
|
15 |
வலவன் ஆய்ந்த வண் பரி |
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே. |
|
பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. - உலோச்சனார் | |
உரை |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை |
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி, |
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது, |
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து, |
|
5 |
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக் |
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் |
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர, |
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும் |
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை, |
|
10 |
யாமே எமியம்ஆக, தாமே |
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் |
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர் |
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ |
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
15 |
முதுநீர் முன்துறை முசிறி முற்றி, |
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் |
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது அழிந்து, |
|
பானாட் கங்குலும் பகலும் |
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே? |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் |
|
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் |
|
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! |
|
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை |
|
5 |
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். |
|
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை |
|
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் |
|
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, |
|
10 |
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் |
|
தண் நறும் பைந் தாது உறைக்கும் |
|
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் | |
உரை |
அரையுற்று அமைந்த ஆரம் நீவி, |
|
புரையப் பூண்ட கோதை மார்பினை, |
|
நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, |
|
எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. |
|
5 |
பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த |
கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த |
|
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் |
|
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை, |
|
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த |
|
10 |
ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் |
பாடுநர்த் தொடுத்த கை வண் கோமான், |
|
பரியுடை நல் தேர்ப் பெரியன், விரிஇணர்ப் |
|
புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை |
|
வம்ப நாரைஇனன் ஒலித்தன்ன |
|
15 |
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் |
வைகுறு விடியல் போகிய எருமை |
|
நெய்தல் அம் புது மலர் மாந்தும் |
|
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே! |
|
தோழி வரைவு கடாயது. - உலோச்சனார் | |
உரை |
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
|
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
|
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
|
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை |
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென |
|
நல் வரை நாடன் தற்பாராட்ட |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, |
|
5 |
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் |
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, |
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் |
|
10 |
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், |
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து |
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் |
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, |
|
15 |
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
முகை தலை திறந்த வேனிற் |
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'கேளாய், எல்ல! தோழி! வேலன் |
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய |
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், |
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, |
|
5 |
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் |
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, |
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, |
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் |
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, |
|
10 |
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் |
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், |
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், |
|
15 |
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ....... | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, |
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி |
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை |
|
ஆலி அன்ன வால் வீ தாஅய், |
|
5 |
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, |
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் |
|
கடாஅம் மாறிய யானை போல, |
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ |
|
10 |
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் |
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, |
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை; |
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற |
|
15 |
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் |
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த |
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், |
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற |
|
20 |
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
பீடு இல் மன்னர் போல, |
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
|
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று |
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ |
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை |
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, |
|
5 |
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் |
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, |
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் |
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் |
|
10 |
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை |
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் |
|
போது புறங்கொடுத்த உண்கண் |
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
|
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
|
10 |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
|
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? |
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். |
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் |
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, |
|
5 |
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை |
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் |
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: |
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல |
|
10 |
வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி |
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி |
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், |
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, |
|
15 |
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் |
|
அரவச் சீறூர் காண, |
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு |
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி |
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு |
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி, |
|
5 |
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் |
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி, |
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர் |
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன, |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் |
|
10 |
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு |
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண், |
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து, |
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி, |
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன |
|
15 |
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து |
வேனில் வெற்பின் கானம் காய, |
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை, |
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை |
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து, |
|
20 |
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை |
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி, |
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் |
|
வைகு கடல் அம்பியின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார் | |
உரை |
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு |
|
உப்பின் குப்பை ஏறி, எல் பட, |
|
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே |
|
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே; |
|
5 |
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்; |
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப் |
|
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த |
|
வம்ப நாரை இரிய, ஒரு நாள், |
|
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும், |
|
10 |
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை |
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி |
|
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, |
|
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில |
|
நிரைமணிப் புரவி விரைநடை தவிர, |
|
15 |
இழுமென் கானல் விழு மணல் அசைஇ, |
ஆய்ந்த பரியன் வந்து, இவண் |
|
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார் | |
உரை |
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, |
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி |
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் |
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே |
|
5 |
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், |
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி |
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, |
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, |
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் |
|
10 |
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் |
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் |
|
தண்டலை கமழும் கூந்தல், |
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் | |
உரை |
செல்க, பாக! எல்லின்று பொழுதே |
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் |
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, |
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, |
|
5 |
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி, |
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன, |
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம் |
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி, |
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக, |
|
10 |
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில், |
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள் |
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த |
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல் |
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ, |
|
15 |
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை என, |
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால் |
|
அருங் கடி வியல் நகர் நோக்கி, |
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் | |
உரை |
'உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த |
|
சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் |
|
பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், |
|
ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, |
|
5 |
மை ஈர் ஓதி, வாள் நுதல், குறுமகள்! |
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த |
|
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு, |
|
மனை புறந்தருதிஆயின், எனையதூஉம், |
|
இம் மனைக் கிழமை எம்மொடு புணரின், |
|
10 |
தீதும் உண்டோ, மாதராய்?' என, |
கடும் பரி நல் மான், கொடிஞ்சி நெடுந் தேர் |
|
கை வல் பாகன் பையென இயக்க, |
|
யாம் தற் குறுகினமாக, ஏந்து எழில் |
|
அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கி, |
|
15 |
சிறிய இறைஞ்சினள், தலையே |
பெரிய எவ்வம் யாம் இவண் உறவே. |
|
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
|
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
|
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
|
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
|
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
|
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் | |
உரை |
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன |
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி, |
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை |
|
5 |
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை |
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு |
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன் |
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, |
|
10 |
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் |
பாணன் வந்தனன், தூதே; நீயும் |
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, |
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ! |
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார் | |
உரை |
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற் |
|
செம் முது செவிலியர் பல பாராட்ட, |
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி |
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, |
|
5 |
மனை உறை புறவின் செங் காற் சேவல் |
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, |
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் |
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை |
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, |
|
10 |
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, |
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், |
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி |
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, |
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, |
|
15 |
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென |
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் |
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் |
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென, |
|
தார் மணி மா அறிவுறாஅ, |
|
20 |
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! |
வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
|
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
|
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
|
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் | |
உரை |
குண கடல் முகந்த கொள்ளை வானம் |
|
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் |
|
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு, |
|
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி, |
|
5 |
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், |
பெரு மலை மீமிசை முற்றினஆயின், |
|
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை, |
|
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி |
|
வருவதுமாதோ, வண் பரி உந்தி, |
|
10 |
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை; |
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள் |
|
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ |
|
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய, |
|
தணிவு அருந் துயரம் செய்தோன் |
|
15 |
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே? |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் |
|
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார், |
|
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க |
|
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை, |
|
5 |
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், |
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல் |
|
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி, |
|
'செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச் |
|
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து, |
|
10 |
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, |
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப் |
|
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால், |
|
சேணின் வருநர் போலப் பேணா, |
|
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின், |
|
15 |
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, |
'துறையும் மான்றன்று பொழுதே; சுறவும் |
|
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே; |
|
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என, |
|
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற, |
|
20 |
இளையரும் புரவியும் இன்புற, நீயும் |
இல் உறை நல் விருந்து அயர்தல் |
|
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - உலோச்சனார் மணி மிடை பவளம் முற்றும்நித்திலக் கோவை | |
உரை |
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி, |
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர், |
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென, |
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் |
|
5 |
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய், |
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை, |
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து |
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் |
|
காடு மிக நெடிய என்னார், கோடியர் |
|
10 |
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன் |
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு, |
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின் |
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் |
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது, |
|
15 |
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் |
தண் பெரு படாஅர் வெரூஉம் |
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் | |
உரை |
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், |
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் |
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, |
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, |
|
5 |
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, |
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, |
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி |
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் |
|
10 |
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் |
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, |
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை |
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, |
|
15 |
கடவுட் கற்பின் மடவோள் கூற, |
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் |
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! |
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! |
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் |
|
20 |
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
இன் நகை இளையோள் கவவ, |
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
|
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் | |
உரை |
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
|
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
|
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
|
15 |
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் | |
உரை |
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் |
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், |
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் |
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, |
|
5 |
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட |
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து |
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப, |
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, |
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, |
|
10 |
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; |
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு |
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் |
|
வாழ்தல் அன்ன காதல், |
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே! |
|
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - நரை முடி நெட்டையார் | |
உரை |
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, |
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் |
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், |
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் |
|
5 |
கை மாண் தோணி கடுப்ப, பையென, |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் |
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே, |
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, |
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி |
|
10 |
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய |
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி, |
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண் |
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க் |
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால், |
|
5 |
பல் படைப் புரவி எய்திய தொல் இசை |
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய |
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து, |
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் |
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் |
|
10 |
சில் நாள் கழிக!' என்று முன் நாள் |
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு |
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார், |
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப, |
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய |
|
15 |
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த |
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச் |
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப, |
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு |
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் |
|
20 |
கல் கண் சீக்கும் அத்தம், |
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே! |
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ, |
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று, |
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய, |
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய், |
|
5 |
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் |
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய் |
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப, |
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் |
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த |
|
10 |
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர் |
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த |
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய, |
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல் |
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் |
|
15 |
இன்னா வெஞ் சுரம் இறந்தோர், முன்னிய |
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து, |
|
எய்த வந்தனரே தோழி! மை எழில் |
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண் |
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் | |
உரை |
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
|
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
|
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
|
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
|
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
|
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
நகை நன்று அம்ம தானே 'அவனொடு, |
|
மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, |
|
கானல் அல்கிய நம் களவு அகல, |
|
பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, |
|
5 |
நூல் அமை பிறப்பின், நீல உத்தி, |
கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, |
|
நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை |
|
நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் |
|
குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு |
|
10 |
வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, |
பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, |
|
மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் |
|
புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் |
|
கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, |
|
15 |
பால் கண்டன்ன ஊதை வெண் மணல், |
கால் கண்டன்ன வழி படப் போகி, |
|
அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், |
|
இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு |
|
மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, |
|
20 |
பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, |
நேமி தந்த நெடுநீர் நெய்தல் |
|
விளையா இளங் கள் நாற, பலவுடன் |
|
பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் |
|
புதுவது ஆகின்று அம்ம பழ விறல், |
|
25 |
பாடு எழுந்து இரங்கு முந்நீர், |
நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! |
|
தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது. -உலோச்சனார் | |
உரை |
மேல் |