73. பாலை |
பின்னொடு முடித்த மண்ணா முச்சி |
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; |
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு |
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, |
|
5 |
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், |
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர |
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என, |
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் |
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி |
|
10 |
இருவேம் நம் படர் தீர வருவது |
காணிய வம்மோ காதல்அம் தோழி! |
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் |
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின், |
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் |
|
15 |
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி |
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர் |
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே. |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. - எருமை வெளியனார் | |
உரை |
மேல் |