பசு(ஆ, ஆன், கறவை, ஆயம், நிரை, நாகு) |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
|
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
|
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
|
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
|
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் | |
உரை |
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள், |
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப |
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை, |
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர் |
|
5 |
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த |
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் |
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார், |
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து, |
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் |
|
10 |
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் |
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து அணிந்து, |
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன் |
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல |
|
துஞ்சா முழவின் கோவற் கோமான் |
|
15 |
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை, |
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் |
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு, |
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே! |
|
மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் |
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும், |
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என, |
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த |
|
5 |
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, |
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் |
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, |
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ! |
|
10 |
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, |
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய |
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் |
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை |
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர், |
|
15 |
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, |
கோதை ஆயமொடு ஓரை தழீஇ, |
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் |
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே! |
|
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் | |
உரை |
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
|
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
|
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
|
15 |
காம நோய்' எனச் செப்பாதீமே. |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் | |
உரை |
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, |
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் |
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும் |
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம், |
|
5 |
வள் வாய் ஆழி உள் உறுபு உருள, |
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் |
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, |
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, |
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் |
|
10 |
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, |
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை, |
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் |
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் |
|
15 |
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, |
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! |
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, |
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என, |
|
20 |
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
திதலை அல்குல் எம் காதலி |
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
|
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் | |
உரை |
களையும் இடனால் பாக! உளை அணி |
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா |
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, |
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, |
|
5 |
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் |
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக, |
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல |
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின், |
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர, |
|
10 |
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, |
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு |
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ, |
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன், |
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
15 |
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை |
புலம்பு கொள் மாலை கேட்டொறும் |
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் | |
உரை |
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் |
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, |
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், |
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய |
|
5 |
வன் புலம் துமியப் போகி, கொங்கர் |
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் |
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள் |
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் |
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப, |
|
10 |
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர |
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை |
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை, |
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக் |
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர, |
|
15 |
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை, |
கல் பிறங்கு அத்தம் போகி, |
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே. |
|
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த |
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், |
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, |
|
காமர் சேவல் ஏமம் சேப்ப; |
|
5 |
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, |
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, |
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, |
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, |
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக |
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு |
|
தானே சென்ற நலனும் |
|
15 |
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
|
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், 'என்றும் |
|
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
|
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
|
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
|
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
|
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
|
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு |
|
வருக' என்னுதிஆயின், |
|
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
|
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
|
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
|
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
|
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | |
உரை |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, |
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; |
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! |
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த |
|
5 |
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, |
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; |
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் |
|
10 |
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் |
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, |
|
கானவர் மடிந்த கங்குல்; |
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் | |
உரை |
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், |
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் |
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, |
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; |
|
5 |
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, |
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, |
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; |
|
அமரும் நம் வயினதுவே; நமர் என |
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் |
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி |
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, |
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, |
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை |
|
15 |
மாரி மாலையும் தமியள் கேட்டே? |
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? |
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும் |
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர், |
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், |
|
5 |
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் |
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, |
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், |
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் |
|
10 |
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, |
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என, |
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு |
|
நெருநலும் தீம் பல மொழிந்த |
|
15 |
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
'வைகல்தோறும் பசலை பாய, என் |
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென; |
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே, |
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி, |
|
5 |
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் |
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான் |
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல நினைந்து, |
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது, |
|
10 |
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய, |
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய், |
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து, |
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் |
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய |
|
15 |
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த |
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி, |
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம் |
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன், |
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை |
|
20 |
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து |
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள், |
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின், |
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த |
|
25 |
திங்கள் அன்ன நின் திரு முகத்து, |
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
|
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
|
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை; |
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு யான் |
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது |
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை |
|
5 |
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் |
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன், |
|
ஏவல் இளையர் தலைவன், மேவார் |
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப் |
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை, |
|
10 |
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ |
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ் |
|
வரையரமகளிரின் அரியள், |
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே! |
|
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார் | |
உரை |
மத வலி யானை மறலிய பாசறை, |
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, |
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு |
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, |
|
5 |
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் |
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட, |
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் |
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, |
|
10 |
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், |
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட |
|
போது உறழ் கொண்ட உண்கண் |
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
|
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார் | |
உரை |
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: |
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, |
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் |
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் |
|
5 |
சேயிழை மகளிர் ஆயமும் அயரா; |
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் |
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் |
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, |
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன், |
|
10 |
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்! |
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு, |
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக் |
|
கடல்அம் தானை கை வண் சோழர், |
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, |
|
15 |
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, |
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் |
|
ஓமை நீடிய உலவை நீள் இடை, |
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், |
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் |
|
20 |
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த |
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, |
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் |
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை |
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் |
|
25 |
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, |
மேயினள்கொல்?' என நோவல் யானே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
|
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
|
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
|
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |