பன்றி(கேழல்) |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து, |
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று, |
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி, |
|
மராஅ யானை மதம் தப ஒற்றி, |
|
5 |
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் |
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து, |
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து |
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப! |
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள், |
|
10 |
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும் |
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் |
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால், |
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக் |
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை, |
|
15 |
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில், |
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை |
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய் |
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே. |
|
தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. - கபிலர் | |
உரை |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் |
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, |
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, |
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர |
|
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை | |
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, |
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய, |
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும் |
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின் |
|
10 |
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, |
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி, |
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு |
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும் |
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் |
|
15 |
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, |
வினைவயின் பெயர்க்கும் தானை, |
|
புனைதார், வேந்தன் பாசறையேமே! |
|
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. - மதுரை எழுத்தாளன் | |
உரை |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் |
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி |
|
வருவர் வாழி, தோழி! அரச |
|
யானை கொண்ட துகிற் கொடி போல, |
|
5 |
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி |
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, |
|
மழை என மருண்ட மம்மர் பல உடன் |
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை |
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் |
|
10 |
அத்தக் கேழல் அட்ட நற் கோள் |
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப, |
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி, |
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட |
|
புண் தேர் விளக்கின், தோன்றும் |
|
15 |
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
|
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
|
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
|
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, |
|
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
|
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் |
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி, |
|
ஆழல் வாழி, தோழி! கேழல் |
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் |
|
5 |
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர், |
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு |
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் |
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின் |
|
10 |
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் |
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி |
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் |
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட, |
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத் |
|
15 |
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின் |
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
நகை நீ கேளாய் தோழி! அல்கல்; |
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, |
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு |
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, |
|
5 |
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற |
தறுகட் பன்றி நோக்கி, கானவன் |
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி |
|
மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது, |
|
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்' என, |
|
10 |
எய்யாது பெயரும் குன்ற நாடன் |
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி அவிழ்ந்து, |
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை, |
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து துயல்வர, |
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை; |
|
15 |
வல்லே என் முகம் நோக்கி, |
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
|
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
5 |
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
|
10 |
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
|
15 |
புகல் அரும், பொதியில் போலப் |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
|
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |