புலி(பேழ்வாய் ஏற்றை, உழுவை, வயமான்) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; |
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, |
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; |
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், |
|
5 |
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், |
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, |
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், |
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய, |
|
10 |
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், |
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் |
|
நல் வரை நாட! நீ வரின், |
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
|
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் |
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் |
|
இது என அறியா மறுவரற் பொழுதில், |
|
5 |
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, |
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, |
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, |
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, |
|
10 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், |
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த |
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி, |
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் |
|
15 |
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை |
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, |
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, | |
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த |
|
20 |
நோய் தணி காதலர் வர, ஈண்டு |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார். | |
உரை |
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை |
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் |
|
கானம் கடிய என்னார், நாம் அழ, |
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், |
|
5 |
செல்ப" என்ப' என்போய்! நல்ல |
மடவைமன்ற நீயே; வடவயின் |
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, |
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் |
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன |
|
10 |
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப |
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் |
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் |
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, |
|
15 |
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
குருதியொடு துயல்வந்தன்ன நின் |
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
|
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார் | |
உரை |
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள், |
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின் |
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த |
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப, |
|
5 |
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று |
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின் |
|
மாவின் நறு வடி போல, காண்தொறும் |
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் |
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம், |
|
10 |
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண் |
தாழக் கூறிய தகைசால் நல் மொழி |
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின் |
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க |
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி |
|
15 |
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை, |
கொம்மை வாடிய இயவுள் யானை |
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி, |
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும் |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை, |
|
20 |
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு |
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு |
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை, |
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே! |
|
வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார் | |
உரை |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, |
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் |
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, |
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் |
|
5 |
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி |
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை |
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் |
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், |
|
10 |
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து |
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, |
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, |
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, |
|
15 |
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, |
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, |
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, |
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின் |
|
20 |
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் |
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, |
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, |
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் |
|
ஏற்று ஏக்கற்ற உலமரல் |
|
25 |
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார் | |
உரை |
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் |
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப, |
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து, |
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு, |
|
5 |
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் |
காடு இறந்தனரே, காதலர். மாமை, |
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து |
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே, |
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
10 |
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி, |
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர் |
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே, |
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
ஆதிமந்தி போல, பேதுற்று |
|
15 |
அலந்தனென் உழல்வென்கொல்லோ பொலந்தார், |
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல், |
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய |
|
உடை மதில் ஓர் அரண் போல, |
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே! |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் | |
உரை |
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள், |
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு, |
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம் |
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள், |
|
5 |
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு |
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி, |
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற |
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ் |
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன், |
|
10 |
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன், |
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி, |
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு, |
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என |
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு, |
|
15 |
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி, |
நாணி நின்றனெமாக, பேணி, |
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் |
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப் |
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப் |
|
20 |
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து, |
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச் |
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே. |
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து, |
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன் |
|
25 |
மகனே தோழி!' என்றனள். |
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே. |
|
செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நின்றது. - தங்கால் முடக் கொற்றனார் | |
உரை |
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
|
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
|
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
|
15 |
காம நோய்' எனச் செப்பாதீமே. |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் | |
உரை |
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் |
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், |
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் |
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, |
|
5 |
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை |
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண், |
|
ஆறே அரு மரபினவே; யாறே |
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய; |
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க, |
|
10 |
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து, |
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன், |
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய, |
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை |
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த |
|
15 |
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் |
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை, |
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி, |
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக |
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த |
|
20 |
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின் |
ஆனா அரும் படர் செய்த |
|
யானே, தோழி! தவறு உடையேனே. |
|
தலைமகன் இரவுக் குறிக்கண் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார் மகனார் கடலனார் | |
உரை |
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் |
|
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின் |
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, |
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் |
|
5 |
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, |
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் |
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும் |
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த |
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல், |
|
10 |
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர் வாய், |
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர் |
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து, |
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது |
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும் |
|
15 |
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும் |
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என- |
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன |
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்; |
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்; |
|
20 |
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி |
ஆனா நோயை ஆக, யானே |
|
பிரியச் சூழ்தலும் உண்டோ, |
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?' |
|
'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி சொல்லியது. - மதுரைப்போத்தனார் | |
உரை |
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை |
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் |
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் |
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, |
|
5 |
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய |
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம் |
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன் |
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து |
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக் |
|
10 |
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் |
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து, |
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் |
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி, |
|
கொடு விரல் உளியம் கெண்டும் |
|
15 |
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.- ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் |
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல் |
|
5 |
வாரல் வாழியர், ஐய! நேர் இறை |
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும் |
|
காவல் கண்ணினம் தினையே; நாளை |
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் |
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண், |
|
10 |
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, |
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் |
|
திருமணி விளக்கின் பெறுகுவை |
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே. |
|
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன |
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் |
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் |
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின் |
|
5 |
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை |
அதிரல் பரந்த அம் தண் பாதிரி |
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ |
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம் |
|
அணங்குடை நகரின் மணந்த பூவின் |
|
10 |
நன்றே, கானம்; நயவரும் அம்ம; |
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை |
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின், |
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும் |
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே! |
|
உடன்போகிய தலைமகளைத் தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
|
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
|
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
|
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் | |
உரை |
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், |
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி, |
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, |
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, |
|
5 |
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, |
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, |
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் |
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய |
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள் |
|
10 |
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும். |
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள் |
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல் |
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்; |
|
அளியள்தான், நின் அளி அலது இலளே! |
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும் பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர் | |
உரை |
'நுதலும் தோளும், திதலை அல்குலும், |
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட |
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி, |
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது, |
|
5 |
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, |
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, |
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள, |
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் |
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் |
|
10 |
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, |
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை, |
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை, |
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு |
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப, |
|
15 |
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள |
மறப் புலி உழந்த வசி படு சென்னி |
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி, |
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை |
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை, |
|
20 |
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே? |
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
|
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
|
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் |
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும் |
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம் |
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே |
|
5 |
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம் |
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின் |
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் |
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய |
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி, |
|
10 |
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது |
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி |
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி, |
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை |
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த |
|
15 |
விரல் ஊன்று வடுவின் தோன்றும் |
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, |
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; |
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! |
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த |
|
5 |
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் |
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் |
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, |
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; |
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் |
|
10 |
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, |
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் |
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற, |
|
கானவர் மடிந்த கங்குல்; |
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? |
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் | |
உரை |
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, |
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, |
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் |
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, |
|
5 |
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் |
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் |
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் |
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி |
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, |
|
10 |
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை |
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் |
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார, |
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு |
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே! |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - தொண்டியாமூர்ச் சாத்தனார் | |
உரை |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் |
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, |
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப் |
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, |
|
5 |
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே |
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, |
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே |
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை |
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி, |
|
10 |
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி, |
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க் |
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன |
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற |
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல |
|
15 |
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி, |
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில், |
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ |
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி, |
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து, |
|
20 |
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர, |
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை |
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் |
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய |
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.- நக்கீரர் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
|
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
|
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; |
|
திதலை அல்குல் வரியும் வாடின; |
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண் |
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, |
|
5 |
இனையல் வாழி, தோழி! நனை கவுள் |
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு |
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் |
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப, |
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் |
|
10 |
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து, |
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் |
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ, |
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள், |
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின், |
|
15 |
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை, |
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் |
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த் தழும்பன் |
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர், |
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர், |
|
20 |
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து, |
எல் உமிழ் ஆவணத்து அன்ன, |
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது; பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென |
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித் |
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், |
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் |
|
5 |
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே |
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல |
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் |
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, |
|
10 |
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் |
|
இரும் பிடி இரியும் சோலைப் |
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார் | |
உரை |
காண் இனி வாழி, தோழி! பானாள், |
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், |
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ, |
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் |
|
5 |
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, |
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், |
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த |
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் |
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் |
|
10 |
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் |
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், |
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை |
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, |
|
'முருகு' என வேலற் தரூஉம். |
|
15 |
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. |
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது. - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் | |
உரை |
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், |
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, |
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள், |
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த |
|
5 |
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, |
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, |
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, |
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, |
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் |
|
10 |
பெருங் கல் நாட! பிரிதிஆயின், |
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு |
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் |
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், |
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி |
|
15 |
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, |
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் |
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த |
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? |
|
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர் | |
உரை |
அளிதோதானே; எவன் ஆவதுகொல்? |
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும் |
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர், |
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், |
|
5 |
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய |
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் |
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, |
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், |
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் |
|
10 |
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, |
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, |
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என, |
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு |
|
நெருநலும் தீம் பல மொழிந்த |
|
15 |
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! |
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
தூதும் சென்றன; தோளும் செற்றும்; |
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; |
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு |
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், |
|
5 |
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் |
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் |
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் |
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், |
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, |
|
10 |
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் |
பணியாமையின், பகை தலைவந்த |
|
மா கெழு தானை வம்ப மோரியர் |
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த |
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், |
|
15 |
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை |
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி |
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு |
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை |
|
நிரம்பா நீள் இடைப் போகி, |
|
20 |
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ |
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, |
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் |
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் |
|
5 |
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் |
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின் |
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி |
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென |
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய், |
|
10 |
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு, |
யாம் முந்துறுதல் செல்லேம், ஆயிடை |
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி |
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு |
|
வில்லோர் குறும்பில் ததும்பும், |
|
15 |
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே. |
புணர்ந்து உடன் போயின காலை, இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த காலத்துத் தோழிக்குத் தலைமகன் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, |
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர, |
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் |
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர், |
|
5 |
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, |
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, |
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து, |
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக, |
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி, |
|
10 |
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர் |
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை |
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக் |
|
காய் சின யானை கங்குல் சூழ, |
|
அஞ்சுவர இறுத்த தானை |
|
15 |
வெஞ் சின வேந்தன் பாசறையோரே? |
பருவம் கண்டு, வன்புறை எதிர் அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற் காட்டு இளங்கண்ணனார் | |
உரை |
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் |
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த |
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை |
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் |
|
5 |
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய |
காமம் கலந்த காதல் உண்டுஎனின், |
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி; |
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின், |
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே |
|
10 |
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது, |
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த |
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி, |
|
செய்து பின் இரங்கா வினையொடு |
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே! |
|
குறை வேண்டிப் பின் நின்ற தலைமகனுக்குக் குறை நேர்ந்த தோழி,தலைமகட்குக் குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம் |
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து |
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று |
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், |
|
5 |
காடு தேர் மடப் பிணை அலற, கலையின் |
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை |
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி |
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன |
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை |
|
10 |
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி, |
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை |
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள் |
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு |
|
வரூஉம் என்றனரே, காதலர்; |
|
15 |
வாராய் தோழி! முயங்குகம், பலவே. |
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப, |
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின், |
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை, |
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி, |
|
5 |
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் |
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி, |
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் |
|
கல்லுடை அதர கானம் நீந்தி, |
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் |
|
10 |
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து |
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் |
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும், |
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து, |
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத் |
|
15 |
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், |
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும் |
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும், |
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ |
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் |
|
20 |
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், |
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின் |
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய், |
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட, |
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென, |
|
பெயல் உறு மலரின் கண் பனி வார, |
|
5 |
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து, |
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை |
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை |
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து, |
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை, |
|
10 |
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும் |
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில், |
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து |
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது, |
|
இரும் புறாப் பெடையொடு பயிரும் |
|
15 |
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே? |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் |
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல் |
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை, |
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின், |
|
5 |
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ, |
கலம் சுடு புகையின் தோன்றும் நாட! |
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின், |
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை |
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து, |
|
10 |
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி, |
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத் |
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய |
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட, |
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய |
|
15 |
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை, |
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன், ஊர்க்கே. |
|
இரவு வருவானைப் 'பகல் வருக' என்றது. - பிசிராந்தையார் | |
உரை |
கான மான் அதர் யானையும் வழங்கும்; |
|
வான மீமிசை உருமும் நனி உரறும்; |
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய; |
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி |
|
5 |
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் |
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், |
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட! |
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ |
|
இன்று தலையாக வாரல்; வரினே, |
|
10 |
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய, |
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின் |
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை, |
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு |
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் |
|
15 |
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே! |
இரவுக்குறி வந்த தலைமகனை வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
|
5 |
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
|
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் | |
உரை |
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
|
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
|
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
|
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் | |
உரை |
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய, |
|
சால் பெருந் தானைச் சேரலாதன் |
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய |
|
5 |
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன, |
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி |
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய, |
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே |
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது, |
|
10 |
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து, |
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி |
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ, |
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி |
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு, |
|
15 |
கெடு மகப் பெண்டிரின் தேரும் |
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
|
5 |
பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
|
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
|
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
|
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
|
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | |
உரை |
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, |
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, |
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை |
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய |
|
5 |
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, |
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், |
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, |
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, |
|
நன்று புறமாறி அகறல், யாழ நின் |
|
10 |
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? |
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி, |
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் |
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, |
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, |
|
15 |
நயன் அறத் துறத்தல் வல்லியோரே, |
நொதுமலாளர்; அது கண்ணோடாது, |
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, |
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர் |
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை |
|
20 |
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் |
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? |
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, |
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை |
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் |
|
25 |
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! |
காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார் | |
உரை |
மேல் |