மான்(மரை, இரலை, நவ்வி, கலை, மா, உழை, திரி மருப்பு ஏற்று, ஏறு) |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
உரை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி, |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு |
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய |
|
5 |
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ, |
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள, |
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர் |
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர, |
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் |
|
10 |
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற, |
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும் |
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை |
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற |
|
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன், |
|
15 |
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென, |
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து, |
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே |
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக, |
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் |
|
20 |
கார் மழை முழக்கு இசை கடுக்கும், |
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே. |
|
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார் | |
உரை |
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், |
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; |
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை |
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, |
|
5 |
காடே கம்மென்றன்றே; அவல, |
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், |
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை |
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, |
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; |
|
10 |
அனையகொல் வாழி, தோழி! மனைய |
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் |
|
மௌவல், மாச் சினை காட்டி, |
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, |
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, |
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, |
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, |
|
5 |
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, |
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று |
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச் |
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு |
|
10 |
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் |
|
கடிய கூறி, கை பிணி விடாஅ, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற |
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் |
|
15 |
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. |
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே |
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, |
|
20 |
என் குறைப் புறனிலை முயலும் |
அண்கணாளனை நகுகம், யாமே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார் | |
உரை |
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் |
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில், |
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன |
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை |
|
5 |
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல் |
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி, |
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை, |
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் |
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற, |
|
10 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! |
பசை கொல் மெல் விரல், பெருந் தோள், புலைத்தி |
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம் |
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில், |
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி, |
|
15 |
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர் திறத்து' என, |
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென |
|
மழலை இன் சொல் பயிற்றும் |
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து, |
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின் |
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க, |
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின் |
|
5 |
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து |
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி |
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை |
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக் |
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின், |
|
10 |
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு |
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து |
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, |
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டென, |
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி, |
|
15 |
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப் |
பரந்து படு பாயல் நவ்வி பட்டென, |
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு, |
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு, |
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின் |
|
20 |
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின் |
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி, |
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து, |
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின் |
|
ஏற்று ஏக்கற்ற உலமரல் |
|
25 |
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே! |
பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச் செங்கண்ணனார் | |
உரை |
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள் |
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும், |
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என, |
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த |
|
5 |
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி, |
குறுக வந்து, குவவுநுதல் நீவி, |
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள் |
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப, |
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ! |
|
10 |
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி, |
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய |
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் |
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை |
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர், |
|
15 |
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல, |
கோதை ஆயமொடு ஓரை தழீஇ, |
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள் |
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே! |
|
உடன்போயின தலைமகளை நினைந்து, செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார் | |
உரை |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
|
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
|
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
|
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
|
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | |
உரை |
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் |
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் |
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் |
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, |
|
5 |
மை இல் மான் இனம் மருள, பையென |
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு |
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, |
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, |
|
10 |
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, |
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் |
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, |
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து |
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, |
|
15 |
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, |
இது கொல் வாழி, தோழி! என் உயிர் |
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் |
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே? |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் | |
உரை |
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, |
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, | |
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, |
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய் |
|
5 |
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, |
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ |
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், |
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், |
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை |
|
10 |
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து |
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, |
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, |
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் |
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் |
|
15 |
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் |
கல்லாக் கோவலர் ஊதும் |
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
|
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் | |
உரை |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
உரை |
உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை |
|
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் |
|
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி |
|
மனை விளக்குறுத்து, மாலை தொடரி, |
|
5 |
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; |
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் |
|
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென, |
|
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர், |
|
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் |
|
10 |
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர, |
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று |
|
வால் இழை மகளிர் நால்வர் கூடி, |
|
'கற்பினின் வழாஅ, நற் பல உதவிப் |
|
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!' என, |
|
15 |
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி |
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க, |
|
வதுவை நல் மணம் கழிந்த பின்றை, |
|
கல்லென் சும்மையர், ஞெரேரெனப் புகுதந்து, |
|
'பேர் இற்கிழத்தி ஆக' எனத் தமர் தர, |
|
20 |
ஓர் இற் கூடிய உடன் புணர் கங்குல், |
கொடும் புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து |
|
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ, |
|
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப, |
|
அஞ்சினள் உயிர்த்தகாலை, 'யாழ நின் |
|
25 |
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை' என, |
இன் நகை இருக்கை, பின் யான் வினவலின், |
|
செஞ் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர, |
|
அகம் மலி உவகையள்ஆகி, முகன் இகுத்து, |
|
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் |
|
30 |
மடம் கொள் மதைஇய நோக்கின், |
ஒடுங்கு ஈர் ஓதி, மாஅயோளே. |
|
வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன் சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று இன்புற்றிருந்ததூஉமாம்,- நல்லாவூர் கிழார் | |
உரை |
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு |
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், |
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் |
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, |
|
5 |
பாசி தின்ற பைங் கண் யானை |
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, |
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை |
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும், |
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ் |
|
10 |
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக் |
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த |
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர், |
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப, |
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை, |
|
15 |
தட மருப்பு எருமை தாமரை முனையின், |
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும், |
|
குடநாடு பெறினும் தவிரலர் |
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, |
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த |
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு |
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று |
|
5 |
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், |
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், |
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு |
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட |
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு |
|
10 |
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் |
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர் |
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து, |
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து |
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து, |
|
15 |
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு |
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் |
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி, |
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர் |
|
மாலை இன் துணைஆகி, காலைப் |
|
20 |
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப, |
மண மனை கமழும் கானம் |
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே. |
|
தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.- காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் | |
உரை |
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
|
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
|
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
|
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் | |
உரை |
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என |
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் |
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து |
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, |
|
5 |
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், |
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் |
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப் |
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, |
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் |
|
10 |
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும் |
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப, |
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், |
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் |
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல் |
|
15 |
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், |
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என |
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் |
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
வானம் வாய்ப்பக் கவினி, கானம் |
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, |
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, |
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல |
|
5 |
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் |
செய்கை அன்ன செந் நிலப் புறவின்; |
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத் |
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க, |
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை |
|
10 |
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த |
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு |
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை |
|
கடுமான் தேர் ஒலி கேட்பின், |
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. |
|
வினை முற்றி மீண்ட தலைமகன் பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
துஞ்சுவது போல இருளி, விண் பக |
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு |
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, |
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, |
|
5 |
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; |
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை |
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, |
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை, |
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து |
|
10 |
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; |
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல், |
|
காமர் துணையொடு ஏமுற வதிய; |
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் |
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன் |
|
15 |
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ; |
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்! |
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர் |
|
கருவிக் கார்இடி இரீஇய |
|
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே. |
|
பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த |
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன |
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை |
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த, |
|
5 |
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென, |
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை |
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் |
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை, |
|
வெள்ளி வீதியைப் போல நன்றும் |
|
10 |
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து, |
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும் |
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி, |
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே! |
|
செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஒளவையார் | |
உரை |
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
|
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
|
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
|
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | |
உரை |
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் |
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை |
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, |
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி |
|
5 |
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன |
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, |
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் |
|
காமர் துணையொடு ஏமுற வதிய, |
|
10 |
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் |
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப |
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு |
|
நம் வயிற் புரிந்த கொள்கை |
|
15 |
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் | |
உரை |
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த |
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் |
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் |
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் |
|
5 |
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் |
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், |
|
வருவர் வாழி, தோழி! பல புரி |
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, |
|
10 |
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, |
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை |
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் |
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் |
|
15 |
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் |
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன் |
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார் | |
உரை |
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
|
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
|
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
|
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, |
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் |
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே, |
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, |
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, |
|
5 |
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், |
மான் பிணை நோக்கின் மட நல்லாளை |
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், |
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், |
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய |
|
10 |
நலம் புனை உதவியும் உடையன்மன்னே; |
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல; |
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி, |
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல், |
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல! |
|
15 |
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; |
மாறா வருபனி கலுழும் கங்குலில், |
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், |
|
எம் மனை முந்துறத் தருமோ? |
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? |
|
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
|
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
|
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் | |
உரை |
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
|
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
|
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
|
15 |
செம் முக மந்தி ஆடும் |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
|
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
|
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, |
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
|
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, |
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, |
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, |
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் |
|
5 |
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் |
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, |
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து |
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை |
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை, |
|
10 |
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க, |
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த |
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை, |
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே. |
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், |
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் |
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, |
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, |
|
5 |
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, |
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, |
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி |
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் |
|
10 |
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் |
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, |
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை |
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, |
|
15 |
கடவுட் கற்பின் மடவோள் கூற, |
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் |
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! |
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! |
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் |
|
20 |
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
இன் நகை இளையோள் கவவ, |
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
|
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் | |
உரை |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், |
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் |
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின், |
|
நாளது செலவும், மூப்பினது வரவும், |
|
5 |
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை |
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென |
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை |
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, |
|
10 |
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, |
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, |
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, |
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, |
|
15 |
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய |
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், |
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் |
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் |
|
20 |
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, |
|
நம்மொடு நன் மொழி நவிலும் |
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை, |
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர் |
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி, |
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட, |
|
5 |
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை |
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து, |
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது, |
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும், |
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம், |
|
10 |
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து, |
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர் |
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ |
|
வீ தேர் பறவை விழையும் |
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
தண் கயம் பயந்த வண் காற் குவளை |
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, |
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் |
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின், |
|
5 |
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் |
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை |
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், |
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, |
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, |
|
10 |
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, |
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் |
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், |
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, |
|
ஆடு கழை இரு வெதிர் நரலும் |
|
15 |
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! |
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, |
|
இமையக் கானம் நாறும் கூந்தல், |
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் |
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு, |
|
5 |
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் |
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த |
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, |
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை |
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, |
|
10 |
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, |
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் |
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, |
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் |
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, |
|
15 |
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், |
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், |
|
வேய் கண் உடைந்த சிமைய, |
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
மேல் |