முயல் |
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன |
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் |
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, |
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, |
|
5 |
இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் |
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, |
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், |
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி, |
|
10 |
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
காமர் புறவினதுவே காமம் |
|
நம்மினும் தான் தலைமயங்கிய |
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார் | |
உரை |
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, |
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் |
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த |
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், |
|
5 |
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், |
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, |
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; |
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? |
|
10 |
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
உரைமதி வாழியோ, வலவ!' என, தன் |
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, |
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; |
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
|
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
களவும் புளித்தன; விளவும் பழுநின; |
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், |
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, |
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து |
|
5 |
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, |
|
இளையர் அருந்த, பின்றை, நீயும் |
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர், |
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், |
|
10 |
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், |
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ |
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் |
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் |
|
15 |
மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார் | |
உரை |
மேல் |