அன்றில் |
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, |
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; |
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, |
|
5 |
பகலும் நம்வயின் அகலானாகிப் |
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், |
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, |
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, |
|
மல்லல் மூதூர் மறையினை சென்று, |
|
10 |
சொல்லின் எவனோ பாண! 'எல்லி |
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் |
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, |
|
கண் நிறை நீர் கொடு கரக்கும், |
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. |
|
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார் | |
உரை |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
பகலினும் அகலாதாகி, யாமம் |
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய, |
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு |
|
பனி மீக்கூரும் பைதல் பானாள், |
|
5 |
பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை, |
பருகுவன்ன காதலொடு திருகி, |
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து, |
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ; |
|
அருளிலாளர் பொருள்வயின் அகல, |
|
10 |
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து |
யான் எவன் உளெனோ தோழி! தானே |
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய், |
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய, |
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக் |
|
15 |
கனை எரி பிறப்ப ஊதும் |
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே? |
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
மேல் |