காக்கை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என |
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் |
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், |
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, |
|
5 |
ஐய ஆக வெய்ய உயிரா, |
இரவும் எல்லையும் படர் அட வருந்தி, |
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப, |
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய, |
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து, |
|
10 |
வருவர் வாழி, தோழி! பெரிய |
நிதியம் சொரிந்த நீவி போலப் |
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை, |
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் |
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி, |
|
15 |
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல, |
இல் வழிப் படூஉம் காக்கைக் |
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், |
|
நன்பகல் அமையமும் இரவும் போல, |
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, |
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் |
|
5 |
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, |
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! |
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும் |
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் |
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ, |
|
10 |
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை, |
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் |
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின் |
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின், |
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த, |
|
15 |
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை |
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச் |
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர், |
|
கோல் கழிபு இரங்கும் அதர, |
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் | |
உரை |
மேல் |