குயில் |
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய், |
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் |
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப் |
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர், |
|
5 |
வதுவை நாற்றம் புதுவது கஞல, |
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில் |
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும் |
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ, |
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண், |
|
10 |
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர் |
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன, |
|
இகழுநர் இகழா இள நாள் அமையம் |
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
15 |
வாராமையின் புலந்த நெஞ்சமொடு, |
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என, |
|
மெல்லிய இனிய கூறி, வல்லே |
|
வருவர் வாழி தோழி! பொருநர் |
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் |
|
20 |
பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன், |
இன் இசை இயத்தின் கறங்கும் |
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே. |
|
பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் | |
உரை |
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை |
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, |
|
5 |
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் |
கொலை வில் ஆடவர் போல, பலவுடன் |
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் |
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும், |
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
10 |
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு |
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி, |
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான் |
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின் |
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து, |
|
15 |
ஆழல்' என்றி தோழி! யாழ என் |
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து, |
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் |
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை, |
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி, |
|
20 |
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து |
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர், |
|
புகை புரை அம் மஞ்சு ஊர, |
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே? |
|
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் |
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, |
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, |
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி |
|
5 |
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் |
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், |
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி, |
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் |
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென, |
|
10 |
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்! |
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் |
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப, |
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி |
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி, |
|
15 |
இனையல் என்றி; தோழி! சினைய |
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் |
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து, |
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை, |
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம் |
|
20 |
இன் இளவேனிலும் வாரார், |
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர் அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் | |
உரை |
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
|
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
இன்னா கழியும் கங்குல்' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
|
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
|
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் | |
உரை |
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், |
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ, |
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல |
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய |
|
5 |
மென் முலை முற்றம் கடவாதோர்' என, |
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து |
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி |
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும் |
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை |
விளரி நரம்பின் நயவரு சீறியாழ் |
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு |
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் |
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை |
|
15 |
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி, |
கையறு நெஞ்சினள், அடைதரும் |
|
மை ஈர் ஓதி மாஅயோளே? |
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் | |
உரை |
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
|
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
|
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
15 |
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் |
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; |
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, |
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை |
|
5 |
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், |
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் |
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் |
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது |
|
10 |
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! |
|
'யாமே எமியம் ஆக, நீயே |
|
பொன் நயந்து அருள் இலையாகி, |
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
மேல் |