கூகை(குடிஞை, ஆந்தை) |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி |
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து |
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை, |
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் |
|
5 |
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம், |
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று, |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது, |
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே |
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின் |
|
10 |
சேயிதழ் அனைய ஆகி, குவளை |
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை, |
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி, |
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல் |
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென, |
|
15 |
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை |
பூ வீ கொடியின் புல்லெனப் போகி, |
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக, |
|
இயங்காது வதிந்த நம் காதலி |
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே! |
|
நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. - பொருந்தில் இளங்கீரனார் | |
உரை |
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
|
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
|
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர் |
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
|
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
|
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, |
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், |
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி |
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, |
|
5 |
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் |
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் |
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும், |
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு |
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம் |
|
10 |
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி, |
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க, |
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென, |
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து, |
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன |
|
15 |
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப, |
இனிய ஆகுக தணிந்தே |
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே. |
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
மேல் |