கொக்கு |
நெடு வேள் மார்பின் ஆரம் போல, |
|
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் |
|
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, |
|
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் |
|
5 |
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு |
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே |
|
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் |
|
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது, |
|
அழல் தொடங்கினளே பெரும! அதனால் |
|
10 |
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி |
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ, |
|
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது, |
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ |
|
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை |
|
15 |
அன்றில் அகவும் ஆங்கண், |
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே? |
|
தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
|
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
|
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
|
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
நகை நன்று அம்ம தானே இறை மிசை |
|
மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன |
|
கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல், |
|
வெள்ளி வெண் தோடு அன்ன, கயல் குறித்து, |
|
5 |
கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் |
காஞ்சி அம் குறுந் தறி குத்தி, தீம் சுவை |
|
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து, |
|
பெருஞ் செய் நெல்லின் பாசு அவல் பொத்தி, |
|
வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடுஞ் சிறை |
|
10 |
மீது அழி கடு நீர் நோக்கி, பைப்பயப் |
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர! |
|
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் |
|
பண் அமை நல் யாழ்ப் பாணனொடு, விசி பிணி, |
|
மண் ஆர், முழவின் கண் அதிர்ந்து இயம்ப, |
|
15 |
மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி, |
எம் மனை வாராயாகி, முன் நாள், |
|
நும் மனைச் சேர்ந்த ஞான்றை, அம் மனைக் |
|
குறுந் தொடி மடந்தை உவந்தனள் நெடுந் தேர், |
|
இழை அணி யானைப் பழையன் மாறன், |
|
20 |
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண், |
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த |
|
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய், |
|
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி, |
|
ஏதில் மன்னர் ஊர் கொள, |
|
25 |
கோதை மார்பன் உவகையின் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - நக்கீரர் | |
உரை |
மேல் |