சேவல் கோழி |
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், |
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் |
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, |
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, |
|
5 |
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் |
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, |
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் |
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, |
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, |
|
10 |
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், |
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற |
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் |
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, |
|
15 |
தாழ் இருங் கூந்தல் நம் காதலி |
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
மேல் |