பூழ் |
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, |
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு |
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் |
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, |
|
5 |
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, |
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் |
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், |
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, |
|
10 |
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
மன்று நிறை பைதல் கூர, பல உடன் |
|
கறவை தந்த கடுங் கால் மறவர் |
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ |
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை |
|
15 |
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், |
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் |
|
சேக் கோள் அறையும் தண்ணுமை |
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் | |
உரை |
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த |
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், |
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, |
|
காமர் சேவல் ஏமம் சேப்ப; |
|
5 |
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது |
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, |
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி, |
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை, |
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் |
|
10 |
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் |
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என, |
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக |
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு |
|
தானே சென்ற நலனும் |
|
15 |
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே? |
தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.- காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் | |
உரை |
மேல் |