மயில்(தோகை, மஞ்ஞை) |
எம் வெங் காமம் இயைவது ஆயின், |
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர் |
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த |
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித் |
|
5 |
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன, |
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின் |
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர், |
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல |
|
தோழிமாரும் யானும் புலம்ப, |
|
10 |
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் |
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச் |
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி, |
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் |
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க, |
|
15 |
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி, |
வன் கை எண்கின் வய நிரை பரக்கும் |
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு |
|
குன்ற வேயின் திரண்ட என் |
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே! |
|
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, |
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு |
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் |
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, |
|
5 |
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி |
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, |
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் |
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண், |
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி, |
|
10 |
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, |
மன்று நிறை பைதல் கூர, பல உடன் |
|
கறவை தந்த கடுங் கால் மறவர் |
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ |
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை |
|
15 |
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை |
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள், |
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண் |
|
சேக் கோள் அறையும் தண்ணுமை |
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. |
|
தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.- கருவூர்க் கண்ணம்புல்லனார் | |
உரை |
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் |
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல |
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி, |
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் |
|
5 |
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் |
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் |
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய் |
|
கான மட மரைக் கணநிரை கவரும் |
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று, |
|
10 |
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் |
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த |
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம் |
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல் |
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம் |
|
15 |
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் |
அம்புடைக் கையர் அரண் பல நூறி, |
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் |
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் |
|
தலை நாள் அலரின் நாறும் நின் |
|
20 |
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. |
'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் | |
உரை |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் | |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
உரை |
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், |
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், |
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் |
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து, |
|
5 |
ஆழல் வாழி, தோழி! 'சாரல், |
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, |
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை |
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும் |
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை, |
|
10 |
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை |
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை |
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து, |
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார், |
|
வருதும், யாம்' எனத் தேற்றிய |
|
15 |
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. |
தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ, |
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள், |
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப, |
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள், |
|
5 |
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, |
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என |
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச் |
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து |
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே; |
|
10 |
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் |
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான் |
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர |
|
மன்ற மராஅத்த கூகை குழறினும், |
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப் |
|
15 |
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு, |
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல் |
|
எந்தையும் இல்லன் ஆக, |
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச் சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, | |
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் |
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, |
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், |
|
5 |
வித்திய மருங்கின் விதை பல நாறி, |
இரலை நல் மானினம் பரந்தவைபோல், |
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர், |
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, |
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின் |
|
10 |
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, |
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை |
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக் |
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த |
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, |
|
15 |
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் |
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி, |
|
விரிஉளை, நல் மான் கடைஇ |
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. |
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது. -இடைக்காடனார் | |
உரை |
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
|
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
|
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
|
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
அம்ம வாழி, தோழி! பல் நாள் |
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் |
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை |
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் |
|
5 |
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, |
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் |
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, |
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் |
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் |
|
10 |
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார் |
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ, |
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் |
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற |
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை |
|
15 |
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த |
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து, |
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி, |
|
உழை மான் இன நிரை ஓடும் |
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நக்கீரனார் | |
உரை |
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் |
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, |
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் |
|
5 |
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் |
|
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, |
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, |
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே |
|
10 |
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் |
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், |
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, |
|
15 |
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
அவலம் அன்றுமன், எமக்கே; அயல |
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த |
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை |
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் |
|
20 |
திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
|
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர் | |
உரை |
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் |
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் |
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு |
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, |
|
5 |
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க, |
தனியன் வந்து, பனி அலை முனியான், |
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற |
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி |
|
அசையா நாற்றம் அசை வளி பகர, |
|
10 |
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக் |
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும், |
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு, |
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி, |
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய், |
|
15 |
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ! |
என் ஆவது கொல்தானே பொன் என |
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய |
|
மணி நிற மஞ்ஞை அகவும் |
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே? |
|
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், |
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய |
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, |
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, |
|
5 |
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை |
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் |
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை |
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர் |
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு |
|
10 |
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து, |
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த |
|
அறை இறந்து, அவரோ சென்றனர் |
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய |
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, |
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! |
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு |
|
5 |
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, |
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, |
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் |
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, |
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் |
|
10 |
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, |
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் |
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, |
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, |
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, |
|
15 |
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் |
பொலிவன அமர்த்த உண்கண், |
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் கூத்தனார் | |
உரை |
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, |
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் |
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், |
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் |
|
5 |
கை மாண் தோணி கடுப்ப, பையென, |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் |
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே, |
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, |
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி |
|
10 |
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய |
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின், |
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை |
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர் |
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி, |
|
5 |
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக் |
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை |
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய், |
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு, |
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி, |
|
10 |
அன்னை வினவினள்ஆயின், அன்னோ! |
என் என உரைக்கோ யானே துன்னிய |
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி, |
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த |
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும் |
|
15 |
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே? |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை: |
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு, |
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க் |
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல் |
|
5 |
சேயிழை மகளிர் ஆயமும் அயரா; |
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக் |
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப் |
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர, |
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன், |
|
10 |
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்! |
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு, |
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக் |
|
கடல்அம் தானை கை வண் சோழர், |
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன, |
|
15 |
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து, |
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல் |
|
ஓமை நீடிய உலவை நீள் இடை, |
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல், |
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின் |
|
20 |
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த |
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி, |
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர் |
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை |
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் |
|
25 |
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ, |
மேயினள்கொல்?' என நோவல் யானே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், |
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, |
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை |
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, |
|
5 |
காமர் பீலி ஆய் மயில் தோகை |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் |
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல |
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி, |
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, |
|
10 |
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், |
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும், |
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் |
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு |
|
15 |
குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, |
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! |
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் |
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு |
|
20 |
அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் |
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, |
|
பாடு இன் அருவி சூடி, |
|
வான் தோய் சிமையம் தோன்றலானே. |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார் | |
உரை |
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல் |
|
என் ஓரன்ன தாயரும், காண, |
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர் |
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன |
|
5 |
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, |
நல் மாண் விழவில் தகரம் மண்ணி, |
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு |
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன், |
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் |
|
10 |
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, |
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை |
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல் |
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும், |
|
15 |
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, |
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் |
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ, |
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார் | |
உரை |
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, |
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை |
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, |
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, |
|
5 |
பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
தாது செய் பாவை அன்ன தையல், |
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் |
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என |
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் |
|
10 |
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் |
|
கண மழை பொழிந்த கான் படி இரவில், |
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, |
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த |
|
15 |
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
மறப் புலி உரற, வாரணம் கதற, |
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, |
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் |
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, |
|
20 |
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் |
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, |
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை |
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் |
|
25 |
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் |
|
கான் அமர் நன்னன் போல, |
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார் | |
உரை |
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, |
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, |
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் |
|
5 |
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, |
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை |
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, |
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் |
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, |
|
10 |
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் |
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, |
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, |
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, |
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, |
|
15 |
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், |
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், |
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் |
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி |
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், |
|
20 |
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் |
நீடலர் வாழி, தோழி! தோடு கொள் |
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, |
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி, |
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் |
|
25 |
வேனில் அதிரல் வேய்ந்த நின் |
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார் | |
உரை |
மேல் |