வண்டு(சுரும்பு, மிஞிறு, தும்பி, சிள்வீடு, தாதுண்பறவை, ஞிமிறு, குறுஞ்சிறைப்பறவை) |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
|
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
உரை |
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் |
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் |
|
இது என அறியா மறுவரற் பொழுதில், |
|
5 |
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, |
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, |
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, |
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, |
|
10 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், |
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த |
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி, |
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் |
|
15 |
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை |
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, |
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, |
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த |
|
20 |
நோய் தணி காதலர் வர, ஈண்டு |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார். | |
உரை |
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன், |
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன், |
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல் |
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி, |
|
5 |
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன். |
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத் |
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று |
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன் |
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி, |
|
10 |
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் |
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை |
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல் |
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி |
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து; |
|
15 |
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு |
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக் |
|
கூஉம் கணஃது எம் ஊர்' என |
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே. |
|
தோழி தலைமகன் குறை கூறியது; பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் | |
உரை |
கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப, |
|
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப, |
|
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி |
|
குவை இரும் புன்னைக் குடம்பை சேர, |
|
5 |
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை, |
தாழை தளரத் தூக்கி, மாலை |
|
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் |
|
காமர் நெஞ்சம் கையறுபு இனைய, |
|
துயரம் செய்து நம் அருளார் ஆயினும் |
|
10 |
அறாஅலியரோ அவருடைக் கேண்மை! |
அளி இன்மையின் அவண் உறை முனைஇ, |
|
வாரற்கதில்ல தோழி! கழனி |
|
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் |
|
தண்ணுமை வெரீஇய தடந் தாள் நாரை |
|
15 |
செறி மடை வயிரின் பிளிற்றி, பெண்ணை |
அகமடல் சேக்கும் துறைவன் |
|
இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே! |
|
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி தோழிக்குச் சொல்லியது.- குன்றியனார் | |
உரை |
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் |
|
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து, |
|
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி, |
|
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய |
|
5 |
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை |
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர! |
|
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று, |
|
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல், |
|
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து, |
|
10 |
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம் |
கூறேம். வாழியர், எந்தை! செறுநர் |
|
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும் |
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் |
|
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் |
|
15 |
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; |
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ? |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார் | |
உரை |
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் |
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும் |
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது |
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை, |
|
5 |
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் |
மரம் செல மிதித்த மாஅல் போல, |
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை, |
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள் |
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி! |
|
10 |
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல், |
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து, |
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை, |
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த |
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம் |
|
15 |
தாம் பாராட்டிய காலையும் உள்ளார் |
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு |
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப் |
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் |
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் |
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம் |
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, |
|
5 |
மை இல் மான் இனம் மருள, பையென |
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, |
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு |
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன, |
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை, |
|
10 |
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக, |
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் |
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது, |
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து |
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி, |
|
15 |
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து, |
இது கொல் வாழி, தோழி! என் உயிர் |
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத் |
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே? |
|
பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது - அந்தியிளங்கீரனார் | |
உரை |
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, |
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, |
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, |
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய் |
|
5 |
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப, |
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ |
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய், |
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில், |
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை |
|
10 |
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின் நினைந்து |
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ, |
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என, |
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் |
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல் |
|
15 |
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற் |
கல்லாக் கோவலர் ஊதும் |
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே! |
|
தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார் | |
உரை |
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, |
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், |
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து, |
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் |
|
5 |
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ, |
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல், |
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில், |
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள் |
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென |
|
10 |
வாடை தூக்கும் வருபனி அற்சிரம், |
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர் |
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என, |
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும், |
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட! |
|
15 |
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை |
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று |
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர் கொண்டு, |
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி, |
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது, |
|
20 |
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி, |
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய, |
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி |
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த |
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே? |
|
களவுக் காலத்துப் பிரிந்து வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை நக்கீரனார் | |
உரை |
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் |
|
கோடை அவ் வளி குழலிசை ஆக, |
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை |
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக, |
|
5 |
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, |
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, |
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து, |
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க, |
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில் |
|
10 |
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் |
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து, |
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய், |
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை, |
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர் |
|
15 |
பலர்தில், வாழி தோழி! அவருள், |
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி, |
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல், |
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே? |
|
தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. - கபிலர் | |
உரை |
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், |
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, |
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல், |
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய |
|
5 |
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், |
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து |
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் |
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய, |
|
களரி பரந்த கல் நெடு மருங்கின், |
|
10 |
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
|
மை படு திண் தோள் மலிர வாட்டி, |
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய |
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த |
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து, |
|
15 |
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர், |
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் |
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது, |
|
மெல்லென் சேவடி மெலிய ஏக |
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து |
|
20 |
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள், |
இடு மணற் பந்தருள் இயலும், |
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரைக்காஞ்சிப் புலவர் | |
உரை |
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் |
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; |
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு |
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, |
|
5 |
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி |
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட; |
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது, |
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென |
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்; |
|
10 |
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப, |
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன், |
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென |
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து, |
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து, |
|
15 |
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி! |
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன் |
|
நல்காமையின் அம்பல் ஆகி, |
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் |
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே? |
|
இரவுக்குறிக்கண் சிறைப்புறமாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன் | |
உரை |
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து |
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் |
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன் |
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் |
|
5 |
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், |
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல |
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன |
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, |
|
10 |
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் |
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் |
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை |
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய! |
|
15 |
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
ஆய் தொடி அரிவை கூந்தற் |
|
போது குரல் அணிய வேய்தந்தோயே! |
|
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு |
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் |
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப் |
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி |
|
5 |
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, |
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் |
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி, |
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல், |
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும் |
|
10 |
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் |
அருளான் வாழி, தோழி! அல்கல் |
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின் |
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல், |
|
காயா மென் சினை தோய நீடிப் |
|
15 |
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் |
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி |
|
கை ஆடு வட்டின் தோன்றும் |
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, |
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து |
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும் |
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு |
|
5 |
இன்றே புகுதல் வாய்வது; நன்றே. |
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் |
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, |
|
பாசறை வருத்தம் வீட, நீயும் |
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, |
|
10 |
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, |
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை |
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, |
|
காலை எய்த, கடவுமதி மாலை |
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை |
|
15 |
அரமிய வியலகத்து இயம்பும் |
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; |
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே |
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம் |
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. |
|
5 |
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி |
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் |
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, |
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் |
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி, |
|
10 |
கான நாடன் வரூஉம், யானைக் |
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, |
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு, |
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், |
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் |
|
15 |
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? |
இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர் | |
உரை |
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று |
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ |
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை |
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, |
|
5 |
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை |
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் |
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, |
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் |
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் |
|
10 |
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் |
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை |
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் |
|
போது புறங்கொடுத்த உண்கண் |
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. |
|
கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார் | |
உரை |
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் |
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, |
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் |
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை |
|
5 |
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என |
வீளை அம்பின் விழுத் தொடை மழவர் |
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து |
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் |
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் |
|
10 |
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் |
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு |
|
வருக' என்னுதிஆயின், |
|
15 |
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. |
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
|
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
|
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
|
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
|
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
|
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
|
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
|
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் |
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை |
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி |
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின், |
|
5 |
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர் |
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி, |
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென |
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர், |
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி, |
|
10 |
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும் |
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி |
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி! |
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை |
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது |
|
15 |
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் |
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் |
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி, |
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில் |
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும், |
|
20 |
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின் |
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க் கவுதமன் சாதேவனார் | |
உரை |
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி |
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் |
|
அடி அமை பகழி ஆர வாங்கி; |
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, |
|
5 |
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி |
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் |
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து |
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் |
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு |
|
10 |
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல், |
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள் |
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த |
|
நல் வரல் இள முலை நனைய; |
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ. |
|
பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப் புல்லங்கண்ணனார் | |
உரை |
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு |
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, |
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் |
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; |
|
5 |
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் |
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. |
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். |
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, |
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு |
|
10 |
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் |
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் |
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், |
|
கந்து கால் ஒசிக்கும் யானை, |
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! |
|
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் | |
உரை |
'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி |
|
பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், |
|
மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் |
|
பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், |
|
5 |
நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, |
பொறி வரி இன வண்டு ஊதல கழியும் |
|
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், |
|
புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் |
|
அனையேன்ஆயின், அணங்குக, என்!' என |
|
10 |
மனையோட் தேற்றும் மகிழ்நன்ஆயின், |
யார்கொல் வாழி, தோழி! நெருநல் |
|
தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, |
|
புதுவது வந்த காவிரிக் |
|
15 |
கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? |
பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - இடையன் நெடுங்கீரனார் | |
உரை |
கானலும் கழறாது; கழியும் கூறாது; |
|
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; |
|
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; |
|
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் |
|
5 |
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, |
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, |
|
பறைஇ தளரும் துறைவனை, நீயே, |
|
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் |
|
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் |
|
10 |
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு |
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் |
|
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, |
|
'நின் உறு விழுமம் களைந்தோள் |
|
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. |
|
தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் | |
உரை |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத் |
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும், |
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார் |
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும் |
|
5 |
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று |
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர் பருகி, |
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு, |
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி, |
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி, |
|
10 |
காலை வந்தன்றால் காரே மாலைக் |
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி |
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் |
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற, |
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு |
|
15 |
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர் திறத்தே? |
தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க் கலிங்கத்தார் | |
உரை |
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய |
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின் |
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும் |
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்! |
|
5 |
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு |
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட, |
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் |
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் |
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை |
|
10 |
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி, |
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை |
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண், |
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர், |
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க, |
|
15 |
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் |
செக்கர் வானம் சென்ற பொழுதில், |
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் |
|
தார் மணி பல உடன் இயம்ப |
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே. |
|
தலைமகன் வினைவயிற் பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ |
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, |
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, |
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் |
|
5 |
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி, |
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் |
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் |
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, |
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு |
|
10 |
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, |
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, |
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், |
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை |
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, |
|
15 |
அறல் என விரிந்த உறல் இன் சாயல் |
ஒலி இருங் கூந்தல் தேறும்' என, |
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார் | |
உரை |
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
|
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
|
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
|
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, |
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி |
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் |
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே |
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், | |
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி |
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப, |
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து, |
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர் |
|
10 |
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை |
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் |
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் |
|
தண்டலை கமழும் கூந்தல், |
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே. |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் | |
உரை |
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் |
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் |
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் |
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் |
|
5 |
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் |
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், |
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை, |
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள, |
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல் |
|
10 |
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல் |
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை, |
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து, |
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ |
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் |
|
15 |
கூழை உளர்ந்து மோழைமை கூறவும், |
மறுத்த சொல்லள் ஆகி, |
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் |
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு |
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, |
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, |
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, |
|
5 |
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, |
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், |
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், |
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, |
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும், |
|
10 |
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, |
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் |
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய், |
|
வர எளிதாக எண்ணுதி; அதனால், |
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் |
|
15 |
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் |
அடைய முயங்கேம்ஆயின், யாமும் |
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே |
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய் |
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! |
|
20 |
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, |
ஒண் பூ வேங்கை கமழும் |
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. - கபிலர் | |
உரை |
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் |
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி! |
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் |
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, |
|
5 |
ஊன் இல் யானை உயங்கும் வேனில், |
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், |
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை |
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் |
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் |
|
10 |
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, |
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த |
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி |
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, |
|
பொருள்வயின் நீடலோஇலர் நின் |
|
15 |
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. |
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
அன்பும், மடனும், சாயலும், இயல்பும், |
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், |
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, |
|
இன்றே இவணம் ஆகி, நாளை, |
|
5 |
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற |
அகலா அம் துளை, கோடை முகத்தலின், |
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் |
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும், |
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து, |
|
10 |
யாத்த தூணித் தலை திறந்தவைபோல், |
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் |
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர, |
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் |
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை |
|
15 |
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், |
செறி தொடி முன்கை, நம் காதலி |
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே? |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார் | |
உரை |
'செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு |
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், |
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, |
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர் |
|
5 |
கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், |
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் |
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, |
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை |
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக |
|
10 |
வருவர் வாழி, தோழி! பொருவர் |
செல் சமம் கடந்த செல்லா நல் இசை, |
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் |
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் |
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித் |
|
15 |
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் | |
உரை |
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, |
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், |
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் |
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, |
|
5 |
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய |
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, |
|
கால் என மருள, ஏறி, நூல் இயல் |
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் |
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! |
|
10 |
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை |
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, |
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி |
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, |
|
எல்லை போகிய புல்லென் மாலை, |
|
15 |
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், |
கழி படர் உழந்த பனி வார் உண்கண் |
|
நல் நிறம் பரந்த பசலையள் |
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. |
|
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் |
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது |
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு |
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, |
|
5 |
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல் வியன் புனம், |
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன் |
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ் |
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு |
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ, |
|
10 |
அறியா வேலற் தரீஇ, அன்னை |
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி, |
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம், |
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை |
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத் தோள், |
|
15 |
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய, |
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ் |
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி! |
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் |
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச் |
|
20 |
சாந்த மென் சினை தீண்டி, மேலது |
பிரசம் தூங்கும் சேண் சிமை |
|
வரையக வெற்பன் மணந்த மார்பே! |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பேரிசாத்தனார் | |
உரை |
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன |
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி, |
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை |
|
5 |
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை |
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு |
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன் |
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, |
|
10 |
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் |
பாணன் வந்தனன், தூதே; நீயும் |
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, |
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ! |
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார் | |
உரை |
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் |
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என |
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் |
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, |
|
5 |
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், |
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை |
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற, |
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை, |
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில், |
|
10 |
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள் |
கான யானை வெண் கோடு சுட்டி, |
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் |
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற, |
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து |
|
15 |
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக் |
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண், |
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் |
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி, |
|
20 |
அம் மா அரிவை ஒழிய, |
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் |
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை |
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, |
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, |
|
5 |
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, |
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், |
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் |
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு |
|
10 |
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, |
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு |
|
துறையும் துஞ்சாது, கங்குலானே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, |
|
வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் |
|
கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, |
|
திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, |
|
5 |
கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, |
செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் |
|
எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, |
|
கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் |
|
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, |
|
10 |
எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, |
யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, |
|
முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் |
|
கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், |
|
நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த |
|
15 |
அன்பிலாளன் அறிவு நயந்தேனே. |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு,தலைமகள் சொல்லியது. - மோசிக் கரையனார் | |
உரை |
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
|
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
|
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! |
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! |
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது, |
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய |
|
5 |
தறுகணாளர் நல் இசை நிறுமார், |
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், |
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல் |
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி, |
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய |
|
10 |
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் |
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி |
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால் |
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம் இறந்தோர், |
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், |
|
15 |
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் |
நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வர, |
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து |
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப, |
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ, |
|
20 |
திரு நுதல் மகளிர் குரவை அயரும் |
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை, |
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின் |
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த |
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின் |
|
25 |
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப் |
|
பகல் அழி தோற்றம் போல, பையென |
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், |
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, |
|
5 |
கடையல்அம் குரல வாள் வரி உழுவை |
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, |
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர், |
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும் |
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை, |
|
10 |
பொத்துடை மரத்த புகர் படு நீழல், |
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும், |
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின் |
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய் |
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர் |
|
15 |
மனை உறை கோழி மறனுடைச் சேவல் |
போர் புரி எருத்தம் போலக் கஞலிய |
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி, |
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் |
|
வந்தன்று அம்ம, தானே; |
|
20 |
வாரார் தோழி! நம் காதலோரே. |
தலைமகன் பிரிவின்கண் தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி யது. - கருவூர் நன்மார்பன் | |
உரை |
குடுமிக் கொக்கின் பைங் காற் பேடை, |
|
இருஞ் சேற்று அள்ளல் நாட் புலம் போகிய |
|
கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர், |
|
நுண் ஞாண் அவ் வலைச் சேவல் பட்டென, |
|
5 |
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது, |
பைதல் பிள்ளை தழீஇ, ஒய்யென, |
|
அம் கண் பெண்ணை அன்புற நரலும் |
|
சிறு பல் தொல் குடிப் பெரு நீர்ச் சேர்ப்பன், |
|
கழி சேர் புன்னை அழி பூங் கானல், |
|
10 |
தணவா நெஞ்சமொடு தமியன் வந்து, நம் |
மணவா முன்னும் எவனோ தோழி! |
|
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் |
|
தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, |
|
சுரும்பு உண மலர்ந்த பெருந் தண் நெய்தல் |
|
15 |
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ, |
பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே? |
|
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்,தலைமகள் சொல்லியது. - நக்கீரர் | |
உரை |
வானம் பெயல் வளம் கரப்ப, கானம் |
|
உலறி இலை இலவாக, பல உடன் |
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப, |
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் |
|
5 |
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் |
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு |
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல், |
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் |
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை |
|
10 |
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் |
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப, |
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர |
|
உவலை சூடிய தலையர், கவலை |
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும் |
|
15 |
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர |
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் |
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று, |
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி, |
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி, |
|
20 |
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் |
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு |
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப் |
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல், |
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி |
|
25 |
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. |
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ | |
உரை |
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு |
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி, |
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட, |
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை |
|
5 |
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் |
தண் துளி அசைவளி தைவரும் நாட! |
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது, |
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது, |
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை |
|
10 |
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், |
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி, |
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ, |
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண் |
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே |
|
15 |
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை |
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும் |
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள், |
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன், |
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு, |
|
20 |
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் |
நீடலர் ஆகி வருவர், வல்லென; |
|
கங்குல் உயவுத் துணை ஆகிய |
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே! |
|
இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் | |
உரை |
சிலம்பில் போகிய செம் முக வாழை |
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும், |
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் |
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும், |
|
5 |
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும், |
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் |
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் |
|
அரிய போலும் காதல் அம் தோழி! |
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத |
|
10 |
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல், |
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என, |
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச் |
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள முலை, |
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு, |
|
15 |
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே. |
பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் | |
உரை |
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை, |
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல், |
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு |
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று, |
|
5 |
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை, |
செய்து விட்டன்ன செந் நில மருங்கில், |
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை, |
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு, |
|
10 |
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய, |
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ, |
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல் |
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக் |
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன் |
|
15 |
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப, |
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை, |
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை |
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும் |
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என, |
|
20 |
நம் நோய் தன்வயின் அறியாள், |
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார் | |
உரை |
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, |
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, |
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, |
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று |
|
5 |
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் |
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் |
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப, |
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி |
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல, |
|
10 |
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து |
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப, |
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி |
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும் |
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில், |
|
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் | |
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப |
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை |
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி, |
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு |
|
20 |
உள்ளிய மருங்கின் உள்ளம் போல, |
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து |
|
என்னுழியதுகொல் தானே பல் நாள் |
|
அன்னையும் அறிவுற அணங்கி, |
|
நல் நுதல் பாஅய பசலை நோயே? |
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார் | |
உரை |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
|
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
|
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
|
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
முளை வளர் முதல மூங்கில் முருக்கி, |
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, |
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, |
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் |
|
5 |
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, |
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, |
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் |
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, |
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் |
|
10 |
நின் புரை தக்க சாயலன் என, நீ |
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் |
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு |
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் |
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும், |
|
15 |
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர் | |
உரை |
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் |
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் |
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் |
|
யானும் அறிவென்மன்னே; யானை தன் |
|
5 |
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, |
இன்னா வேனில் இன் துணை ஆர, |
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, |
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் |
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார் |
|
10 |
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் |
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, |
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், |
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த |
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் |
|
15 |
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, |
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, |
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், |
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ |
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய, |
|
20 |
முத்தின் அன்ன வெள் வீ தாஅய், |
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி |
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் |
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் |
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று |
|
25 |
அமிழ்தம் ஊறும் செவ் வாய், |
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! |
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார் | |
உரை |
என் ஆவதுகொல் தானே முன்றில், |
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து, |
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி, |
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ, |
|
5 |
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல் |
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல் |
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் |
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர், |
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி, |
|
10 |
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி, |
'யானை வவ்வின தினை' என, நோனாது, |
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் |
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே? |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது. -மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் | |
உரை |
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும் |
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்; |
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை, |
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை |
|
5 |
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்; |
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர், |
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர் |
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில் |
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது |
|
10 |
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் |
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி! |
|
'யாமே எமியம் ஆக, நீயே |
|
பொன் நயந்து அருள் இலையாகி, |
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே. |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார் | |
உரை |
பல் பூந் தண் பொழில், பகல் உடன் கழிப்பி, |
|
ஒரு கால் ஊர்திப் பருதி அம் செல்வன் |
|
குடவயின் மா மலை மறைய, கொடுங் கழித் |
|
தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் |
|
5 |
நுண் தாது உண்டு வண்டினம் துறப்ப, |
வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து |
|
உரு உடன் இயைந்த தோற்றம் போல, |
|
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ, |
|
வந்த மாலை பெயரின், மற்று இவள் |
|
10 |
பெரும் புலம்பினளே தெய்ய; அதனால், |
பாணி பிழையா மாண் வினைக் கலி மா |
|
துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி, |
|
நெடுந் தேர் அகல நீக்கி, பையெனக் |
|
குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி, |
|
15 |
இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப! |
இன மீன் அருந்து நாரையொடு பனைமிசை |
|
அன்றில் சேக்கும் முன்றில், பொன் என |
|
நல் மலர் நறு வீ தாஅம் |
|
புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே. |
|
பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்தது. - மதுரைக் கண்ணத்தனார் | |
உரை |
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம், |
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து, |
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும் |
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக |
|
5 |
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய |
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை, |
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன் |
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக் |
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில், |
|
10 |
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் |
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி, |
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள் |
|
கழியாமையே வழிவழிப் பெருகி, |
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல் |
|
15 |
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர், |
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர் |
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும் |
|
உள்ளி விழவின் அன்ன, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே? |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார் | |
உரை |
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ, |
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று; |
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல், |
|
பகலே எம்மொடு ஆடி, இரவே, |
|
5 |
காயல் வேய்ந்த தேயா நல் இல் |
நோயொடு வைகுதிஆயின், நுந்தை |
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ |
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே, |
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல் |
|
10 |
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல் |
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி, |
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு, |
|
நீயே கானல் ஒழிய, யானே |
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து, |
|
15 |
ஆடு மகள் போலப் பெயர்தல் |
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே! |
|
பகலே சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. -அம்மூவனார் | |
உரை |
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, |
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ, |
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, |
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! |
|
5 |
நினையினைஆயின், எனவ கேண்மதி! |
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, |
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி, |
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல் |
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால், |
|
10 |
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி, |
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி |
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப, |
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு, |
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி, |
|
15 |
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின் |
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின் |
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி, |
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு |
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு, |
|
20 |
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல், |
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள் |
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர, |
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று, |
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் |
|
25 |
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த |
நிரம்பா நீள் இடைத் தூங்கி, |
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
உரை |
அம்ம வாழி, தோழி நம் மலை |
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின், |
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத |
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல் |
|
5 |
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, |
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ |
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து, |
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி |
|
இன் இசை ஓரா இருந்தனமாக, |
|
10 |
'மை ஈர் ஓதி மட நல்லீரே! |
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து, |
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் |
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என, |
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட, |
|
15 |
சொல்லிக் கழிந்த வல் விற் காளை |
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து, |
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள், |
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என, |
|
அன்னை தந்த முது வாய் வேலன், |
|
20 |
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; |
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின், |
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின |
|
மையல் வேழ மெய் உளம்போக, |
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு |
|
25 |
காட்டு மான் அடி வழி ஒற்றி, |
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே? |
|
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார் | |
உரை |
மேல் |