67. பாலை |
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி |
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது |
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், |
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, |
|
5 |
அரம் போழ் நுதிய வாளி அம்பின், |
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், |
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி, |
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர் |
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் |
|
10 |
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் |
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் |
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர் |
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன |
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை, |
|
15 |
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு |
நிலம் படு மின்மினி போல, பல உடன் |
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம் |
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! |
|
பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நோய்பாடியார் | |
உரை |
மேல் |