246. மருதம் |
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை |
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, |
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் |
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! |
|
5 |
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு |
|
ஆடினை என்ப, நெருநை; அலரே |
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் |
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், |
|
10 |
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, |
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, |
|
மொய் வலி அறுத்த ஞான்றை, |
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
|
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மேல் |