வரால் |
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் |
|
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, |
|
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் |
|
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, |
|
5 |
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, |
|
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, |
|
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! |
|
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, |
|
10 |
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு |
|
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, |
|
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் |
|
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, |
|
15 |
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, |
|
நார் அரி நறவின் எருமையூரன், |
|
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் |
|
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று |
|
20 |
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, |
|
கொன்று, களம்வேட்ட ஞான்றை, |
|
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
|
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர் | |
உரை |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, |
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் |
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, |
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி |
|
5 |
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, |
|
விடியல் வைகறை இடூஉம் ஊர! |
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை |
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, |
|
10 |
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை |
|
அன்னிமிஞிலியின் இயலும் |
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர் | |
உரை |
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் |
|
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், |
|
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, |
|
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் |
|
5 |
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் |
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப் |
|
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; |
|
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், |
|
கழனி உழவர் குற்ற குவளையும், |
|
10 |
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, |
பல் இளங் கோசர் கண்ணி அயரும், |
|
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் |
|
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் |
|
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய |
|
15 |
பெருங் களிற்று எவ்வம் போல, |
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. |
|
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார் | |
உரை |
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, |
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; |
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, |
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, |
|
5 |
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த |
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் |
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! |
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும், |
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு, |
|
10 |
அறனும் பொருளும் வழாமை நாடி, |
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன் |
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்; |
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால், |
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை, |
|
15 |
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன |
பொய்யொடு மிடைந்தவை தோன்றின், |
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே? |
|
'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார் | |
உரை |
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, |
|
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு |
|
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, |
|
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, |
|
5 |
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து, |
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப் |
|
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் |
|
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள், |
|
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர, |
|
10 |
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ |
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை! |
|
அது புலந்து உறைதல் வல்லியோரே, |
|
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து, |
|
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி, |
|
15 |
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப, |
வைகுநர் ஆகுதல் அறிந்தும், |
|
அறியார் அம்ம, அஃது உடலுமோரே! |
|
தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார் | |
உரை |
மேல் |