வாளை |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
நின் வாய் செத்து நீ பல உள்ளி, |
|
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், |
|
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் |
|
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் |
|
5 |
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று |
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, |
|
மால் இருள் நடுநாட் போகி, தன் ஐயர் |
|
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, |
|
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், |
|
10 |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் |
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், |
|
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் |
|
பயம் கெழு வைப்பிற் பல் வேல் எவ்வி |
|
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், |
|
15 |
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகி, |
திதியனொடு பொருத அன்னி போல |
|
விளிகுவைகொல்லோ, நீயே கிளி எனச் |
|
சிறிய மிழற்றும் செவ் வாய், பெரிய |
|
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் |
|
20 |
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், |
மின் நேர் மருங்குல், குறுமகள் |
|
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர் | |
உரை |
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
|
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
|
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
|
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் | |
உரை |
குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் |
|
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, |
|
நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் |
|
5 |
வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், |
தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் |
|
நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் |
|
மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் |
|
காஞ்சி நீழல் குரவை அயரும் |
|
10 |
தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் |
தேர் தர வந்த நேர் இழை மகளிர் |
|
ஏசுப என்ப, என் நலனே; அதுவே |
|
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் |
|
கொல் களிற்று யானை நல்கல்மாறே; |
|
15 |
தாமும் பிறரும் உளர்போல் சேறல் |
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், |
|
யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் |
|
சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, |
|
என்னொடு திரியானாயின், வென் வேல் |
|
20 |
மாரி அம்பின் மழைத் தோற் சோழர் |
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, |
|
ஆரியர் படையின் உடைக, என் |
|
நேர் இறை முன்கை வீங்கிய வளையே! |
|
நயப் புப்பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - பாவைக் கொட்டிலார் | |
உரை |
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து |
|
வாளை நாள் இரை தேரும் ஊர! |
|
நாணினென், பெரும! யானே பாணன் |
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி, |
|
5 |
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த |
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் |
|
கணையன் நாணியாங்கு மறையினள் |
|
மெல்ல வந்து, நல்ல கூறி, |
|
10 |
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
சேரியேனே; அயல் இலாட்டியேன்; |
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத் |
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, |
|
நுதலும் கூந்தலும் நீவி, |
|
15 |
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
மேல் |