17. பாலை
|
வளம் கெழு திரு நகர்ப் பந்து
சிறிது எறியினும்,
|
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன்
ஆடினும்,
|
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்'
என்று அசைஇ,
|
|
மயங்கு வியர் பொறித்த நுதலள்,
தண்ணென,
|
|
5
|
முயங்கினள் வதியும்மன்னே!
இனியே,
|
தொடி மாண் சுற்றமும் எம்மும்
உள்ளாள்,
|
|
நெடு மொழித் தந்தை அருங் கடி
நீவி,
|
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற
என்
|
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர்
சீறடி
|
|
10
|
வல்லகொல், செல்லத் தாமே
கல்லென
|
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
|
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை,
மடுத்த,
|
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி
தெள் விளி
|
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ்
கொள இயம்பும்,
|
|
15
|
கடுங் கதிர் திருகிய, வேய்
பயில், பிறங்கல்,
|
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை
யாஅத்து
|
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு
மருங்கின்,
|
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல்
மலர்,
|
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல்
மூதூர்,
|
|
20
|
நெய் உமிழ் சுடரின் கால்
பொரச் சில்கி,
|
வைகுறு மீனின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |