17. பாலை |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மேல் |