121. பாலை |
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் |
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள், |
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் |
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் |
|
5 |
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, |
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு |
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, |
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து |
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு |
|
10 |
தான் வரும் என்ப, தட மென் தோளி |
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட |
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை |
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து |
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண், |
|
15 |
கரு முக முசுவின் கானத்தானே. |
தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகன் | |
உரை |
மேல் |