265. பாலை |
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, |
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் |
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ? |
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் |
|
5 |
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை |
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? |
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி |
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், |
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து, |
|
10 |
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு |
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை அடைந்து, |
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய |
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து, |
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல |
|
15 |
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க, |
துகள் அற விளைந்த தோப்பி பருகி, |
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் |
|
புலாஅல் கையர், பூசா வாயர், |
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு |
|
20 |
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும் |
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ, |
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர் |
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது. -மாமூலனார் | |
உரை |
மேல் |