கார் விரி கொன்றைப்
பொன் நேர் புது மலர்த் |
|
தாரன்; மாலையன்;
மலைந்த கண்ணியன்; |
|
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்; |
|
நுதலது இமையா நாட்டம்;
இகல் அட்டு, |
|
கையது கணிச்சியொடு
மழுவே; மூவாய் |
5 |
வேலும் உண்டு, அத்
தோலாதோற்கே; |
|
ஊர்ந்தது ஏறே;
சேர்ந்தோள் உமையே |
|
செவ் வான் அன்ன மேனி,
அவ் வான் |
|
இலங்கு பிறை அன்ன
விலங்கு வால் வை எயிற்று, |
|
எரி அகைந்தன்ன
அவிர்ந்து விளங்கு புரி சடை, |
10 |
முதிராத் திங்களொடு
சுடரும் சென்னி, |
|
மூவா அமரரும் முனிவரும்
பிறரும் |
|
யாவரும் அறியாத்
தொல் முறை மரபின், |
|
வரி கிளர் வயமான்
உரிவை தைஇய, |
|
யாழ் கெழு மணி மிடற்று,
அந்தணன் |
15 |
தா இல் தாள் நிழல்
தவிர்ந்தன்றால், உலகே. |
|
|
|
-பாரதம் பாடிய
பெருந்தேவனார். |
|