குறிஞ்சி |
கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை |
|
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த |
|
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு |
|
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் |
|
5 |
அறியாது உண்ட கடுவன் அயலது |
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது, |
|
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் |
|
குறியா இன்பம், எளிதின், நின் மலைப் |
|
பல் வேறு விலங்கும், எய்தும் நாட! |
|
10 |
குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? |
வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், |
|
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, |
|
இவளும், இனையள்ஆயின், தந்தை |
|
அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, |
|
15 |
கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் |
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; |
|
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. |
|
பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. - கபிலர் | |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
|
யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
|
|
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி
சிவப்ப,
|
|
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
|
|
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
|
5
|
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
|
|
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
|
|
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்
சினை,
|
|
விழுக் கோட் பலவின் பழுப் பயம்
கொண்மார்,
|
|
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
|
10
|
வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
|
|
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
|
|
மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
|
|
நல் வரை நாட! நீ வரின்,
|
|
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.
|
பகற்குறி வாராநின்ற
தலைமகன் தோழியால் செறிப்பு
அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்'
என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. -
கபிலர்
|
|
|
நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
|
|
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
|
|
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
|
|
மராஅ யானை மதம் தப ஒற்றி,
|
5
|
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
|
|
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
|
|
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
|
|
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
|
|
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
|
10
|
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
|
|
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
|
|
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
|
|
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
|
|
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
|
15
|
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம்
பொதும்பில்,
|
|
பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
|
|
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
|
|
ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.
|
தோழி இரவு வருவானைப் பகல்
வா என்றது. - கபிலர்
|
|
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
|
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
|
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
|
|
இது என அறியா மறுவரற் பொழுதில்,
|
5
|
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
|
|
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
|
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
|
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
|
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
|
10
|
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
|
|
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
|
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
|
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
|
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
|
15
|
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
|
|
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
|
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
|
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்
மலிந்து,
|
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
|
20
|
நோய் தணி காதலர் வர, ஈண்டு
|
|
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
|
வரைவிடை வைத்துப் பிரிந்த
காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி
தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட
மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து
சிறைப்புறத்தானாக, தோழியாற்
சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார்.
|
|
|
மெய்யின் தீரா மேவரு காமமொடு
|
|
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
|
|
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
|
|
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
|
5
|
இருவி தோன்றின பலவே. நீயே,
|
|
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
|
|
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
|
|
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
|
|
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
|
10
|
கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
|
|
ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
|
|
'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
|
|
பிறர்த் தந்து நிறுக்குவள்ஆயின்,
|
|
உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. - பாண்டியன் அறிவுடைநம்பி
|
|
|
நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
|
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
|
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
|
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
|
5
|
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
|
|
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
|
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
|
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
|
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
|
10
|
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற
என்
|
|
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்
|
|
கடிய கூறி, கை பிணி விடாஅ,
|
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற
|
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது
என்வயின்
|
15
|
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து,
|
|
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன்
இன்றும்
|
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.
|
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
|
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,
|
20
|
என் குறைப் புறனிலை முயலும்
|
|
அண்கணாளனை நகுகம், யாமே.
|
பின்னின்ற தலைமகற்குக்
குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை
நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள்
சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார்
|
|
|
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
|
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
|
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
|
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
|
5
|
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
|
|
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
|
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ்
கயிற்று
|
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
|
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
|
10
|
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
|
|
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
|
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
|
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
|
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது
நினைந்து;
|
15
|
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
|
|
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
|
|
கூஉம் கணஃது எம் ஊர்' என
|
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
|
தோழி தலைமகன் குறை கூறியது;
பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி
பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம
வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
|
|
மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
|
|
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
|
|
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
|
|
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
|
5
|
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
|
|
கோடை நீடிய பைது அறு காலை,
|
|
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
|
|
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
|
|
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
|
10
|
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை,
|
|
பல்லோர் உவந்த உவகை எல்லாம்
|
|
என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை
|
|
ஓங்கித் தோன்றும் உயர் வரை
|
|
வான் தோய் வெற்பன் வந்தமாறே
|
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.- கபிலர்
|
|
|
'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
|
|
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
|
|
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
|
|
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
|
5
|
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
|
|
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
|
|
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
|
|
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
|
|
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
|
10
|
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
|
|
குயம் மண்டு ஆகம் செஞ் சாந்து நீவி,
|
|
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு,
|
|
'யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
|
|
வினவி நிற்றந்தோனே. அவற் கண்டு,
|
15
|
எம்முள் எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி,
|
|
நாணி நின்றனெமாக, பேணி,
|
|
'ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
|
|
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
|
|
பொய்யும் உளவோ?' என்றனன். பையெனப்
|
20
|
பரி முடுகு தவிர்த்த தேரன், எதிர்மறுத்து,
|
|
நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கிச்
|
|
சென்றோன்மன்ற, அக் குன்று கிழவோனே.
|
|
பகல் மாய் அந்திப் படுசுடர் அமையத்து,
|
|
அவன் மறை தேஎம் நோக்கி, 'மற்று இவன்
|
25
|
மகனே தோழி!' என்றனள்.
|
|
அதன் அளவு உண்டு கோள், மதிவல்லோர்க்கே.
|
செவிலித்தாய்க்குத் தோழி
அறத்தொடு நின்றது. - தங்கால் முடக்
கொற்றனார்
|
|
|
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
|
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும்
பொங்கர்ப்
|
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
|
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
|
5
|
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்
சிலம்பின்
|
|
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
|
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
|
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
|
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என
அன்னைக்கு
|
10
|
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என
|
|
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்
|
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை
|
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள்
|
|
ஆய்மலர் உண்கண் பசலை
|
15
|
காம நோய்' எனச் செப்பாதீமே.
|
தலைமகள் வேறுபட்டமை
அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு
நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. -
நொச்சிநியமங் கிழார்
|
|
|
இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
|
|
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
|
|
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
|
|
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
|
5
|
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
|
|
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
|
|
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
|
|
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
|
|
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
|
10
|
நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும்
நலியும்
|
|
தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை
|
|
பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,
|
|
மனைமரம் ஒசிய ஒற்றிப்
|
|
பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே.
|
சேட்படுத்து வந்த
தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப்
பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
|
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
|
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்,
|
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
|
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
|
5
|
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
|
|
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
|
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
|
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
|
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
|
10
|
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல,
|
|
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
|
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற்
|
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
|
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
|
15
|
கடவுள் எழுதிய பாவையின்,
|
|
மடவது மாண்ட மாஅயோளே.
|
அல்லகுறிப்பட்டுழி,
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
|
'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம்
படப்பைத்
|
|
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
|
|
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
|
|
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
|
5
|
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
|
|
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
|
|
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
|
|
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
|
|
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
|
10
|
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர்
|
|
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
|
|
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த
நம்வயின்
|
|
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
|
|
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
|
15
|
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத்
|
|
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
|
|
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
|
|
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
|
|
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
|
20
|
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப்
|
|
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.
|
தலைமகன் இரவுக்குறி வந்தமை
அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -
ஊட்டியார்
|
|
|
இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
|
|
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
|
|
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
|
|
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
|
5
|
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
|
|
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
|
|
ஆறே அரு மரபினவே; யாறே
|
|
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
|
|
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
|
10
|
'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
|
|
ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
|
|
ஈர் உயிர்ப் பிணவின் வயவுப் பசி களைஇய,
|
|
இருங் களிறு அட்ட பெருஞ் சின உழுவை
|
|
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
|
15
|
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்
|
|
வாள் நடந்தன்ன வழக்கு அருங் கவலை,
|
|
உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி,
|
|
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
|
|
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
|
20
|
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
|
|
ஆனா அரும் படர் செய்த
|
|
யானே, தோழி! தவறு உடையேனே.
|
தலைமகன் இரவுக் குறிக்கண்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லியது; தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம்.- எருமை வெளியனார்
மகனார் கடலனார்
|
|
|
'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
|
|
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
|
|
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
|
|
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று
ஒருத்தல்
|
5
|
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
|
|
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
|
|
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
|
|
நீடு இதழ் நெடுந் துடுப்பு ஒசிய, தண்ணென
|
10
|
வாடை தூக்கும் வருபனி அற்சிரம்,
|
|
நம் இல் புலம்பின், தம் ஊர்த் தமியர்
|
|
என் ஆகுவர்கொல் அளியர்தாம்?' என,
|
|
எம் விட்டு அகன்ற சில் நாள், சிறிதும்,
|
|
உள்ளியும் அறிதிரோ ஓங்குமலைநாட!
|
15
|
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை
|
|
வாய்மொழிக் கபிலன் சூழ, சேய் நின்று
|
|
செழுஞ் செய்ந் நெல்லின் விளைகதிர்
கொண்டு,
|
|
தடந் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி,
|
|
யாண்டு பல கழிய, வேண்டுவயிற் பிழையாது,
|
20
|
ஆள் இடூஉக் கடந்து, வாள் அமர் உழக்கி,
|
|
ஏந்துகோட்டு யானை வேந்தர் ஓட்டிய,
|
|
கடும் பரிப் புரவிக் கை வண் பாரி
|
|
தீம் பெரும் பைஞ் சுனைப் பூத்த
|
|
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே?
|
களவுக் காலத்துப் பிரிந்து
வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை
நக்கீரனார்
|
|
|
ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
|
|
கோடை அவ் வளி குழலிசை ஆக,
|
|
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
|
|
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
|
5
|
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
|
|
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
|
|
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
|
|
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
|
|
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
|
10
|
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
|
|
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
|
|
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
|
|
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
|
|
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
|
15
|
பலர்தில், வாழி தோழி! அவருள்,
|
|
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
|
|
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
|
|
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?
|
தோழிக்குத் தலைவி
அறத்தொடு நின்றது. - கபிலர்
|
|
|
முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
|
|
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய,
பாங்கர்ப்
|
|
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
|
|
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
|
5
|
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
|
|
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
|
|
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
|
|
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
|
|
இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்
|
10
|
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்
|
|
இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,
|
|
இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்
|
|
காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,
|
|
கொடு விரல் உளியம் கெண்டும்
|
15
|
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.-
ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
|
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
|
|
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
|
5
|
வாரல் வாழியர், ஐய! நேர் இறை
|
|
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
|
|
காவல் கண்ணினம் தினையே; நாளை
|
|
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
|
|
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
|
10
|
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை,
|
|
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
|
|
திருமணி விளக்கின் பெறுகுவை
|
|
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
|
இரவுக்குறிச் சென்று
தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை,
பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி
வரைவு கடாயது.- மதுரைப் பாலாசிரியர்
நற்றாமனார்
|
|
|
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்,
|
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த
|
|
இனிய உள்ளம் இன்னாஆக,
|
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்
|
5
|
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல்
|
|
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல்
|
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை
நோக்கி,
|
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப்
|
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ,
|
10
|
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து,
|
|
ஓவத்தன்ன வினை புனை நல் இல்,
|
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்
|
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து,
|
15
|
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்,
|
|
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர்
|
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா,
|
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன்
|
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன்
|
20
|
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்,
|
|
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய
|
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக
|
|
ஆடிய பின்னும், வாடிய மேனி
|
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை
|
25
|
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று,
|
|
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி,
|
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே,
|
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக்
|
|
கான் கெழு நாடன் கேட்பின்,
|
30
|
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச்
சொல்லியது; தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய
காமக்கண்ணியார்
|
|
|
உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும்
புனத்துக்
|
|
கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென;
|
|
உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு
|
|
ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா,
|
5
|
ஒலியல் வார் மயிர் உளரினள், கொடிச்சி
|
|
பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட;
|
|
குரலும் கொள்ளாது, நிலையினும் பெயராது,
|
|
படாஅப் பைங் கண் பாடு பெற்று, ஒய்யென
|
|
மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன்;
|
10
|
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப,
|
|
தாரன், கண்ணியன், எஃகுடை வலத்தன்,
|
|
காவலர் அறிதல் ஓம்பி, பையென
|
|
வீழாக் கதவம் அசையினன் புகுதந்து,
|
|
உயங்கு படர் அகலம் முயங்கி, தோள் மணந்து,
|
15
|
இன் சொல் அளைஇ, பெயர்ந்தனன் தோழி!
|
|
இன்று எவன்கொல்லோ கண்டிகும் மற்று அவன்
|
|
நல்காமையின் அம்பல் ஆகி,
|
|
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின்
|
|
இருஞ் சூழ் ஓதி ஒண் நுதற் பசப்பே?
|
இரவுக்குறிக்கண்
சிறைப்புறமாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. -
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தங் கூத்தன்
|
|
|
புணர்ந்தோர் புன்கண் அருளலும்
உணர்ந்தோர்க்கு
|
|
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
|
|
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
|
|
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
|
5
|
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
|
|
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
|
|
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
|
|
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
|
10
|
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
|
|
அருளான் வாழி, தோழி! அல்கல்
|
|
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
|
|
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
|
|
காயா மென் சினை தோய நீடிப்
|
15
|
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
|
|
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
கை ஆடு வட்டின் தோன்றும்
|
|
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி
சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
|
|
|
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி
|
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின்
|
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,
|
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்
|
5
|
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப்
புலி
|
|
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
|
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,
|
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;
|
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;
|
10
|
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை;
|
|
கழியக் காதலர்ஆயினும், சான்றோர்
|
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
|
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!
|
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
|
15
|
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார்,
|
|
தொன்று இயல் மரபின் மன்றல் அயர,
|
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,
|
|
நொதுமல் விருந்தினம் போல, இவள்
|
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.
|
இரவுக்குறி வந்த தலைமகனை
எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு
கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர்
கிழார்
|
|
|
கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன்,
|
|
தேம் கமழ் இணர வேங்கை சூடி,
|
|
தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ,
|
|
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து,
|
5
|
இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட,
|
|
பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள,
|
|
இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப்
|
|
பெருங் கை யானைக் கோள் பிழைத்து, இரீஇய
|
|
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடு நாள்
|
10
|
தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்.
|
|
என் ஆகுவள்கொல்தானே? பல் நாள்
|
|
புணர் குறி செய்த புலர்குரல் ஏனல்
|
|
கிளி கடி பாடலும் ஒழிந்தனள்;
|
|
அளியள்தான், நின் அளி அலது இலளே!
|
செறிப்பு அறிவுறீஇ, 'இரவும்
பகலும் வாரல்' என்று வரைவு கடாஅயது.- கபிலர்
|
|
|
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
|
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
|
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
|
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
|
5
|
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
|
|
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
|
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
|
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
|
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
|
10
|
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
|
|
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
|
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
|
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
|
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
|
15
|
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
|
|
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
|
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
|
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
|
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
|
20
|
ஆதி போகிய பாய்பரி நன் மா
|
|
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
|
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன
|
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன்
சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - பரணர்
|
|
|
மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;
|
|
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
|
|
யாமம் கொள வரின் கனைஇ, காமம்
|
|
கடலினும் உரைஇ, கரை பொழியும்மே.
|
5
|
எவன்கொல் வாழி, தோழி! மயங்கி
|
|
இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்
|
|
என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,
|
|
இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்
|
|
குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடி,
|
10
|
கான நாடன் வரூஉம், யானைக்
|
|
கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,
|
|
மாரி வானம் தலைஇ நீர் வார்பு,
|
|
இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,
|
|
இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்
|
15
|
தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கபிலர்
|
|
|
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
|
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
|
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
|
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
|
5
|
வால் நிணப் புகவின், கானவர் தங்கை
|
|
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
|
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
|
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
|
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
|
10
|
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
|
|
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
|
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
|
|
இருங் கவுட் கடாஅம் கனவும்,
|
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்
|
|
|
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
|
|
குவளை உண்கண் தெண் பனி மல்க,
|
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
|
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
|
5
|
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
|
|
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
|
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
|
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல்
அருவியின்
|
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
|
10
|
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
|
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
|
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
|
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
|
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
|
15
|
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
|
|
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
|
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
|
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
|
|
நல் நிறம் மருளும் அரு விடர்
|
20
|
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத்,
தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்
சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
|
|
|
இலமலர் அன்ன அம் செந் நாவின்
|
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த,
|
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல்
|
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம்
|
5
|
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற
|
|
குறையோர் கொள்கலம் போல, நன்றும்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி
|
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற
|
|
கறை அடி யானை நன்னன் பாழி,
|
10
|
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்
|
|
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
|
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
|
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து
|
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின்,
|
15
|
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய,
|
|
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச்
|
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை
|
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்,
|
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர,
|
20
|
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து,
|
|
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை
|
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து,
|
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை
|
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு
உறைப்ப,
|
25
|
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்;
|
|
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
பரணர்
|
|
|
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,
|
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,
|
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை
|
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத்
தொலைச்சி;
|
5
|
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து;
|
|
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!
|
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்
|
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம்
பட்டென,
|
|
காணிய செல்லாக் கூகை நாணி,
|
10
|
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை
|
|
பெரிதால் அம்ம இவட்கே; அதனால்
|
|
மாலை, வருதல் வேண்டும் சோலை
|
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும்
|
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.
|
பகல் வருவானை 'இரவு வருக'
என்றது. - பரணர்
|
|
|
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து,
|
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண்
|
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால்
|
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை,
|
5
|
சினம் கெழு தானை, தித்தன் வெளியன்,
|
|
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்
துறை,
|
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும்
|
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன
|
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன்
|
10
|
முனை முரண் உடையக் கடந்த வென் வேல்,
|
|
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ்,
|
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்;
|
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில்
|
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே
|
15
|
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி
|
|
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த
|
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன்
|
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி,
|
|
வல்லினும், வல்லார்ஆயினும்,
சென்றோர்க்குச்
|
20
|
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும்,
|
|
மாஅல் யானை ஆஅய் கானத்துத்
|
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல்
|
|
வேய் அமைக் கண் இடை புரைஇ,
|
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே.
|
இரவுக்குறி வந்து நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர்
|
|
உரை |
|
'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,
|
|
பெயல் ஆன்று அவிந்த தூங்குஇருள் நடுநாள்,
|
|
மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,
|
|
பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள்,
|
5
|
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி,
|
|
மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என
|
|
அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்
|
|
சூருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
|
|
தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
|
10
|
நனவின் வாயே போலத் துஞ்சுநர்க்
|
|
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்
|
|
சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர
|
|
மன்ற மராஅத்த கூகை குழறினும்,
|
|
நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்
|
15
|
புலிக் கணத்தன்ன நாய் தொடர்விட்டு,
|
|
முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்
|
|
எந்தையும் இல்லன் ஆக,
|
|
அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செவிலித்தாய்க்குச்
சொல்லுவாளாய்,தலைமகன் கேட்பச் சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து
|
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல,
|
|
கடல் கண்டன்ன மாக விசும்பின்
|
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க,
|
5
|
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,
|
|
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள்,
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,
|
|
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை
|
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக;
|
10
|
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என
|
|
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண்,
|
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல்,
|
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்,
|
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி,
|
15
|
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது,
|
|
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி
|
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய
|
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்
|
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின்
|
20
|
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய,
|
|
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன்
|
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர
|
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி,
|
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன்
|
25
|
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே.
|
இரவுக் குறிக்கண்
தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக,
|
|
பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே;
|
|
ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப!
|
|
பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த
|
5
|
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்
|
|
கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின்
|
|
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து,
|
|
அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்;
|
|
ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன்
|
10
|
தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப,
|
|
ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண்
|
|
வாள் வரி வயப் புலி கல் முழை உரற,
|
|
கானவர் மடிந்த கங்குல்;
|
|
மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே?
|
இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு
கடாயது. -கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
|
|
|
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
|
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
|
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
|
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
|
5
|
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்;
|
|
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
|
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல்
தெரிந்து,
|
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
|
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
|
10
|
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
|
|
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
|
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி
சிறந்து,
|
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
|
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
|
15
|
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின்
|
|
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
|
|
மணி ஏர் மாண் நலம் சிதைய,
|
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப்
பாலாசிரியர் நப்பாலனார்
|
|
|
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின்,
|
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி
|
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி,
|
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின்
|
5
|
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி,
|
|
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு,
|
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
|
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன,
|
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
|
10
|
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக,
|
|
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர,
|
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து,
|
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு
|
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட்
|
15
|
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து,
என்றும்,
|
|
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி
|
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக்
|
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத்
|
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என,
|
20
|
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை
|
|
முன் தான் கண்ட ஞான்றினு ம்
|
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே.
|
தோழி வரைவு மலிந்து
சொல்லியது. - பரணர்
|
|
|
பூங் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து,
|
|
வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ,
|
|
தீம் பழப் பலவின் சுளை விளை தேறல்
|
|
வீளை அம்பின் இளையரொடு மாந்தி,
|
5
|
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட,
|
|
வேட்டம் போகிய குறவன் காட்ட
|
குளவித் தண் புதல் குருதியொடு துயல் வர,
|
|
|
முளவுமாத் தொலைச்சும் குன்ற நாட!
|
|
அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து
|
10
|
உரவு மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
தனியை வந்த ஆறு நினைந்து, அல்கலும்,
|
|
பனியொடு கலுழும் இவள் கண்ணே; அதனால்,
|
|
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
|
|
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ,
|
15
|
உயர்சிமை நெடுங் கோட்டு உகள, உக்க
|
|
கமழ் இதழ் அலரி தாஅய் வேலன்
|
|
வெறி அயர் வியன் களம் கடுக்கும்
|
|
பெரு வரை நண்ணிய சாரலானே.
|
தோழி இரா வருவானைப் 'பகல்
வா' என்றது. - கபிலர்
|
|
|
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
|
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ,
|
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து
|
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர்
|
5
|
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர்
|
|
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும்
|
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும்
|
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என
|
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி,
|
10
|
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி,
|
|
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும்,
|
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும்,
|
|
குறமகள் காக்கும் ஏனல்
|
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே!
|
இரவில் சிறைப்புறமாகத்
தோழி சொல்லியது. - வீரை வெளியன்
தித்தனார்
|
|
|
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
|
|
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
|
|
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
|
|
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
|
5
|
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி,
|
|
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
|
|
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
|
|
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
|
|
நீ வந்து அளிக்குவைஎனினே மால் வரை
|
10
|
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென
|
|
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
|
|
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
|
|
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
|
|
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
|
15
|
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே.
|
தோழி தலைமகனைச் செறிப்பு
அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது. -பொதும்பில்கிழான்
வெண்கண்ணனார்
|
|
|
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக்
|
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது,
|
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி,
|
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து;
|
5
|
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை
|
|
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின்
|
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல,
|
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து,
|
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல்
|
10
|
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து,
|
|
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள்,
|
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள்,
|
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது
|
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில்,
|
15
|
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன்,
|
|
ஏர் மலர் நிறை சுனை உறையும்
|
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே!
|
புணர்ந்து நீங்கிய தலைமகளது
போக்கு நோக்கிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
|
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
|
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
|
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து
உயிர்ப்பின்,
|
5
|
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
|
|
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
|
|
சிறு பல் மின்மினி போல, பல உடன்
|
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
|
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
|
10
|
உத்தி அரவின் பைத் தலை துமிய,
|
|
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
|
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
|
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
|
|
தேராது வரூஉம் நின்வயின்
|
15
|
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே?
|
இரவுக் குறிக்கண் வந்து
நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு
கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
|
|
|
யாம இரவின் நெடுங் கடை நின்று,
|
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும்
|
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு
|
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
|
5
|
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்,
|
|
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
|
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
|
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து,
|
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள்
ஒருங்கு
|
10
|
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
|
|
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி,
|
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப்
|
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து,
|
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப,
|
15
|
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர்
|
|
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல்,
|
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை
|
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல்
|
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல,
|
20
|
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி,
|
|
நல்கினள், வாழியர், வந்தே ஓரி
|
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக்
|
|
கார் மலர் கடுப்ப நாறும்,
|
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே!
|
புணர்ந்து நீங்கும் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
தா இல் நல் பொன் தைஇய பாவை
|
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன,
|
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால்,
|
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற
|
5
|
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய்,
|
|
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ்
|
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி,
|
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று
|
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில்,
|
10
|
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும்,
|
|
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே
|
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு
|
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று,
|
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ,
|
15
|
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை
|
|
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க்
குட்டுவன்
|
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து,
|
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி,
|
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய
|
20
|
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று
அழுந்தக்
|
|
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது
|
|
எளியள் அல்லோட் கருதி,
|
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே.
|
அல்லகுறிப்பட்டு நீங்கும்
தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. -பரணர்
|
|
|
'கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு
|
|
முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த,
|
|
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி,
|
|
பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று,
|
5
|
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து,
|
|
புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள்,
|
|
விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல்,
|
|
தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை,
|
|
படாஅவாகும், எம் கண்' என, நீயும்,
|
10
|
'இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி,
|
|
வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப்
பார்க்கும்
|
|
பெரு மலை விடரகம் வர அரிது' என்னாய்,
|
|
வர எளிதாக எண்ணுதி; அதனால்,
|
|
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்
|
15
|
தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள்
|
|
அடைய முயங்கேம்ஆயின், யாமும்
|
|
விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே
|
|
அன்னை அறியினும் அறிக! அலர் வாய்
|
|
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க!
|
20
|
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு,
|
|
ஒண் பூ வேங்கை கமழும்
|
|
தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே!
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த
வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது. -
கபிலர்
|
|
|
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
|
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என்
|
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்;
|
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
|
5
|
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,
|
|
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு
மொய்ம்பின்,
|
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
|
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
|
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த
|
10
|
ஆதிமந்தி காதலற் காட்டி,
|
|
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின்
|
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
|
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள்,
|
|
உரவு உரும் ஏறொடு மயங்கி,
|
15
|
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென
|
|
வரை இழி அருவி ஆரம் தீண்டித்
|
|
தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில்,
|
|
கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக்
|
5
|
கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி,
|
|
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே
|
|
செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல
|
|
வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின்
|
|
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று,
|
10
|
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப்
|
|
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய
வாய்
|
|
இரும் பிடி இரியும் சோலைப்
|
|
பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி
சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார்
|
|
|
காண் இனி வாழி, தோழி! பானாள்,
|
|
மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின்,
|
|
மாஅல் யானை புலி செத்து வெரீஇ,
|
|
இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும்
|
5
|
பெருங் கல் நாடன் கேண்மை, இனியே,
|
|
குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்,
|
|
மன்ற வேங்கை மண நாட் பூத்த
|
|
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய்
|
|
வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர்
|
10
|
மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும்
|
|
ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும்,
|
|
விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை
|
|
கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி,
|
|
'முருகு' என வேலற் தரூஉம்.
|
15
|
பருவமாகப் பயந்தன்றால், நமக்கே.
|
தோழி தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்,சொல்லியது. -
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
|
|
|
மான்றமை அறியா மரம் பயில் இறும்பின்,
|
|
ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென,
|
|
மட மான் வல்சி தரீஇய, நடு நாள்,
|
|
இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த
|
5
|
பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து,
|
|
மடக் கண் ஆமான் மாதிரத்து அலற,
|
|
தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு,
|
|
நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி,
|
|
இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும்
|
10
|
பெருங் கல் நாட! பிரிதிஆயின்,
|
|
மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு
|
|
இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும்
|
|
மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ்,
|
|
கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி
|
15
|
நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து,
|
|
போந்தை முழு முதல் நிலைஇய காந்தள்
|
|
மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
|
|
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே?
|
இரவுக்குறி வந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென்
சினைச்
|
|
சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது
|
|
மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு
|
|
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை,
|
5
|
பைந் தாட் செந் தினைக் கொடுங் குரல்
வியன் புனம்,
|
|
செந் தார் கிள்ளை நம்மொடு கடிந்தோன்
|
|
பண்பு தர வந்தமை அறியாள், 'நுண் கேழ்
|
|
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர்
மருங்கு
|
|
அறிதல் வேண்டும்' என, பல் பிரப்பு இரீஇ,
|
10
|
அறியா வேலற் தரீஇ, அன்னை
|
|
வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி,
|
|
மறி உயிர் வழங்கா அளவை, சென்று யாம்,
|
|
செல வரத் துணிந்த, சேண் விளங்கு, எல் வளை
|
|
நெகிழ்ந்த முன் கை, நேர் இறைப் பணைத்
தோள்,
|
15
|
நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய,
|
|
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க, பல் ஊழ்
|
|
முயங்கல் இயைவதுமன்னோ தோழி!
|
|
நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில்
|
|
பெரு மலை விடரகம் நீடிய சிறியிலைச்
|
20
|
சாந்த மென் சினை தீண்டி, மேலது
|
|
பிரசம் தூங்கும் சேண் சிமை
|
|
வரையக வெற்பன் மணந்த மார்பே!
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச்
சொல்லியது. - பேரிசாத்தனார்
|
|
|
நகை நீ கேளாய் தோழி! அல்கல்;
|
|
வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ,
|
|
இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு
|
|
நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து,
|
5
|
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற
|
|
தறுகட் பன்றி நோக்கி, கானவன்
|
|
குறுகினன் தொடுத்த கூர்வாய்ப் பகழி
|
|
மடை செலல் முன்பின் தன் படை செலச்
செல்லாது,
|
|
'அரு வழி விலக்கும் எம் பெருவிறல் போன்ம்'
என,
|
10
|
எய்யாது பெயரும் குன்ற நாடன்
|
|
செறி அரில் துடக்கலின், பரீஇப் புரி
அவிழ்ந்து,
|
|
ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை,
|
|
ஏற்று இமிற் கயிற்றின், எழில் வந்து
துயல்வர,
|
|
இல் வந்து நின்றோற் கண்டனள், அன்னை;
|
15
|
வல்லே என் முகம் நோக்கி,
|
|
'நல்லை மன்!' என நகூஉப் பெயர்ந்தோளே.
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தலைமகட்குச்
சொல்லுவாளாய்,தலைமகன் கேட்ப, தோழி
சொல்லியது. - கபிலர்
|
|
|
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
|
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
|
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
|
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
|
5
|
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
|
|
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
|
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
|
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
|
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
|
10
|
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்
|
|
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
|
|
பெருங் குளம் காவலன் போல,
|
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள்
சொல்லியது. - நக்கண்ணையார்
|
|
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங்
குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர்
|
|
|
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
|
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய்,
|
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
|
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென,
|
5
|
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து,
அருளாது,
|
|
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
|
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
|
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
|
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
|
10
|
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து,
அவர்
|
|
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
|
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
|
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
|
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
|
15
|
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
|
|
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
|
|
கொண்டல் மா மலை நாறி,
|
|
அம் தீம் கிளவி வந்தமாறே.
|
இரவுக்குறிக்கண் தலைமகளைப்
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
|
|
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
|
|
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
|
|
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
|
5
|
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
|
|
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
|
|
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
|
|
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
|
|
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
|
10
|
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
|
|
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
|
|
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
|
|
செய்து பின் இரங்கா வினையொடு
|
|
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!
|
குறை வேண்டிப் பின் நின்ற
குறை நயப்ப, கூறியது. - வடம வண்ணக்கன் பேரி
சாத்தனார்
|
|
|
இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப்
|
|
புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல்
|
|
அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு
|
|
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி,
|
5
|
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க,
|
|
தனியன் வந்து, பனி அலை முனியான்,
|
|
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற
|
|
குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
|
|
அசையா நாற்றம் அசை வளி பகர,
|
10
|
துறு கல் நண்ணிய கறி இவர் படப்பைக்
|
|
குறி இறைக் குரம்பை நம் மனைவயின் புகுதரும்,
|
|
மெய்ம் மலி உவகையன்; அந் நிலை கண்டு,
|
|
'முருகு' என உணர்ந்து, முகமன் கூறி,
|
|
உருவச் செந் தினை நீரொடு தூஉய்,
|
15
|
நெடு வேள் பரவும், அன்னை; அன்னோ!
|
|
என் ஆவது கொல்தானே பொன் என
|
|
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய
|
|
மணி நிற மஞ்ஞை அகவும்
|
|
அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
|
இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - மதுரை
அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
|
குண கடல் முகந்த கொள்ளை வானம்
|
|
பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத்
|
|
தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு,
|
|
கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி,
|
5
|
உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள்,
|
|
பெரு மலை மீமிசை முற்றினஆயின்,
|
|
வாள் இலங்கு அருவி தாஅய், நாளை,
|
|
இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
|
|
வருவதுமாதோ, வண் பரி உந்தி,
|
10
|
நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை;
|
|
பனி பொரு மழைக் கண் சிவப்ப, பானாள்
|
|
முனி படர் அகல மூழ்குவம்கொல்லோ
|
|
மணி மருள் மேனி ஆய்நலம் தொலைய,
|
|
தணிவு அருந் துயரம் செய்தோன்
|
15
|
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே?
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தலைமகட்குத் தோழி
சொல்லியது. - கபிலர்
|
|
|
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய,
|
|
செறி மடை அம்பின், வல் வில், கானவன்
|
|
பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு,
|
|
நீர் திகழ் சிலம்பின் நன் பொன்
அகழ்வோன்,
|
5
|
கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப,
|
|
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க
|
|
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு,
|
|
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு,
|
|
சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார்
|
10
|
வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு
|
|
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து
|
|
எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர்
வாய்
|
|
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்;
|
|
சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி,
|
15
|
யாயும், 'அவனே' என்னும்; யாமும்,
|
|
'வல்லே வருக, வரைந்த நாள்!' என,
|
|
நல் இறை மெல் விரல் கூப்பி,
|
|
இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே!
|
இரவுக்குறிக்கண் தலைமகன்
சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
|
|
|
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை
|
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை,
|
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ
|
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை,
|
5
|
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல்,
|
|
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்!
|
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை
காண்டலின்,
|
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக்
|
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து,
|
10
|
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
|
|
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க்
|
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர்,
|
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும்,
|
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து,
|
15
|
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக்
|
|
கொந்தொடு உதிர்த்த கதுப்பின்,
|
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே.
|
பகற்குறிக்கண் தோழி
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று
மூதெயினனார்
|
|
உரை |
|
கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
|
|
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென்
முறிச்
|
|
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
|
|
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
|
5
|
ஏதில் வேலன் கோதை துயல்வரத்
|
|
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
|
|
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம்
படர்ந்து,
|
|
இரவின் மேயல் மரூஉம் யானைக்
|
|
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
|
10
|
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன்
|
|
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
|
|
உடு உறு கணையின் போகி, சாரல்
|
|
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
|
|
பலவின் பழத்துள் தங்கும்
|
15
|
மலை கெழு நாடன் மணவாக்காலே!
|
வெறி அச்சுறீஇ,தலைமகள்
தோழிக்குச் சொல்லியது. - கபிலர்
|
|
|
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
|
|
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு
விளங்கி,
|
|
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
|
|
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
|
5
|
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ்
சினைத்
|
|
தண் துளி அசைவளி தைவரும் நாட!
|
|
கொன்று சினம் தணியாது, வென்று முரண்
சாம்பாது,
|
|
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
|
|
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
|
10
|
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின்,
|
|
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
|
|
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
|
|
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
|
|
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
|
15
|
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை
|
|
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
|
|
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
|
|
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
|
20
|
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர்
|
|
நீடலர் ஆகி வருவர், வல்லென;
|
|
கங்குல் உயவுத் துணை ஆகிய
|
|
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!
|
இரவுக்குறிக்கண்
தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப்
பண்ட வாணிகன் இளந்தேவனார்
|
|
|
சிலம்பில் போகிய செம் முக வாழை
|
|
அலங்கல் அம் தோடு, அசைவளி உறுதொறும்,
|
|
பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும்
|
|
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்,
|
5
|
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்,
|
|
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
|
|
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
|
|
அரிய போலும் காதல் அம் தோழி!
|
|
இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
|
10
|
கரும்பு எனக் கவினிய பெருங் குரல் ஏனல்,
|
|
கிளி பட விளைந்தமை அறிந்தும்,' செல்க' என,
|
|
நம் அவண் விடுநள் போலாள், கைம்மிகச்
|
|
சில் சுணங்கு அணிந்த, செறிந்து வீங்கு, இள
முலை,
|
|
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு,
|
15
|
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.
|
பகலே சிறைப்புறமாகத்
தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச்
சொல்லியது.- மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
உரை |
|
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்
|
|
நெடு வகிர் விழுப் புண் கழாஅ, கங்குல்
|
|
ஆலி அழி துளி பொழிந்த வைகறை,
|
|
வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின்,
|
5
|
இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ,
|
|
கலம் சுடு புகையின் தோன்றும் நாட!
|
|
இரவின் வருதல் எவனோ? பகல் வரின்,
|
|
தொலையா வேலின் வண் மகிழ் எந்தை
|
|
களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்து,
|
10
|
சிறு தினைப் படு கிளி எம்மொடு ஓப்பி,
|
|
மல்லல் அறைய மலிர் சுனைக் குவளைத்
|
|
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய
|
|
கூந்தல் மெல் அணைத் துஞ்சி, பொழுது பட,
|
|
காவலர்க் கரந்து, கடி புனம் துழைஇய
|
15
|
பெருங் களிற்று ஒருத்தலின், பெயர்குவை,
|
|
கருங் கோற் குறிஞ்சி, நும் உறைவு இன்,
ஊர்க்கே.
|
இரவு வருவானைப் 'பகல் வருக'
என்றது. - பிசிராந்தையார்
|
|
உரை |
|
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி,
|
|
இரவின் வரூஉம் இடும்பை நீங்க,
|
|
வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து,
|
|
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்,
|
5
|
காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது,
|
|
அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்
|
|
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,
|
|
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!
|
|
வேய் பயில் அடுக்கம் புதையக் கால்
வீழ்த்து,
|
10
|
இன் இசை முரசின் இரங்கி, ஒன்னார்
|
|
ஓடு புறம் கண்ட, தாள் தோய் தடக் கை,
|
|
வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த
|
|
|
|
கொடி பட மின்னிப் பாயின்றால், மழையே!
|
தலைமகன் சிறைப்புறமாகத்
தோழி சொல்லியது; தலைமகள் சொல்லியதூஉம்
ஆம். -மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
கான மான் அதர் யானையும் வழங்கும்;
|
|
வான மீமிசை உருமும் நனி உரறும்;
|
|
அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய;
|
|
இர வழங்கு சிறு நெறி தமியை வருதி
|
5
|
வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம்
|
|
முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும்,
|
|
பழ விறல் நனந்தலைப் பய மலை நாட!
|
|
மன்றல் வேண்டினும் பெறுகுவை; ஒன்றோ
|
|
இன்று தலையாக வாரல்; வரினே,
|
10
|
ஏம் உறு துயரமொடு யாம் இவண் ஒழிய,
|
|
எக் கண்டு பெயருங் காலை, யாழ நின்
|
|
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை,
|
|
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
|
|
வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின்
|
15
|
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே!
|
இரவுக்குறி வந்த தலைமகனை
வரவு விலக்கி வரைவு கடாயது. - கபிலர்
|
|
உரை |
|
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,
|
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;
|
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,
|
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,
|
5
|
பாம்பு எறி கோலின் தமியை வைகி,
|
|
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக்
|
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,
|
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்
|
10
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில்,
|
|
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்
|
|
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,
|
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப
|
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,
|
15
|
புகல் அரும், பொதியில் போலப்
|
|
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே!
|
அல்லகுறிப்பட்டுப்
போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
உரை |
|
வழை அமல் அடுக்கத்து, வலன் ஏர்பு, வயிரியர்
|
|
முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு,
|
|
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து,
|
|
அரவின் பைந் தலை இடறி, பானாள்
|
5
|
இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி,
|
|
துனி கண் அகல அளைஇ, கங்குலின்
|
|
இனிதின் இயைந்த நண்பு, அவர் முனிதல்
|
|
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம்ஆயின்,
|
|
இலங்கு வளை நெகிழ, பரந்து படர் அலைப்ப,
யாம்
|
10
|
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்து
கொண்டு
|
|
அடக்குவம்மன்னோ தோழி! மடப் பிடி
|
|
மழை தவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று,
|
|
கழை தின் யாக்கை விழை களிறு தைவர,
|
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும்
|
15
|
சாரல் நாடன் சாயல் மார்பே!
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப,
தலைமகள் சொல்லியது. -மதுரைப் பண்ட
வாணிகன் இளந்தேவனார்
|
|
|
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
|
|
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
|
|
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து
ஒடுங்கிய,
|
|
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
|
5
|
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
|
|
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
|
|
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
|
|
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
|
|
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
|
10
|
நின் புரை தக்க சாயலன் என, நீ
|
|
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
|
|
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
|
|
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
|
|
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
|
15
|
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள்
இயற்பட மொழிந்தது. -கபிலர்
|
|
உரை |
|
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும்
|
|
மறம் கெழு தானை அரசருள்ளும்,
|
|
அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர்
|
|
மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி
தோள்,
|
5
|
பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன்
|
|
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன்,
|
|
சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல்,
|
|
துணை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
|
|
நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற
|
10
|
முயங்கல் இயையாதுஆயினும், என்றும்,
|
|
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக,
|
|
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும்
|
|
துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன்
|
|
அகல் இருங் கானத்துக் கொல்லி போல,
|
15
|
தவாஅலியரோ, நட்பே! அவள்வயின்
|
|
அறாஅலியரோ, தூதே பொறாஅர்
|
|
விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள்,
|
|
புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன்,
|
|
தொகு போர்ச் சோழன், பொருள் மலி
பாக்கத்து,
|
20
|
வழங்கல் ஆனாப் பெருந் துறை
|
|
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
உரை |
|
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
|
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு
யான்
|
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
|
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
|
5
|
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
|
|
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
|
|
ஏவல் இளையர் தலைவன், மேவார்
|
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
|
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
|
10
|
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
|
|
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
|
|
வரையரமகளிரின் அரியள்,
|
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
|
என் ஆவதுகொல் தானே முன்றில்,
|
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
|
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
|
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
|
5
|
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
|
|
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
|
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்
கோட்டுக்
|
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
|
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
|
10
|
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
|
|
'யானை வவ்வின தினை' என, நோனாது,
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
|
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
|
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது.
-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன்
கூத்தனார்
|
|
உரை |
|
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
|
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்,
|
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின்,
|
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர்
|
5
|
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
|
|
முழவன் போல அகப்படத் தழீஇ,
|
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன்
|
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்;
|
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ
|
10
|
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்;
|
|
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ!
|
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி,
|
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல்,
|
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன்
|
15
|
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும்,
|
|
புதுவது புனைந்த திறத்தினும்,
|
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே.
|
வரைந்து எய்திய பின்றை மண
மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள்
சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். -
அஞ்சியத்தை மகள் நாகையார்
|
|
உரை |
|
நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்,
|
|
காமர் பீலி, ஆய் மயில் தோகை
|
|
இன் தீம் குரல துவன்றி, மென் சீர்
|
|
ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி,
|
5
|
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக்
|
|
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
|
|
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்,
|
|
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு,
|
|
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி,
|
10
|
அன்னை வினவினள்ஆயின், அன்னோ!
|
|
என் என உரைக்கோ யானே துன்னிய
|
|
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி,
|
|
ஓடை யானை உயர் மிசை எடுத்த
|
|
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
|
15
|
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?
|
பகலே சிறைப்புறமாகத்
தோழி தலைமகட்குச் சொல்லியது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
பாம்புடை விடர பனி நீர் இட்டுத் துறைத்
|
|
தேம் கலந்து ஒழுக, யாறு நிறைந்தனவே;
|
|
வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து,
|
|
பைங் கண் வல்லியம் கல் அளைச் செறிய,
|
5
|
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு
|
|
கடி கொள, வழங்கார் ஆறே; ஆயிடை
|
|
எல்லிற்று என்னான், வென் வேல் ஏந்தி,
|
|
நசை தர வந்த நன்னராளன்
|
|
நெஞ்சு பழுதாக, வறுவியன் பெயரின்,
|
10
|
இன்று இப்பொழுதும் யான் வாழலெனே;
|
|
எவன்கொல்? வாழி, தோழி! நம் இடை முலைச்
|
|
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும்,
|
|
சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு
நளிப்பின்
|
|
இலங்கு வெள் அருவி போலவும்,
|
15
|
நிலம் கொண்டனவால், திங்கள் அம் கதிரே!
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. -
வெள்ளிவீதியார்
|
|
உரை |
|
தொடுதோற் கானவன் சூடுறு வியன் புனம்,
|
|
கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்து,
|
|
தோடு வளர் பைந் தினை நீடு குரல் காக்கும்
|
|
ஒண் தொடி மகளிர்க்கு ஊசலாக
|
5
|
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய
|
|
குறும்பொறை அயலது நெடுந் தாள் வேங்கை,
|
|
மட மயிற் குடுமியின், தோன்றும் நாடன்
|
|
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலைக்
|
|
குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில்,
|
10
|
கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர்
|
|
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி,
|
|
பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து, சில் நாள்
|
|
கழியாமையே வழிவழிப் பெருகி,
|
|
அம் பணை விளைந்த தேக் கட் தேறல்
|
15
|
வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர்,
|
|
எவன்கொல் வாழி, தோழி! கொங்கர்
|
|
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
|
|
உள்ளி விழவின் அன்ன,
|
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே?
|
பகலே சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
உரை |
|
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
|
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
|
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண்,
|
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
|
5
|
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு
நினைந்து,
|
|
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்,
|
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
|
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி,
|
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
|
10
|
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்
|
|
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
|
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
|
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி
|
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர்
|
15
|
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து,
|
|
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே.
|
அல்லகுறிப்பட்டுப்
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - பரணர்
|
|
|
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்,
|
|
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள,
|
|
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
|
|
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர,
|
5
|
காமர் பீலி ஆய் மயில் தோகை
|
|
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
|
|
கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல
|
|
ஆடு கள வயிரின் இனிய ஆலி,
|
|
பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து,
|
10
|
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்
|
|
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்,
|
|
உடன்ற அன்னை அமரா நோக்கமும்,
|
|
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
|
|
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
|
15
|
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்,
|
|
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி,
|
|
யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி!
|
|
நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர்
|
|
உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு
|
20
|
அள் இலைப் பலவின் கனி கவர் கைய
|
|
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
|
|
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங்
குன்றத்து,
|
|
பாடு இன் அருவி சூடி,
|
|
வான் தோய் சிமையம் தோன்றலானே.
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப,
தலைமகள் சொல்லியது. -காவட்டனார்
|
|
உரை |
|
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
|
|
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
|
|
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
|
|
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
|
5
|
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப,
|
|
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
|
|
தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு
|
|
அறியக் கூறல் வேண்டும் தோழி!
|
|
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
|
|
செழுங் கோட் பலவின் பழம் புணையாக,
|
|
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
|
|
வறன் உறல் அறியாச் சோலை,
|
|
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச்
சொல்லியது. - கபிலர்
|
|
உரை |
|
அம்ம வாழி, தோழி நம் மலை
|
|
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த்
தட்டையின்,
|
|
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
|
|
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை
அமல்
|
5
|
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி,
|
|
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
|
|
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
|
|
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
|
|
இன் இசை ஓரா இருந்தனமாக,
|
10
|
'மை ஈர் ஓதி மட நல்லீரே!
|
|
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
|
|
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
|
|
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?' என,
|
|
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
|
15
|
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
|
|
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
|
|
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
|
|
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, 'வெறி' என,
|
|
அன்னை தந்த முது வாய் வேலன்,
|
20
|
'எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்;
|
|
தணி மருந்து அறிவல்' என்னும்ஆயின்,
|
|
வினவின் எவனோ மற்றே 'கனல் சின
|
|
மையல் வேழ மெய் உளம்போக,
|
|
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
|
25
|
காட்டு மான் அடி வழி ஒற்றி,
|
|
வேட்டம் செல்லுமோ, நும் இறை?' எனவே?
|
இரவுக்குறிச்
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச்
சொல்லியது; தோழி தலைமகட்குச்
சொல்லியதூஉம் ஆம். - ஊட்டியார்
|
|
உரை |
|
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து,
|
|
வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை
|
|
உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன,
|
|
பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ,
|
5
|
பின்னிலை முனியானாகி, 'நன்றும்,
|
|
தாது செய் பாவை அன்ன தையல்,
|
|
மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின்
|
|
தீது இன்றாக, நீ புணை புகுக!' என
|
|
என்னும் தண்டும்ஆயின், மற்று அவன்
|
10
|
அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே
|
|
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக்
|
|
கண மழை பொழிந்த கான் படி இரவில்,
|
|
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
|
|
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
|
15
|
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென,
|
|
மறப் புலி உரற, வாரணம் கதற,
|
|
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
|
|
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
|
|
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,
|
20
|
உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின்,
|
|
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன்
|
|
முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப,
|
|
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை
|
|
ஆற்றாமையின், பிடித்த வேல் வலித்
|
25
|
தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற,
|
|
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின்
|
|
கான் அமர் நன்னன் போல,
|
|
யான் ஆகுவல், நின் நலம் தருவேனே.
|
பின்னின்ற தலைமகற்குக்
குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை
நயப்பக் கூறியது. - மோசிகீரனார்
|
|
உரை |
|
'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
|
|
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
|
|
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
|
|
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
|
5
|
பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
|
|
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
|
|
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
|
|
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
|
|
நன்று புறமாறி அகறல், யாழ நின்
|
10
|
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
|
|
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
|
|
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
|
|
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
|
|
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
|
15
|
நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
|
|
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
|
|
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
|
|
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
|
|
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
|
20
|
பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
|
|
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
|
|
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
|
|
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
|
|
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
|
25
|
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!
|
காமம் மிக்க கழி படர்
கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள்
தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு
புலந்து, சொல்லியது. -இம்மென்கீரனார்
|
|
உரை |
மேல் |