முல்லை |
முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு |
|
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, |
|
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், |
|
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, |
|
5 |
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, |
கருவி வானம் கதழ் உறை சிதறி, |
|
கார் செய்தன்றே, கவின் பெறு கானம். |
|
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, |
|
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, |
|
10 |
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த |
தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, |
|
மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், |
|
உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், |
|
கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, |
|
15 |
நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் |
போது அவிழ் அலரின் நாறும் |
|
ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. |
தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது. - குறுங்குடி மருதனார் | |
|
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
|
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
|
|
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
|
5
|
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
|
|
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
|
|
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
|
|
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
|
|
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
|
10
|
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
|
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
|
|
மாலையும் உள்ளார்ஆயின், காலை
|
|
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற
|
|
மனையோள் சொல் எதிர்
சொல்லல்செல்லேன்,
|
15
|
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
|
|
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
|
|
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
|
|
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
|
|
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
|
20
|
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
|
|
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
|
பாணன் தனக்குப்
பாங்காயினார் கேட்பச் சொல்லியது. -
ஒக்கூர் மாசாத்தனார்
|
|
|
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
|
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
|
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
|
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
|
5
|
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
|
|
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
|
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
|
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
|
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
|
10
|
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
|
|
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
|
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
|
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
|
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை
உதைப்பு,
|
15
|
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
|
|
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
|
|
இரவுத் துயில் மடிந்த தானை,
|
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
|
தலைமகன் பருவங் கண்டு
சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர்
மூலங் கிழார்
|
|
உரை |
|
சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
|
|
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
|
|
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
|
|
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
|
5
|
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
|
|
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
|
|
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
|
|
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
|
|
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
|
10
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பசை கொல் மெல் விரல், பெருந் தோள்,
புலைத்தி
|
|
துறை விட்டன்ன தூ மயிர் எகினம்
|
|
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பில்,
|
|
செந் தார்ப் பைங் கிளி முன்கை ஏந்தி,
|
15
|
'இன்று வரல் உரைமோ, சென்றிசினோர்
திறத்து' என,
|
|
இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
|
|
மழலை இன் சொல் பயிற்றும்
|
|
நாணுடை அரிவை மாண் நலம் பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகனார்
|
|
|
வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
|
|
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
|
|
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
|
|
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
|
5
|
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
|
|
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
|
|
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
|
|
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
|
|
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
|
10
|
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்,
|
|
பருந்து படப் பண்ணி, பழையன் பட்டென,
|
|
கண்டது நோனானாகி, திண் தேர்க்
|
|
கணையன் அகப்பட, கழுமலம் தந்த
|
|
பிணைஅல்அம் கண்ணிப் பெரும் பூட் சென்னி
|
15
|
அழும்பில் அன்ன அறாஅ யாணர்,
|
|
பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை,
|
|
பொங்கடி படிகயம் மண்டிய பசு மிளை,
|
|
தண் குடவாயில் அன்னோள்
|
|
பண்புடை ஆகத்து இன் துயில் பெறவே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
|
|
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம்
பெயற்
|
|
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
|
|
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
|
5
|
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
|
|
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
|
|
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
|
|
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
|
|
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
|
10
|
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர்
|
|
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
|
|
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
|
|
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
|
|
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
|
15
|
புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர்
|
|
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
|
|
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
|
|
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
|
|
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
|
20
|
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி
பயிற்றி,
|
|
திதலை அல்குல் எம் காதலி
|
|
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே.
|
வினை முடித்து மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர்
கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
|
|
|
களையும் இடனால் பாக! உளை அணி
|
|
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
|
|
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
|
|
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
|
5
|
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
|
|
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
|
|
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
|
|
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
|
|
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
|
10
|
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,
|
|
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
|
|
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
|
|
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
|
|
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
|
15
|
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
|
|
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
|
|
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆர்க்காடு
கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
|
|
|
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ்
சிறந்து,
|
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
|
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
|
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
|
5
|
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
|
|
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
|
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
|
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
|
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
|
10
|
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின்
நினைந்து
|
|
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
|
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
|
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
|
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
|
15
|
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங்
கோற்
|
|
கல்லாக் கோவலர் ஊதும்
|
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
|
தலைமகன் பிரிவின்கண்
அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்
|
|
|
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
|
|
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
|
|
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
|
|
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
|
5
|
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
|
|
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
|
|
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
|
|
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
|
|
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
|
10
|
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே,
|
|
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
|
|
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
|
|
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
|
|
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
|
15
|
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்
சிறந்து,
|
|
வினைவயின் பெயர்க்கும் தானை,
|
|
புனைதார், வேந்தன் பாசறையேமே!
|
தலைமகன் பாசறையிலிருந்து
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
|
|
|
தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
|
|
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
|
|
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
|
|
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
|
5
|
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
|
|
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
|
|
ஐது படு கொள்ளி அங்கை காய,
|
|
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
|
|
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
|
10
|
முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
|
|
கருங் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து
இசைக்கும்
|
|
வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து
|
|
ஆர்வம் சிறந்த சாயல்,
|
|
இரும் பல் கூந்தல், திருந்திழை ஊரே!
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன்
பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். - நன்பலூர்ச்
சிறு மேதாவியார்
|
|
|
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
|
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
|
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
|
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
|
5
|
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
|
|
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
|
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல
|
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
|
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
|
10
|
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
|
|
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
|
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
|
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
|
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
|
15
|
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
|
|
ஆய் தொடி அரிவை கூந்தற்
|
|
போது குரல் அணிய வேய்தந்தோயே!
|
வினை முற்றி மீளும்
தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை
மருதன் இளநாகனார்
|
|
|
'கேளாய், எல்ல! தோழி! வேலன்
|
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய
|
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
|
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
|
5
|
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும்
|
|
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என,
|
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க,
|
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்
|
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
|
10
|
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர்
|
|
வானக மீனின் விளங்கித் தோன்றும்,
|
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
|
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்,
|
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
|
15
|
அணங்கு சால், அரிவையைக் காண்குவம்
|
|
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......
|
|
|
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
|
|
வந்து திறை கொடுத்து, வணங்கினர்,
வழிமொழிந்து
|
|
சென்றீக' என்பஆயின், வேந்தனும்
|
|
நிலம் வகுந்துறாஅ ஈண்டிய தானையொடு
|
5
|
இன்றே புகுதல் வாய்வது; நன்றே.
|
|
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
|
|
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
|
|
பாசறை வருத்தம் வீட, நீயும்
|
|
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
|
10
|
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி,
|
|
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
|
|
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
|
|
காலை எய்த, கடவுமதி மாலை
|
|
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
|
15
|
அரமிய வியலகத்து இயம்பும்
|
|
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்கு
உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன்
இளவேட்டனார்
|
|
|
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
|
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
|
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
|
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
|
5
|
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
|
|
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
|
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
|
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
|
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
|
10
|
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
|
|
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
|
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
|
|
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
|
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
|
வினை முற்றி மீண்ட தலைமகன்
பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
|
|
|
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன;
|
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா;
|
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை
|
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை
|
5
|
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார்,
|
|
அருள் கண்மாறலோ மாறுக அந்தில்
|
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச்
|
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும்,
|
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு,
|
10
|
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல
|
|
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின்
|
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து
சிலைக்கும்
|
|
கடாஅ யானை கொட்கும் பாசறை,
|
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
|
15
|
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி,
|
|
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
|
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப,
|
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம்
|
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே.
|
வினை முற்றிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச்
சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார்
மகனார் மள்ளனார்
|
|
|
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
|
|
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
|
|
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
|
|
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
|
5
|
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
|
|
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
|
|
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
|
|
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்
|
|
காமர் துணையொடு ஏமுற வதிய,
|
10
|
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
|
|
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
|
|
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
|
|
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
|
|
நம் வயிற் புரிந்த கொள்கை
|
15
|
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
|
|
உரை |
|
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு
|
|
பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி,
|
|
விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம்
|
|
காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்;
|
5
|
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன்
|
|
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற.
|
|
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம்.
|
|
'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி,
|
|
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு
|
10
|
இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம்
|
|
இது நற் காலம்; கண்டிசின் பகைவர்
|
|
மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின்,
|
|
கந்து கால் ஒசிக்கும் யானை,
|
|
வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே!
|
பாசறைக்கண் இருந்த
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
|
|
|
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து,
|
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும்
|
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்'
என,
|
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச்
|
5
|
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை
|
|
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர்
சொரிந்து,
|
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ
|
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து,
|
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள்,
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை
|
|
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள,
|
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்,
|
|
நல் மணல் வியலிடை நடந்த
|
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
|
கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய
|
|
புதல்வற் பயந்த புகழ் மிகு சிறப்பின்
|
|
நன்னராட்டிக்கு அன்றியும், எனக்கும்
|
|
இனிது ஆகின்றால்; சிறக்க, நின் ஆயுள்!
|
5
|
அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு
|
|
சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட,
|
|
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில்
|
|
குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப்
|
|
புன் தலை புதைத்த கொழுங் கொடி முல்லை
|
10
|
ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கி,
|
|
தெள் அறல் பருகிய திரிமருப்பு எழிற் கலை
|
|
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்,
|
|
கோடுடைக் கையர், துளர் எறி வினைஞர்,
|
|
அரியல் ஆர்கையர், விளைமகிழ் தூங்க,
|
15
|
செல்கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச்
|
|
செக்கர் வானம் சென்ற பொழுதில்,
|
|
கற் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த்
|
|
தார் மணி பல உடன் இயம்ப
|
|
சீர் மிகு குருசில்! நீ வந்து நின்றதுவே.
|
தலைமகன் வினைவயிற்
பிரிந்து வந்து எய்திய இடத்து, தோழி புல்லு
மகிழ்வு உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை,
|
|
ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப்
|
|
புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து,
|
|
ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால்,
|
5
|
வித்திய மருங்கின் விதை பல நாறி,
|
|
இரலை நல் மானினம் பரந்தவைபோல்,
|
|
கோடுடைத் தலைக்குடை சூடிய வினைஞர்,
|
|
கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி,
|
|
களை கால் கழீஇய பெரும் புன வரகின்
|
10
|
கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட,
|
|
குடுமி நெற்றி, நெடு மாத் தோகை
|
|
காமர் கலவம் பரப்பி, ஏமுறக்
|
|
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த
|
|
வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து,
|
15
|
கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும்
|
|
கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக்
|
|
கொடுஞ்சி நெடுந் தேர் பூண்ட, கடும் பரி,
|
|
விரிஉளை, நல் மான் கடைஇ
|
|
வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே.
|
பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத்,
தலைமகள் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
|
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
|
|
கடல் போல் தானை, கலிமா, வழுதி
|
|
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச்
|
|
சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே
|
5
|
கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில்,
|
|
கணம் கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி
|
|
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
|
|
உதுக்காண் வந்தன்று பொழுதே; வல் விரைந்து,
|
|
செல்க, பாக! நின் நல் வினை நெடுந் தேர்
|
10
|
வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை
|
|
பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும்
|
|
காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித்
|
|
தண்டலை கமழும் கூந்தல்,
|
|
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
காமக்கணி நப்பாலத்தனார்
|
|
|
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
|
|
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
|
|
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
|
|
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
|
5
|
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை,
|
|
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
|
|
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
|
|
அமரும் நம் வயினதுவே; நமர் என
|
|
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
|
10
|
யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப்
|
|
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
|
|
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
|
|
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
|
15
|
மாரி மாலையும் தமியள் கேட்டே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - வடம வண்ணக்கன்
பேரி சாத்தனார்
|
|
|
செல்க, பாக! எல்லின்று பொழுதே
|
|
வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன்
|
|
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா,
|
|
கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை,
|
5
|
கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல் இவுளி,
|
|
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன,
|
|
வால் வெள் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
|
|
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி,
|
|
சாந்து புலர் அகலம் மறுப்ப, காண்தக,
|
10
|
புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில்,
|
|
தெறி நடை மரைக் கணம் இரிய, மனையோள்
|
|
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு உறுத்த
|
|
திரிமரக் குரல் இசை கடுப்ப, வரி மணல்
|
|
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ,
|
15
|
வரும்கொல் தோழி! நம் இன் உயிர்த் துணை
என,
|
|
சில் கோல் எல் வளை ஒடுக்கி, பல் கால்
|
|
அருங் கடி வியல் நகர் நோக்கி,
|
|
வருந்துமால், அளியள் திருந்திழைதானே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ஆவூர்
மூலங்கிழார் மகனார் பெருந்தலைச்
சாத்தனார்
|
|
|
கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,
|
|
நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,
|
|
நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்
|
|
புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,
|
5
|
வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய
|
|
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,
|
|
கால் என மருள, ஏறி, நூல் இயல்
|
|
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்
|
|
வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!
|
10
|
ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை
|
|
ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,
|
|
அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி
|
|
முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,
|
|
எல்லை போகிய புல்லென் மாலை,
|
15
|
புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர்,
|
|
கழி படர் உழந்த பனி வார் உண்கண்
|
|
நல் நிறம் பரந்த பசலையள்
|
|
மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - பேயனார்
|
|
|
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன
|
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை
|
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி,
|
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை
|
5
|
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை
|
|
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை
|
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு
|
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன்
|
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப,
|
10
|
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப்
|
|
பாணன் வந்தனன், தூதே; நீயும்
|
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி,
|
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ!
|
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார்
|
|
|
'நரை விராவுற்ற நறு மென் கூந்தற்
|
|
செம் முது செவிலியர் பல பாராட்ட,
|
|
பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி
|
|
மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ,
|
5
|
மனை உறை புறவின் செங் காற் சேவல்
|
|
துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல,
|
|
விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும்
|
|
நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை
|
|
புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல,
|
10
|
வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி,
|
|
வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும்,
|
|
பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி
|
|
இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப,
|
|
நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய,
|
15
|
தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென
|
|
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின்
|
|
நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான்
|
|
சொல்லிய அளவை, நீடாது, வல்லென,
|
|
தார் மணி மா அறிவுறாஅ,
|
20
|
ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே!
|
வினை முற்றி வந்து எய்திய
தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
|
|
|
மழை இல் வானம் மீன் அணிந்தன்ன,
|
|
குழை அமல் முசுண்டை வாலிய மலர,
|
|
வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப்
|
|
பெரிய சூடிய கவர் கோல் கோவலர்,
|
5
|
எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு,
|
|
நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர,
|
|
நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து,
|
|
ஏர்தரு கடு நீர் தெருவுதொறு ஒழுக,
|
|
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி,
|
10
|
கூதிர் நின்றன்றால், பொழுதே! காதலர்
|
|
நம் நிலை அறியார் ஆயினும், தம் நிலை
|
|
அறிந்தனர்கொல்லோ தாமே ஓங்கு நடைக்
|
|
காய் சின யானை கங்குல் சூழ,
|
|
அஞ்சுவர இறுத்த தானை
|
15
|
வெஞ் சின வேந்தன் பாசறையோரே?
|
பருவம் கண்டு, வன்புறை எதிர்
அழிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது;தோழி
தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - உம்பற்
காட்டு இளங்கண்ணனார்
|
|
|
இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து,
|
|
இகு பெயல் அழி துளி தலைஇ, வானம்
|
|
பருவம் செய்த பானாட் கங்குல்,
|
|
ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப,
|
5
|
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி,
|
|
திண் கால் உறியன், பானையன், அதளன்,
|
|
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப,
|
|
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்,
|
|
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப,
|
10
|
தெறி மறி பார்க்கும் குறு நரி வெரீஇ,
|
|
முள்ளுடைக் குறுந் தூறு இரியப் போகும்
|
|
தண் நறு புறவினதுவே நறு மலர்
|
|
முல்லை சான்ற கற்பின்
|
|
மெல் இயற் குறுமகள் உறைவு இன் ஊரே.
|
தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. - இடைக் காடனார்
|
|
|
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன
|
|
குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல்
|
|
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு,
|
|
குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி,
|
5
|
இன் துயில் எழுந்து, துணையொடு போகி,
|
|
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும்
|
|
புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி,
|
|
தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர்,
|
|
விசைத்த வில்லர், வேட்டம் போகி,
|
10
|
முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும்
|
|
காமர் புறவினதுவே காமம்
|
|
நம்மினும் தான் தலைமயங்கிய
|
|
அம் மா அரிவை உறைவு இன் ஊரே.
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். -
இடைக்காடனார்
|
|
உரை |
|
மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
|
|
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
|
|
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
|
|
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
|
5
|
நீர் வார் கண்ணின் கருவிளை மலர,
|
|
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
|
|
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
|
|
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
|
|
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
|
10
|
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச,
|
|
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
|
|
'காய் சின வேந்தன் பாசறை நீடி,
|
|
நம் நோய் அறியா அறனிலாளர்
|
|
இந் நிலை களைய வருகுவர்கொல்?' என
|
15
|
ஆனாது எறிதரும் வாடையொடு
|
|
நோனேன் தோழி! என் தனிமையானே.
|
பருவ வரவின்கண்
வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
|
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
|
|
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை
போல்,
|
|
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
|
|
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
|
5
|
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
|
|
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
|
|
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
|
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
|
|
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
|
10
|
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
|
|
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
|
|
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
|
|
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
|
|
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
|
15
|
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
|
|
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
|
|
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
|
|
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
|
|
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
|
20
|
நம் நோய் தன்வயின் அறியாள்,
|
|
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
|
பாசறைக்கண் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
|
|
உரை |
|
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின்,
|
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின்
|
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப,
|
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப,
|
5
|
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின்
|
|
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள,
|
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை,
|
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி
|
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன்
|
10
|
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர்
|
|
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம்
தொடைப்
|
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப,
|
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை
|
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என,
|
15
|
கடவுட் கற்பின் மடவோள் கூற,
|
|
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின்
|
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்!
|
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி!
|
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப்
|
20
|
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின்
|
|
இன் நகை இளையோள் கவவ,
|
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே!
|
வினை முற்றிப் புகுந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார்
|
|
உரை |
|
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
|
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
|
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
|
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
|
5
|
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப்
புறவில்
|
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
|
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
|
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
|
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு
தாஅய்,
|
10
|
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
|
|
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
|
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
|
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
|
|
செல்லும், நெடுந்தகை தேரே
|
15
|
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
|
வினை முற்றிய தலைமகன்
கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
உரை |
|
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
|
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
|
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
|
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
|
5
|
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால்
வீழ்த்து,
|
|
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
|
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
|
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
|
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
|
10
|
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
|
|
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
|
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
|
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
|
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
|
15
|
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
|
|
பொலிவன அமர்த்த உண்கண்,
|
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
கூத்தனார்
|
|
உரை |
|
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
|
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
|
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
|
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
|
5
|
கை மாண் தோணி கடுப்ப, பையென,
|
|
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
|
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
|
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
|
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
|
10
|
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
|
|
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
|
|
பயப்புறு படர் அட வருந்திய
|
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
உரை |
|
மத வலி யானை மறலிய பாசறை,
|
|
இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப,
|
|
வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு
|
|
கறவைப் புல்லினம் புறவுதொறு உகள,
|
5
|
குழல் வாய் வைத்தனர் கோவலர், வல்
விரைந்து,
|
|
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக்
|
|
கடு நடைப் புரவி வழிவாய் ஓட,
|
|
வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர்
|
|
புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து,
|
10
|
தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய,
|
|
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின்,
|
|
யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட
|
|
போது உறழ் கொண்ட உண்கண்
|
|
தீதிலாட்டி திரு நுதற் பசப்பே?
|
வினை முற்றிய தலைமகற்கு
உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க்
கூத்தன் கடுவன் மள்ளனார்
|
|
உரை |
|
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து,
|
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு
|
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க,
|
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன
|
5
|
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன்
|
|
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ,
|
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல
|
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர,
|
|
கார் தொடங்கின்றே காலை; காதலர்
|
10
|
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை,
|
|
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்;
|
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக்
|
|
கொலை குறித்தன்ன மாலை
|
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே!
|
பருவம் கண்டு அழிந்த
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை
மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
உரை |
|
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
|
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
|
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
|
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
|
5
|
தாழ்ந்த போல நனி அணி வந்து,
|
|
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
|
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
|
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
|
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
|
10
|
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
|
|
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
|
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
|
|
மணி மண்டு பவளம் போல, காயா
|
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
|
15
|
கார் கவின் கொண்ட காமர் காலை,
|
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
|
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
|
பாசறை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
இடைக்காடனார்
|
|
உரை |
|
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
|
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
|
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
|
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
|
5
|
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
|
|
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
|
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
|
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
|
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
|
10
|
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
|
|
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
|
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
|
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
|
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
|
வினை முற்றிய தலைமகனது வரவு
கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
உரை |
|
களவும் புளித்தன; விளவும் பழுநின;
|
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
|
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
|
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப்
புற்றத்து
|
5
|
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
|
|
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
|
|
இளையர் அருந்த, பின்றை, நீயும்
|
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
|
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
|
10
|
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
|
|
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
|
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
|
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
|
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
|
15
|
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
|
|
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
|
இரவுக்குறித் தலைமகளை
இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு
கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்
|
|
உரை |
மேல் |