பாலை |
'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், |
|
உருவக் குதிரை மழவர் ஓட்டிய |
|
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, |
|
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், |
|
5 |
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய |
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் |
|
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த |
|
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் |
|
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, |
|
10 |
அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், |
நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, |
|
அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், |
|
உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் |
|
வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, |
|
15 |
சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை |
நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் |
|
சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, |
|
உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் |
|
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? |
|
பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது-மாமூலனார் | |
உரை |
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன |
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் |
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, |
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, |
|
5 |
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை |
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, |
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, |
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, |
|
10 |
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் |
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், |
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, |
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் |
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா |
|
15 |
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், |
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை |
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் |
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? |
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார். | |
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள், |
|
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல, |
|
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ, |
|
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற |
|
5 |
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், |
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், |
|
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் |
|
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, |
|
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, |
|
10 |
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, |
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன், |
|
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, |
|
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், |
|
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, |
|
15 |
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் |
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு |
|
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி |
|
அன்ன ஆக' என்னுநள் போல, |
|
முன்னம் காட்டி, முகத்தின் உரையா, |
|
20 |
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, |
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, |
|
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் |
|
தூ நீர் பயந்த துணை அமை பிணையல் |
|
மோயினள் உயிர்த்த காலை, மா மலர் |
|
25 |
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் |
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி |
|
உழையம் ஆகவும் இனைவோள் |
|
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே! |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ | |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
| |
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
|
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்
காட்டு,
|
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
|
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
|
5
|
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
|
|
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
|
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
|
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான்
யாற்றுப்
|
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
|
10
|
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
|
|
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
|
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
|
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
|
|
அழுதல் மேவல ஆகி,
|
15
|
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள்
வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு,
தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது.
- ஒளவையார்
|
|
|
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
|
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
|
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
|
|
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
|
5
|
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
|
|
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
|
|
குழியில் கொண்ட மராஅ யானை
|
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
|
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
|
10
|
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
|
|
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
|
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
|
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
|
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
|
15
|
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
|
|
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
|
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
|
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
|
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
|
20
|
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத்
துயல்வர,
|
|
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
|
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
|
|
வெண் குருகு நரல, வீசும்
|
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
|
பொருள்வயிற் பிரியலுற்ற
தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது;
உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச்
சாத்தனார்
|
|
|
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
|
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
|
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
|
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
|
5
|
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
|
|
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
|
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
|
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
|
|
தோழிமாரும் யானும் புலம்ப,
|
10
|
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
|
|
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
|
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
|
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
|
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
|
15
|
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
|
|
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
|
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
|
|
குன்ற வேயின் திரண்ட என்
|
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
|
மகட்போக்கிய
தாய்சொல்லியது. - மாமூலனார்
|
|
|
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது
எறியினும்,
|
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
|
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
|
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
|
5
|
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
|
|
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
|
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
|
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
|
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
|
10
|
வல்லகொல், செல்லத் தாமே கல்லென
|
|
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
|
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
|
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
|
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள
இயம்பும்,
|
15
|
கடுங் கதிர் திருகிய, வேய் பயில்,
பிறங்கல்,
|
|
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
|
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
|
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
|
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
|
20
|
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
|
|
வைகுறு மீனின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
|
அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
|
|
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
|
|
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து
இசைக்கும்
|
5
|
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
|
|
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
|
|
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
|
|
மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
|
10
|
சேயிதழ் அனைய ஆகி, குவளை
|
|
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
|
|
உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
|
|
பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர்
அறல்
|
|
வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
|
15
|
சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
|
|
பூ வீ கொடியின் புல்லெனப் போகி,
|
|
அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
|
|
இயங்காது வதிந்த நம் காதலி
|
|
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!
|
நெஞ்சினாற் பொருள்
வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன்,
தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக்
கழறியது. - பொருந்தில் இளங்கீரனார்
|
|
|
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
|
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
|
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
|
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
|
5
|
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
|
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
|
|
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
|
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
|
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
|
10
|
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
|
|
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
|
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
|
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
|
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
|
15
|
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
|
|
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
|
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங்
கட்
|
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
|
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
|
20
|
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
|
|
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
|
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
|
|
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
|
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
|
25
|
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி
செத்து,
|
|
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
|
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
|
பொருள் வலிக்கப்பட்டுப்
பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று
மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. -
காவன்முல்லைப் பூதனார்
|
|
|
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
|
|
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
|
|
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
|
|
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
|
5
|
காடே கம்மென்றன்றே; அவல,
|
|
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
|
|
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
|
|
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
|
|
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
|
10
|
அனையகொல் வாழி, தோழி! மனைய
|
|
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
|
|
மௌவல், மாச் சினை காட்டி,
|
|
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
|
|
|
"நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல்
சாஅய்,
|
|
அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
|
|
தண் கயம் நண்ணிய பொழில்தொறும்,
காஞ்சிப்
|
|
பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
|
5
|
வதுவை நாற்றம் புதுவது கஞல,
|
|
மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
|
|
படு நா விளி யானடுநின்று, அல்கலும்
|
|
உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
|
|
இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
|
10
|
சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்
|
|
பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
|
|
இகழுநர் இகழா இள நாள் அமையம்
|
|
செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
|
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
|
15
|
வாராமையின் புலந்த நெஞ்சமொடு,
|
|
நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
|
|
மெல்லிய இனிய கூறி, வல்லே
|
|
வருவர் வாழி தோழி! பொருநர்
|
|
செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
|
20
|
பொதியிற் செல்வன், பொலந்தேர்த்
திதியன்,
|
|
இன் இசை இயத்தின் கறங்கும்
|
|
கல்மிசை அருவிய காடு இறந்தோரே.
|
பருவங் கண்டு அழிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்
|
|
|
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
|
|
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
|
|
கானம் கடிய என்னார், நாம் அழ,
|
|
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண்
தருமார்,
|
5
|
செல்ப" என்ப' என்போய்! நல்ல
|
|
மடவைமன்ற நீயே; வடவயின்
|
|
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
|
|
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின்
காக்கும்
|
|
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
|
10
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர்
வாய்
|
|
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
|
|
யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
|
|
தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
|
|
பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
|
15
|
வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்
|
|
குருதியொடு துயல்வந்தன்ன நின்
|
|
அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?
|
செலவு உணர்ந்து வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மதுரைக்கணக்காயனார்
|
|
|
"தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன்
தாள்,
|
|
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
|
|
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
|
|
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
|
5
|
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
|
|
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
|
|
மாவின் நறு வடி போல, காண்தொறும்
|
|
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
|
|
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
|
10
|
வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
|
|
தாழக் கூறிய தகைசால் நல் மொழி
|
|
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த
நின்
|
|
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
|
|
வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
|
15
|
வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
|
|
கொம்மை வாடிய இயவுள் யானை
|
|
நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
|
|
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
|
20
|
எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
|
|
நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
|
|
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
|
|
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!
|
வினை முற்றி மீண்ட தலைமகன்,
'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற
தலைமகட்குச் சொல்லியது. - வெள்ளாடியனார்
|
|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர்
மண்டிலம்
|
|
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
|
|
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
|
|
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
|
5
|
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
|
|
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
|
|
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
|
|
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
|
|
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
|
10
|
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்
|
|
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
|
|
'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு
|
|
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
|
|
தமிழ் கெழு மூவர் காக்கும்
|
15
|
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
|
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
|
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
|
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
|
5
|
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
|
|
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
|
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
|
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
|
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
|
10
|
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய்
|
|
வெம் பரல் அதர குன்று பல நீந்தி,
|
|
யாமே எமியம் ஆக, நீயே
|
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது
|
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை,
|
15
|
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின்
|
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல.
|
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம்
|
|
செய்வினை ஆற்றுற விலங்கின்,
|
20
|
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே?
|
தலைமகன் இடைச்சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை
அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
|
ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
|
|
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
|
|
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
|
|
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
|
5
|
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
|
|
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
|
|
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
|
|
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
|
|
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
|
10
|
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம்
|
|
துணிந்து, பிறள் ஆயினள்ஆயினும், அணிந்து
அணிந்து,
|
|
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்
|
|
மார்பு துணையாகத் துயிற்றுகதில்ல
|
|
துஞ்சா முழவின் கோவற் கோமான்
|
15
|
நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை,
|
|
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்
|
|
நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,
|
|
அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!
|
மகட்போக்கிய நற்றாய்
தெய்வத்திற்குப் பராஅயது.-குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு
இசைக்
|
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
|
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
|
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
|
5
|
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
|
|
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
|
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
|
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
|
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
|
10
|
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப்
பசுங் குடை,
|
|
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
|
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
|
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
|
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
|
15
|
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
|
|
மருதமர நிழல், எருதொடு வதியும்
|
|
காமர் வேனில்மன் இது,
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
|
தலைமகள் தோழிக்கு வன்புறை
எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய
தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று
மூதெயினனார்
|
|
|
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்
படர்ந்து,
|
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
|
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
|
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
|
5
|
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
|
|
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
|
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
|
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
|
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
|
10
|
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
|
|
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
|
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங்
காட்டு,
|
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால்
பட்டென,
|
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
|
15
|
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
|
|
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
|
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
|
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
|
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
|
20
|
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
|
|
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
|
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
|
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
|
|
ஏற்று ஏக்கற்ற உலமரல்
|
25
|
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!
|
பொருள் முற்றிய தலைமகன்
தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச்
செங்கண்ணனார்
|
|
|
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
|
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
|
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
|
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
|
5
|
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
|
|
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
|
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
|
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
|
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
|
10
|
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
|
|
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
|
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
|
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
|
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
|
15
|
அம் கலுழ் மாமை கிளைஇய,
|
|
நுண் பல் தித்தி, மாஅயோளே?
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து
சொல்லியது. - குன்றியனார்
|
|
|
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
|
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
|
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
|
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
|
5
|
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
|
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
|
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
|
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
|
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
|
10
|
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
|
|
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
|
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
|
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று
|
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
|
15
|
இன் துணைப் பிரியும் மடமையோரே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-
மதுரையாசிரியர் நல்லந்துவனார்
|
|
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
|
|
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
|
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
|
5
|
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
|
|
காடு இறந்தனரே, காதலர். மாமை,
|
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
|
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
10
|
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
|
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
ஆதிமந்தி போல, பேதுற்று
|
15
|
அலந்தனென் உழல்வென்கொல்லோ
பொலந்தார்,
|
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
|
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
|
|
உடை மதில் ஓர் அரண் போல,
|
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
|
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
|
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
|
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
|
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
|
5
|
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
|
|
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன்
இயைந்து,
|
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
|
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
|
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
|
10
|
ஒண் தொடி மகளிர் வெண் திரிக்
கொளாஅலின்,
|
|
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
|
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
|
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
|
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள்
எய்தி,
|
15
|
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
|
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
|
|
வேய் புரை பணைத் தோள், பாயும்
|
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
|
தலைமகன் இடைச் சுரத்து
அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. -
ஆலம்பேரி சாத்தனார்
|
|
|
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
|
|
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
|
|
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
|
|
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து
யாத்த
|
5
|
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
|
|
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
|
|
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
|
|
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
|
|
பல் கால் முயங்கினள்மன்னே! அன்னோ!
|
10
|
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி,
|
|
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
|
|
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
|
|
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
|
|
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியல் நகர்,
|
15
|
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல,
|
|
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
|
|
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
|
|
ஆடுவழி ஆடுவழி, அகலேன்மன்னே!
|
உடன்போயின தலைமகளை
நினைந்து, செவிலித்தாய் மனையின்கண்
வருந்தியது. - வண்ணப்புறக் கந்தரத்தனார்
|
|
|
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
|
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
|
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
|
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
|
5
|
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
|
|
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
|
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
|
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட்
பிணி
|
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
|
10
|
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
|
|
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
|
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
|
|
மனைமுதல் வினையொடும் உவப்ப,
|
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
|
பொருள்வயிற் பிரிவு
கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது.- பெருந்தேவனார்
|
|
|
அறியாய், வாழி தோழி! இருள் அற
|
|
விசும்புடன் விளங்கும் விரை செலல்
திகிரிக்
|
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
|
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
|
5
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப்
பிணவொடு
|
|
|
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
|
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
|
10
|
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
|
|
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
|
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
|
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
|
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
|
15
|
பொருளே காதலர் காதல்;
|
|
'அருளே காதலர்' என்றி, நீயே.
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - சீத்தலைச்
சாத்தனார்
|
|
|
காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
|
|
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
|
|
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
|
|
விளி முறை அறியா வேய் கரி கானம்,
|
5
|
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
|
|
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து
யாம்
|
|
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
|
|
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
|
|
கண்படை பெறேன், கனவ ஒண் படைக்
|
10
|
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
|
|
பொருது புண் நாணிய சேரலாதன்
|
|
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென,
|
|
இன்னா இன் உரை கேட்ட சான்றோர்
|
|
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்,
|
15
|
பெரும்பிறிது ஆகியாங்கு பிரிந்து இவண்
|
|
காதல் வேண்டி, எற் துறந்து
|
|
போதல்செல்லா என் உயிரொடு புலந்தே.
|
புணர்ந்துடன் போன
தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும்
அயலிலாட்டியார்க்கு உரைத்தது. - மாமூலனார்
|
|
|
சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
|
|
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
|
|
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
|
|
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
|
5
|
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
|
|
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
|
|
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
|
|
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
|
|
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,
|
10
|
யாமே எமியம்ஆக, தாமே
|
|
பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின்
|
|
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ, சிறு பீர்
|
|
வீ ஏர் வண்ணம் கொண்டன்றுகொல்லோ
|
|
கொய் சுவற் புரவிக் கொடித் தேர்ச்
செழியன்
|
15
|
முதுநீர் முன்துறை முசிறி முற்றி,
|
|
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின்
|
|
அரும் புண் உறுநரின் வருந்தினள், பெரிது
அழிந்து,
|
|
பானாட் கங்குலும் பகலும்
|
|
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே?
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.-
நக்கீரர்
|
|
|
தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
|
|
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
|
|
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
|
|
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
|
5
|
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
|
|
மரம் செல மிதித்த மாஅல் போல,
|
|
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
|
|
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
|
|
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
|
10
|
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,
|
|
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,
|
|
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,
|
|
இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த
|
|
தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்
|
15
|
தாம் பாராட்டிய காலையும் உள்ளார்
|
|
வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய்
நாட்டு
|
|
அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்
|
|
பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.-
மதுரை மருதன் இளநாகன்
|
|
|
'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
|
|
கோளுற விளியார், பிறர் கொள
விளிந்தோர்' எனத்
|
|
தாள் வலம்படுப்பச் சேட் புலம்
படர்ந்தோர்
|
|
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய்
உழந்து
|
5
|
ஆழல் வாழி, தோழி! தாழாது,
|
|
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்
கால்
|
|
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
|
|
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
|
|
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
|
10
|
நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும்
|
|
கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
|
|
மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
|
|
விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
|
|
பழகுவர்ஆதலோ அரிதே முனாஅது
|
15
|
முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி
|
|
பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
|
|
ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
|
|
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
![]() |
|
கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
|
|
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
|
|
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
|
|
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
|
5
|
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
|
|
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில்
எறிப்ப,
|
|
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
|
|
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
|
|
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
|
10
|
கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து,
|
|
மன்று நிறை பைதல் கூர, பல உடன்
|
|
கறவை தந்த கடுங் கால் மறவர்
|
|
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
|
|
முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
|
15
|
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
|
|
தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
|
|
'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
|
|
சேக் கோள் அறையும் தண்ணுமை
|
|
கேட்குநள்கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே.
|
தலைமகள் புணர்ந்துடன்
செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது.-
கருவூர்க் கண்ணம்புல்லனார்
|
|
|
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
|
|
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
|
|
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
|
|
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
|
5
|
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
|
|
பாடிச் சென்ற பரிசிலர் போல
|
|
உவ இனி வாழி, தோழி! அவரே,
|
|
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
|
|
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
|
10
|
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
|
|
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி
சுடர்
|
|
வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
|
|
மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
|
|
உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
|
15
|
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி,
|
|
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
|
|
ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
|
|
நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
|
|
நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
|
20
|
அரியவால்' என அழுங்கிய செலவே!
|
வேறுப்பட்ட தலைமகட்குத்
தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
|
|
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
|
|
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
|
|
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
|
5
|
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
|
|
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
|
|
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
|
|
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
|
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
10
|
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
|
|
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
|
|
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
|
15
|
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு
|
|
நிலம் படு மின்மினி போல, பல உடன்
|
|
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
|
|
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
|
பொருள்வயிற் பிரிந்தவழி
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - நோய்பாடியார்
|
|
|
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
|
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
|
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
|
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
|
5
|
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
|
|
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
|
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
|
|
கான மட மரைக் கணநிரை கவரும்
|
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
|
10
|
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
|
|
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
|
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
|
|
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
|
15
|
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
|
|
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
|
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
|
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
|
|
தலை நாள் அலரின் நாறும் நின்
|
20
|
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
|
'பொருள்வயிற் பிரிந்து
நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற
தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித்
தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார்
மகனார் பரங்கொற்றனார்
|
|
|
நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு,
குறைந்தோர்
|
|
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
|
|
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
|
|
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
|
5
|
மை இல் மான் இனம் மருள, பையென
|
|
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
|
|
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
|
|
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
|
10
|
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
|
|
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக்
|
|
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
|
|
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
|
|
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
|
15
|
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
|
|
இது கொல் வாழி, தோழி! என் உயிர்
|
|
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
|
|
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?
|
பொருள்வயிற் பிரிந்த
இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி
சொல்லியது - அந்தியிளங்கீரனார்
|
|
![]() |
|
பின்னொடு முடித்த மண்ணா முச்சி
|
|
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
|
|
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
|
|
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
|
5
|
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
|
|
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
|
|
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
|
|
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
|
|
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
|
10
|
இருவேம் நம் படர் தீர வருவது
|
|
காணிய வம்மோ காதல்அம் தோழி!
|
|
கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்
|
|
மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,
|
|
ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்
|
15
|
பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி
|
|
விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்
|
|
சென்ற தேஎத்து நின்றதால், மழையே.
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிகின்றான் குறித்த பருவ வரவு கண்டு
அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. -
எருமை வெளியனார்
|
|
|
"அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
|
|
பொருள்" என வலித்த பொருள் அல்
காட்சியின்
|
|
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
|
|
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
|
5
|
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
|
|
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
|
|
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
|
|
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
|
|
கல் நெறிப் படர்குவர்ஆயின் நல் நுதல்,
|
10
|
செயிர் தீர் கொள்கை, சில் மொழி, துவர்
வாய்,
|
|
அவிர் தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
|
|
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து,
|
|
ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
|
|
சென்று படு விறற் கவின் உள்ளி, என்றும்
|
15
|
இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும்
|
|
தருநரும் உளரோ, இவ் உலகத்தான்?' என-
|
|
மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன
|
|
அம் மா மேனி, ஐது அமை நுசுப்பின்;
|
|
பல் காசு நிரைத்த, கோடு ஏந்து, அல்குல்;
|
20
|
மெல் இயல் குறுமகள்! புலந்து பல கூறி
|
|
ஆனா நோயை ஆக, யானே
|
|
பிரியச் சூழ்தலும் உண்டோ,
|
|
அரிது பெறு சிறப்பின் நின்வயினானே?'
|
'பொருள்வயிற் பிரிவர்' என
வேறுபட்ட தலைமகட்கு, 'பிரியார்'எனத் தோழி
சொல்லியது. - மதுரைப்போத்தனார்
|
|
|
'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
|
|
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
|
|
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று
இன்னாச்
|
|
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
|
5
|
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
|
|
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
|
|
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
|
|
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
|
|
உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த
|
10
|
தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர,
|
|
செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்
|
|
கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்
|
|
புல் அரை இத்திப் புகர் படு நீழல்
|
|
எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,
|
15
|
வானவன் மறவன், வணங்குவில் தடக் கை,
|
|
ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்
|
|
பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த
|
|
திருந்துஇலை எஃகம் போல,
|
|
அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே.
|
தலைமகன் பிரியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்குவித்தது.-
மருதன் இள நாகனார்
|
|
|
தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
|
|
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
|
|
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
|
|
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
|
5
|
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
|
|
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
|
|
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
|
|
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
|
|
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
|
10
|
'வல்லாங்கு வருதும்' என்னாது, அல்குவர
|
|
வருந்தினை வாழி, என் நெஞ்சே! இருஞ் சிறை
|
|
வளை வாய்ப் பருந்தின் வான் கட் பேடை,
|
|
ஆடுதொறு கனையும் அவ் வாய்க் கடுந் துடிக்
|
|
கொடு வில் எயினர் கோட் சுரம் படர,
|
15
|
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை,
|
|
கல் பிறங்கு அத்தம் போகி,
|
|
நில்லாப் பொருட் பிணிப் பிரிந்த நீயே.
|
பொருள்வயிற் பிரிந்த
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - குடவாயிற் கீரத்தனார்
|
|
|
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
|
|
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
|
|
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
|
|
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
|
5
|
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
|
|
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
|
|
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
|
|
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
|
|
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி சிறந்த
|
|
செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
|
|
ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
|
|
மா வண் கடலன் விளங்கில் அன்ன, எம்
|
|
மை எழில் உண்கண் கலுழ
|
15
|
ஐய! சேறிரோ, அகன்று செய் பொருட்கே?
|
பிரிவுணர்த்திய தலைமகற்கு,
தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து
சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
|
|
|
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
|
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
|
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
|
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி
சிறந்து,
|
5
|
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு
பிளந்து,
|
|
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
|
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
|
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
|
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி
|
10
|
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும்,
|
|
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ,
|
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல்
|
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
|
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே.
|
தலைமகன் இடைச் சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
|
'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள்
நெகிழவும்,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
|
|
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
|
5
|
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
|
|
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
|
|
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
|
|
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
|
|
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
|
10
|
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை
|
|
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
|
|
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
|
|
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
|
|
வருதும், யாம்' எனத் தேற்றிய
|
15
|
பருவம்காண் அது; பாயின்றால் மழையே.
|
தலைமகன் பிரிய, வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- காட்டூர்
கிழார் மகனார் கண்ணனார்
|
|
|
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
|
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
|
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
|
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
|
5
|
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
|
|
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
|
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
|
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
|
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
|
10
|
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,
|
|
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால்
|
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
|
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல்
நகர்ச்
|
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
|
15
|
தாழ் இருங் கூந்தல் நம் காதலி
|
|
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.
|
வினை முற்றி மீளும் தலைமகன்
இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.- மதுரைப் பேராலவாயார்
|
|
|
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
|
|
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
|
|
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
|
|
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
|
5
|
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
|
|
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
|
|
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
|
|
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
|
|
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
|
10
|
விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்
|
|
மை படு திண் தோள் மலிர வாட்டி,
|
|
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய
|
|
திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த
|
|
படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,
|
15
|
அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்
|
|
கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,
|
|
மெல்லென் சேவடி மெலிய ஏக
|
|
வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து
|
20
|
அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,
|
|
இடு மணற் பந்தருள் இயலும்,
|
|
நெடு மென் பணைத் தோள், மாஅயோளே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. -
மதுரைக்காஞ்சிப் புலவர்
|
|
|
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
|
|
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
|
|
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
|
|
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
|
5
|
பாசி தின்ற பைங் கண் யானை
|
|
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
|
|
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
|
|
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர்
ஆயினும்,
|
|
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
|
10
|
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
|
|
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
|
|
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
|
|
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
|
|
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
|
15
|
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
|
|
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
|
|
குடநாடு பெறினும் தவிரலர்
|
|
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.
|
பிரிவிடை மெலிந்த
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
மாமூலனார்
|
|
![]() |
|
கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
|
|
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
|
|
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல்
சிறந்து;
|
|
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
|
5
|
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
|
|
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
|
|
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
|
|
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
|
|
வாடா வேம்பின், வழுதி கூடல்
|
10
|
நாள் அங்காடி நாறும் நறு நுதல்
|
|
நீள் இருங் கூந்தல் மாஅயோளொடு,
|
|
வரை குயின்றன்ன வான் தோய் நெடு நகர்,
|
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
|
|
நிவந்த பள்ளி, நெடுஞ் சுடர் விளக்கத்து,
|
15
|
நலம் கேழ் ஆகம் பூண் வடுப் பொறிப்ப,
|
|
முயங்குகம் சென்மோ நெஞ்சே! வரி நுதல்
|
|
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து,
|
|
மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி,
|
|
ஆள் கோள் பிழையா, அஞ்சுவரு தடக் கை,
|
20
|
கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் கோதை
|
|
திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை.
|
|
தெண் நீர் உயர் கரைக் குவைஇய
|
|
தண் ஆன்பொருநை மணலினும் பலவே.
|
வினை முற்றி மீளலுறும்
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - கணக்காயனார் மகனார்
நக்கீரனார்
|
|
|
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
|
|
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
|
|
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
|
|
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
|
5
|
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
|
|
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
|
|
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
|
|
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
|
|
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
|
10
|
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,
|
|
கௌவை மேவலர்ஆகி, 'இவ் ஊர்
|
|
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
|
|
புரையஅல்ல, என் மகட்கு' எனப் பரைஇ,
|
|
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
|
15
|
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?
|
போக்கு உடன்பட்ட தலைமகள்
தோழிக்குத் சொல்லியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
|
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
|
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
|
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
|
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
|
5
|
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
|
|
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
|
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
|
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
|
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
|
10
|
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
|
|
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
|
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
|
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
|
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
|
15
|
ஆழல்' என்றி தோழி! யாழ என்
|
|
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
|
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
|
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
|
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
|
20
|
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
|
|
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
|
|
புகை புரை அம் மஞ்சு ஊர,
|
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
|
|
|
வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன
|
|
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்
|
|
சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில்
|
|
மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
|
5
|
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை
|
|
அதிரல் பரந்த அம் தண் பாதிரி
|
|
உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ
|
|
மராஅ மலரொடு விராஅய், பராஅம்
|
|
அணங்குடை நகரின் மணந்த பூவின்
|
10
|
நன்றே, கானம்; நயவரும் அம்ம;
|
|
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
|
|
அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்,
|
|
பிடி மிடை, களிற்றின் தோன்றும்
|
|
குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே!
|
உடன்போகிய தலைமகளைத்
தலைமகன் மருட்டிச் சொல்லியது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
|
அம்ம வாழி, தோழி! 'இம்மை
|
|
நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்
|
|
தொன்றுபடு பழமொழி இன்று
பொய்த்தன்றுகொல்?
|
|
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
|
5
|
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்
|
|
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
|
|
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
|
|
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
|
|
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
|
10
|
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,
|
|
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங்
காட்டு,
|
|
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
|
|
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
|
|
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
|
15
|
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,
|
|
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
|
|
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
|
|
முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!
|
பிரிவிடை வேறுபட்ட
கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி
கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம். -
மாமூலனார்
|
|
|
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
|
|
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
|
|
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
|
|
காமர் சேவல் ஏமம் சேப்ப;
|
5
|
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது
|
|
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
|
|
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
|
|
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
|
|
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா
உயிர்க்கும்
|
10
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின்
|
|
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
|
|
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
|
|
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
|
|
தானே சென்ற நலனும்
|
15
|
நல்கார்கொல்லோ, நாம் நயந்திசினோரே?
|
தலைமகன் பிரிவின்கண்,
தலைமகள் தோழிக்குச் சொற்றது.-
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
|
|
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
|
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
|
|
நல் வரை நாடன் தற்பாராட்ட
|
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
|
5
|
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
|
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
|
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
|
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்
மருண்டு,
|
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
|
10
|
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
|
|
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
|
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து
|
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
|
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
|
15
|
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
|
|
முகை தலை திறந்த வேனிற்
|
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - தாயங்கண்ணனார்
|
|
|
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
|
|
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை
மெலிந்த
|
|
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
|
|
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு
தின்று
|
5
|
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,
|
|
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
|
|
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
|
|
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
|
|
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
|
10
|
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்
|
|
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
|
|
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
|
|
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
|
|
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
|
15
|
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு
|
|
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
|
|
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
|
|
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
|
|
மாலை இன் துணைஆகி, காலைப்
|
20
|
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,
|
|
மண மனை கமழும் கானம்
|
|
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.
|
தோழி தலைமகள் குறிப்பு
அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.-
காவிரிப்பூம்பட்டினத்துக்
காரிக்கண்ணனார்
|
|
|
பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ்
|
|
நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி,
|
|
நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே
|
|
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
|
5
|
காடு கால்யாத்த நீடு மரச் சோலை
|
|
விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை,
|
|
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
|
|
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச்
|
|
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டென,
|
10
|
வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர்,
|
|
கைப்பொருள் இல்லைஆயினும், மெய்க் கொண்டு
|
|
இன் உயிர் செகாஅர் விட்டு அகல்
தப்பற்குப்
|
|
பெருங் களிற்று மருப்பொடு வரி அதள்
இறுக்கும்
|
|
அறன் இல் வேந்தன் ஆளும்
|
15
|
வறன் உறு குன்றம் பல விலங்கினவே.
|
இடைச் சுரத்துத் தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-
கடுந்தொடைக் காவினார்
|
|
|
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
|
|
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
|
|
வருவர் வாழி, தோழி! அரச
|
|
யானை கொண்ட துகிற் கொடி போல,
|
5
|
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி
|
|
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
|
|
மழை என மருண்ட மம்மர் பல உடன்
|
|
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
|
|
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
|
10
|
அத்தக் கேழல் அட்ட நற் கோள்
|
|
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
|
|
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
|
|
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
|
|
புண் தேர் விளக்கின், தோன்றும்
|
15
|
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தோழி தலைமகளை ஆற்றுவித்தது.- பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
|
நன்று அல் காலையும் நட்பின் கோடார்,
|
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல்
சூழ்ச்சியின்,
|
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன்
|
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி,
|
5
|
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர்
|
|
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
|
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து,
|
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற,
|
|
நல்காது துறந்த காதலர், 'என்றும்
|
10
|
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி
|
|
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர்
|
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர்
|
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில்
|
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்
|
15
|
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல்
|
|
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி
|
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர்,
|
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
|
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர்
|
20
|
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி,
|
|
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என்
|
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
|
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை
|
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப்
|
25
|
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு,
|
|
மெய் இவண் ஒழியப் போகி, அவர்
|
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே!
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
|
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
|
|
பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்
|
|
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
|
|
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
|
5
|
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என்
|
|
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
|
|
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
|
|
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
|
|
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப்
பழிச்சிய
|
10
|
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்
|
|
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
|
|
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
|
|
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
|
|
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
|
15
|
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை,
|
|
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
|
|
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
|
|
கூடாமையின், நீடியோரே.
|
பிரிவிடை வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
|
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
|
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
|
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
|
5
|
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
|
|
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
|
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
|
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
|
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
|
10
|
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
|
|
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
|
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
|
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
|
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
|
15
|
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
|
|
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
|
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
|
|
வாணன் சிறுகுடி வடாஅது
|
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல்
போன்றே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - .........
|
|
|
'நுதலும் தோளும், திதலை அல்குலும்,
|
|
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
|
|
வருந்துவள், இவள்' எனத் திருந்துபு நோக்கி,
|
|
'வரைவு நன்று' என்னாது அகலினும், அவர் வறிது,
|
5
|
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,
|
|
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
|
|
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
|
|
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
|
|
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
|
10
|
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து,
|
|
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
|
|
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
|
|
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
|
|
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
|
15
|
துணிகுவர்கொல்லோ தாமே துணிகொள
|
|
மறப் புலி உழந்த வசி படு சென்னி
|
|
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
|
|
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
|
|
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
|
20
|
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொற்றது; தோழி
தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம். - குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
|
|
வேனில் நீடிய வான் உயர் வழிநாள்,
|
|
வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத்
|
|
தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
|
5
|
கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி,
|
|
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு
|
|
செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி,
|
|
சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து
|
|
அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு
|
10
|
தான் வரும் என்ப, தட மென் தோளி
|
|
உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட
|
|
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
|
|
கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து
|
|
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்,
|
15
|
கரு முக முசுவின் கானத்தானே.
|
தோழியால் தலைமகளை
உடன்வரும் எனக் கேட்ட தலைமகன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன்
இளநாகன்
|
|
![]() |
|
உண்ணாமையின் உயங்கிய மருங்கின்
|
|
ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,
|
|
வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்
|
|
கான யானை கவின் அழி குன்றம்
|
5
|
இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த
|
|
சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி
|
|
ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு
|
|
உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என
|
|
நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும்
|
10
|
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
|
|
கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,
|
|
இறவொடு வந்து கோதையொடு பெயரும்
|
|
பெருங் கடல் ஓதம் போல,
|
|
ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.
|
தலைமகன் இடைச் சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக்
கண்ணனார்
|
|
|
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ,
|
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி
|
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை
|
|
ஆலி அன்ன வால் வீ தாஅய்,
|
5
|
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத்
|
|
தாது உறு குவளைப்போது பிணி அவிழ,
|
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க்
|
|
கடாஅம் மாறிய யானை போல,
|
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ
|
10
|
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர,
|
|
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல்
|
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென,
|
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை;
|
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற
|
15
|
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின்
|
|
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்
|
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த
|
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,
|
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற
|
20
|
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த
|
|
பீடு இல் மன்னர் போல,
|
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே.
|
தலைமகன் வினை முற்றி
மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. -பரணர்
|
|
|
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
|
|
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
|
|
வலம் படு முரசிற் சேரலாதன்
|
|
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
|
5
|
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து,
|
|
நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
|
|
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
|
|
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
|
|
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவண்
|
10
|
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன
|
|
ஒரு நாள் ஒரு பகற் பெறினும், வழிநாள்
|
|
தங்கலர் வாழி, தோழி! செங் கோற்
|
|
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
|
|
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
|
15
|
கல்லா மழவர் வில் இடம் தழீஇ,
|
|
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
|
|
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
|
பிரிவிடை ஆற்றாளாகிய
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
மாமூலனார்
|
|
|
'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என
|
|
நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்
|
|
நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறைந்து
|
|
அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,
|
5
|
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்
|
|
தாழிமுதற் கலித்த கோழிலைப் பருத்திப்
|
|
பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,
|
|
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்
|
10
|
நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்
|
|
கலங்குமுனைச் சீறூர் கை தலைவைப்ப,
|
|
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,
|
|
செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்
|
|
அருஞ் சுரம் அரியஅல்ல; வார் கோல்
|
15
|
திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு
கதுப்பின்,
|
|
குவளை உண்கண், இவளொடு செலற்கு' என
|
|
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்
|
|
அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.
- குடவாயிற் கீரத்தனார் |
|
|
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
|
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
|
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
|
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
|
5
|
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
|
|
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
|
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
|
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
|
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
|
10
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
|
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
|
|
வருக' என்னுதிஆயின்,
|
15
|
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை
மருதன் இளநாகனார்
|
|
![]() |
|
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
|
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
|
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
|
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
|
5
|
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
|
|
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
|
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
|
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
|
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
|
10
|
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
|
|
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
|
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
|
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
|
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
|
15
|
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
|
|
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
|
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
|
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்'
எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்'
என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன்
தாமோதரனார்
|
|
|
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க,
|
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப்
|
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
|
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து,
|
5
|
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி,
|
|
பேதுற்றிசினே காதல்அம் தோழி!
|
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி,
|
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ,
|
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
|
10
|
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர்,
|
|
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை,
|
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
|
|
கழுவுள் காமூர் போலக்
|
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என்
நெஞ்சே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. -
பரணர்
|
|
|
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
|
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
|
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
|
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
|
5
|
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
|
|
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
|
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
|
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
|
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
|
10
|
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
|
|
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
|
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
|
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
|
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
|
15
|
நல் எழில் நெடு வேய் புரையும்
|
|
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
|
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர்
|
முதுகூத்தனார்
|
|
|
துஞ்சுவது போல இருளி, விண் பக
|
|
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
|
|
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
|
|
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
|
5
|
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;
|
|
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
|
|
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
|
|
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
|
|
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
|
10
|
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;
|
|
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு
நிழல்,
|
|
காமர் துணையொடு ஏமுற வதிய;
|
|
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
|
|
பரப்பியவைபோற் பாஅய், பல உடன்
|
15
|
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;
|
|
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
|
|
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
|
|
கருவிக் கார்இடி இரீஇய
|
|
பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.
|
பிரிவிடை மெலிந்த
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
இடைக்காடனார்
|
|
|
அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
|
|
கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்
|
|
புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;
|
|
நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது
|
5
|
உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,
|
|
மழை கால்நீங்கிய மாக விசும்பில்
|
|
குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
|
|
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;
|
|
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
|
10
|
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
|
|
விழவு உடன் அயர, வருகதில் அம்ம!
|
|
துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,
|
|
தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்
|
|
புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்
|
15
|
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ,
|
|
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர்
|
|
பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,
|
|
பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
|
|
கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
|
20
|
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
|
|
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்
|
|
செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்
|
|
வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன
|
|
நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்
|
25
|
புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை
|
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,
|
|
கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,
|
|
தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய
|
|
வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே.
|
'பிரிவிடை ஆற்றாள்' எனக்
கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. -
நக்கீரர்
|
|
![]() |
|
செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக்
|
|
காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின்,
|
|
நீடு சினை வறிய ஆக, ஒல்லென
|
|
வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும்
|
5
|
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு,
|
|
முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச்
|
|
சுடர் நிமிர் நெடுங் கொடி விடர் முகை
முழங்கும்
|
|
'வெம் மலை அருஞ் சுரம் நீந்தி ஐய!
|
|
சேறும்' என்ற சிறு சொற்கு இவட்கே,
|
10
|
வசை இல் வெம் போர் வானவன் மறவன்
|
|
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும்,
|
|
பொய்யா வாய்வாள், புனைகழல், பிட்டன்
|
|
மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன்
|
|
அகல் அறை நெடுஞ் சுனை, துவலையின் மலர்ந்த
|
15
|
|
|
கண் பனி கலுழ்ந்தன; நோகோ யானே.
|
பொருள்வயிற் பிரியக்
கருதிய தலைமகனை, தோழி, தலைமகளது ஆற்றாமை
கண்டு, செலவு அழுங்குவித்தது. - ஆலம்பேரி
சாத்தனார்
|
|
|
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
|
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
|
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
|
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள்
கொள,
|
5
|
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன்
காட்டு
|
|
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
|
|
வாள்வரி பொருத புண் கூர் யானை
|
|
புகர் சிதை முகத்த குருதி வார,
|
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
|
10
|
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
|
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
|
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
|
15
|
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
|
|
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
|
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
|
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
|
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
|
20
|
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
|
|
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
|
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
|
ஓங்குமலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த
|
|
வேங்கை வெறித் தழை வேறு வகுத்தன்ன
|
|
ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை
|
|
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த,
|
5
|
துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்தென,
|
|
பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை
|
|
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
|
|
நெறி படு கவலை நிரம்பா நீளிடை,
|
|
வெள்ளி வீதியைப் போல நன்றும்
|
10
|
செலவு அயர்ந்திசினால் யானே; பல புலந்து,
|
|
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி,
|
|
மருந்து பிறிது இன்மையின், இருந்து வினைஇலனே!
|
செலவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
ஒளவையார்
|
|
|
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த
|
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின்,
|
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப்
|
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும்
|
5
|
அத்த நீள் இடைப் போகி, நன்றும்
|
|
அரிது செய் விழுப் பொருள் எளிதினின்
பெறினும்
|
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர்
|
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
|
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
|
10
|
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
|
|
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ,
|
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய
|
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன்
|
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது,
|
15
|
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய,
|
|
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
|
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
|
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே.
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த்
தாயங்கண்ணனார்
|
|
|
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம்
நயந்து
|
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ,
|
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,
|
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள்
பிறிது
|
5
|
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு
|
|
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்
|
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த
|
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்
|
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்
|
10
|
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும்
|
|
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,
|
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு
|
|
உறுவது கூறும், சிறு செந் நாவின்
|
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல்
|
15
|
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப்
பூதரத்தனார்
|
|
![]() |
|
நோகோ யானே; நோதகும் உள்ளம்;
|
|
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ,
|
|
பந்துவழிப் படர்குவள் ஆயினும், நொந்து நனி,
|
|
வெம்பும்மன், அளியள்தானே இனியே,
|
5
|
வன்கணாளன் மார்புஉற வளைஇ,
|
|
இன் சொற் பிணிப்ப நம்பி, நம் கண்
|
|
உறுதரு விழுமம் உள்ளாள், ஒய்யெனத்
|
|
தெறு கதிர் உலைஇய வேனில் வெங் காட்டு,
|
|
உறு வளி ஒலி கழைக் கண் உறுபு தீண்டலின்,
|
10
|
பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர்
எரிப்
|
|
பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை
|
|
நல் அடிக்கு அமைந்தஅல்ல; மெல் இயல்
|
|
வல்லுநள்கொல்லோ தானே எல்லி
|
|
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி
|
15
|
மீனொடு பொலிந்த வானின் தோன்றி,
|
|
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க்
கோங்கின்
|
|
கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர்
|
|
கை விடு சுடரின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொற்றது. - சேரமான்
இளங்குட்டுவன்
|
|
![]() |
|
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
|
|
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
|
|
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
|
|
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
|
5
|
நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
|
|
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
|
|
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
|
|
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
|
|
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
|
10
|
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
|
|
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
|
|
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
|
|
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
|
|
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
|
15
|
விரல் ஊன்று வடுவின் தோன்றும்
|
|
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-பாலை பாடிய
பெருங்கடுங்கோ
|
|
![]() |
|
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட
|
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த
|
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி,
|
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர்,
|
5
|
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின்
|
|
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்
|
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,
|
|
கான யானை கவளம் கொள்ளும்
|
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்
|
10
|
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி!
|
|
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,
|
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,
|
|
வினை அழி பாவையின் உலறி,
|
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே!
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
வேம்பற்றூர்க் குமரனார்
|
|
![]() |
|
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின்
|
|
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை
|
|
உரனுடைச் சுவல பகடு பல பரப்பி
|
|
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்,
|
5
|
வடி உறு பகழிக் கொடு வில் ஆடவர்
|
|
அணங்குடை நோன் சிலை வணங்க வாங்கி,
|
|
பல் ஆன் நெடு நிரை தழீஇ, கல்லென
|
|
அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர்,
|
|
கனை குரற் கடுந் துடிப் பாணி தூங்கி,
|
10
|
உவலைக் கண்ணியர், ஊன் புழுக்கு அயரும்
|
|
கவலை, 'காதலர் இறந்தனர்' என, நனி
|
|
அவலம் கொள்ளல்மா, காதல் அம் தோழி!
|
|
விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை
|
|
நறும் பூஞ் சாரற் குறும் பொறைக் குணாஅது
|
15
|
வில் கெழு தடக் கை வெல் போர் வானவன்
|
|
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத்
|
|
தொடியுடைத் தட மருப்பு ஒடிய நூறி,
|
|
கொடுமுடி காக்கும் குரூஉகண் நெடு மதில்
|
|
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்,
|
20
|
ஆண்டு அமைந்து உறையுநர்அல்லர், நின்
|
|
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - ஆமூர்க்
கவுதமன் சாதேவனார்
|
|
![]() |
|
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
|
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
|
|
அடி அமை பகழி ஆர வாங்கி;
|
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
|
5
|
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
|
|
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
|
|
|
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
|
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
|
10
|
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
|
|
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
|
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
|
|
நல் வரல் இள முலை நனைய;
|
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
|
பிரிவுணர்த்திய தோழி,
தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே
உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று,
தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப்
புல்லங்கண்ணனார்
|
|
|
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
|
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
|
|
எமியம் ஆக, துனி உளம் கூர,
|
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
|
5
|
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
|
|
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
|
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
|
|
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
|
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
|
10
|
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
|
|
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து
அவிழ,
|
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
|
|
இனையை ஆகிச் செல்மதி;
|
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
|
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
|
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
|
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
|
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
|
5
|
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
|
|
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
|
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
|
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!'
என,
|
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
|
10
|
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
|
|
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
|
|
'தருமணற் கிடந்த பாவை என்
|
|
அருமகளே என முயங்கினள் அழுமே!
|
மகட் போக்கிய தாயது
நிலைமை கண்டார் சொல்லியது. - ......
|
|
|
வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
|
|
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
|
|
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
|
|
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
|
5
|
இனிது உடன் கழிந்தன்றுமன்னே; நாளைப்
|
|
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
|
|
சேக்குவம்கொல்லோ, நெஞ்சே! சாத்து
எறிந்து
|
|
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
|
|
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
|
10
|
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
|
|
முருங்கை மேய்ந்த பெருங் கை யானை
|
|
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
|
|
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
|
|
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
|
15
|
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
|
|
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
|
|
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
|
|
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
|
|
கூர் முகச் சிதலை வேய்ந்த
|
20
|
போர் மடி நல் இறைப் பொதியிலானே?
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச்
செலவு அழுங்கியது. -கடியலூர்
உருத்திரங்கண்ணனார்
|
|
|
மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட,
|
|
அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை,
|
|
புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன்
|
|
கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை,
|
5
|
ஞெலி கோற் சிறு தீ மாட்டி, ஒலி திரைக்
|
|
கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர்
|
|
சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக்
கூட்டும்
|
|
சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி
|
|
பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து,
|
10
|
செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை
|
|
மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக்
|
|
கயல் உமிழ் நீரின் கண் பனி வார,
|
|
பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு
|
|
வருந்துமால், அளியள், திருந்திழைதானே!
|
தலைமகன் இடைச் சுரத்துத்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
தொண்டியாமூர்ச் சாத்தனார்
|
|
|
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும்
|
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
|
|
பணை எழில் அழிய வாடும்; நாளும்
|
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது
|
5
|
இனையல் வாழி, தோழி! புணர்வர்
|
|
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள்
புரிந்து
|
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த
|
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள்
|
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார்,
|
10
|
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை
|
|
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின்,
|
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப்
|
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய,
|
|
கருங் கோட்டு இருப்பை ஊரும்
|
15
|
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார்
|
|
![]() |
|
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
|
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
|
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்'
எனச்
|
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
|
5
|
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
|
|
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
|
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
|
|
வருவர் வாழி, தோழி! பல புரி
|
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
|
10
|
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
|
|
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
|
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை
|
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
|
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
|
15
|
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
|
|
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
|
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
|
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப்
பூதியார்
|
|
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன்
சிலை
|
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
|
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப்
பெயர்ப்பின்,
|
5
|
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
|
|
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
|
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
|
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
|
|
வருதும்' என்றனர் அன்றே தோழி!
|
10
|
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
|
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
|
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
|
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
|
15
|
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
|
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
|
|
மண் பயம் பூப்பப் பாஅய்,
|
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி
சாத்தனார்.
|
|
|
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
|
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
|
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
|
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
|
5
|
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள்
ஐம்பால்
|
|
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார்,
காண்பின்
|
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
|
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
|
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
|
10
|
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
|
|
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
|
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
|
|
வல்லே வருவர்போலும் வெண் வேல்
|
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
|
15
|
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
|
|
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
|
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
|
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
|
|
அணங்குடை வன முலைத் தாஅய நின்
|
20
|
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர்
இளம் பொன்சாத்தன் கொற்றனார்
|
|
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
|
|
வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில்,
|
|
துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு,
|
|
சிறு கண் யானை நெடுங் கை நீட்டி
|
5
|
வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது,
|
|
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின்
|
|
விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர்
|
|
நல் நிலை பொறித்த கல் நிலை அதர,
|
|
அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச்
|
10
|
சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை,
|
|
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்
வாய்,
|
|
குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம்
|
|
மதி ஏர் வாள் நுதல் புலம்ப,
|
|
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே?
|
பிரிவு உணர்த்திய
தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி
நற்சேந்தனார்
|
|
|
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய்,
|
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின்,
|
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார்
|
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை
|
5
|
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ,
|
|
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப,
|
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
|
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
|
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு
|
10
|
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன்,
|
|
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க்
|
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி,
|
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
|
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
|
15
|
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை,
|
|
நான் மறை முது நூல் முக்கட் செல்வன்,
|
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய
|
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
|
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும்
|
20
|
மகர நெற்றி வான் தோய் புரிசைச்
|
|
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல்
|
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர்
|
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்,
|
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள்,
|
25
|
அணங்குசால், அரிவை இருந்த
|
|
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே.
|
இடைச் சுரத்து ஒழியக் கருதிய
நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்
|
|
|
'குவளை உண்கண் கலுழவும், திருந்திழைத்
|
|
திதலை அல்குல் அவ் வரி வாடவும்,
|
|
அத்தம் ஆர் அழுவம் நத் துறந்து அருளார்
|
|
சென்று சேண் இடையர் ஆயினும், நன்றும்
|
5
|
நீடலர்' என்றி தோழி! பாடு ஆன்று
|
|
பனித் துறைப் பெருங் கடல் இறந்து, நீர்
பருகி,
|
|
குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு,
|
|
வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி,
|
|
இருங் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி,
|
10
|
காலை வந்தன்றால் காரே மாலைக்
|
|
குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி
|
|
வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம்
|
|
கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற,
|
|
பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு
|
15
|
வருந்துவம் அல்லமோ, பிரிந்திசினோர்
திறத்தே?
|
தலைமகன் குறித்த பருவ வரவு
கண்டு, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -கருவூர்க்
கலிங்கத்தார்
|
|
|
எல் வளை ஞெகிழச் சாஅய், ஆயிழை
|
|
நல் எழிற் பணைத் தோள் இருங் கவின் அழிய,
|
|
பெருங் கையற்ற நெஞ்சமொடு நத் துறந்து,
|
|
இரும்பின் இன் உயிர் உடையோர் போல,
|
5
|
வலித்து வல்லினர், காதலர்; வாடல்
|
|
ஒலி கழை நிவந்த நெல்லுடை நெடு வெதிர்
|
|
கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய,
|
|
பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின்
|
|
வேனில் அத்தத்து ஆங்கண், வான் உலந்து
|
10
|
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
|
|
பெரு விழா விளக்கம் போல, பல உடன்
|
|
இலை இல மலர்ந்த இலவமொடு
|
|
நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
பாலைபாடிய பெருங்கடுங்கோ
|
|
|
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
|
|
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
|
|
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
|
|
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
|
5
|
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
|
|
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
|
|
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
|
|
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
|
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
|
10
|
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
|
|
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
|
|
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
|
|
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
|
|
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
|
15
|
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
|
|
வேனில் வெற்பின் கானம் காய,
|
|
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
|
|
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
|
|
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
|
20
|
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
|
|
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
|
|
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
|
|
வைகு கடல் அம்பியின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன்
பிரிவின்கண் தலைமகட்குத் தோழி
சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்
|
|
|
பசும் பழப் பலவின் கானம் வெம்பி,
|
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி,
|
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்
|
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு
|
5
|
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி,
|
|
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன்
|
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென,
|
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற,
|
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு
|
10
|
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும்
|
|
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ,
|
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ்
|
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம்
|
|
தேர் ஊர் தெருவில் ததும்பும்
|
15
|
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - கயமனார்
|
|
|
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
|
|
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
|
|
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
|
|
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
|
5
|
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
|
|
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
|
|
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து
அவர்
|
|
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
|
|
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
|
10
|
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
|
|
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
|
|
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
|
|
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
|
|
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
|
15
|
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
|
|
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
|
|
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச்
செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக்
கந்தரத்தனார்
|
|
|
கான் உயர் மருங்கில் கவலை அல்லது,
|
|
வானம் வேண்டா வில் ஏர் உழவர்
|
|
பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த,
|
|
பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்,
|
5
|
பொறித்த போலும் வால் நிற எருத்தின்,
|
|
அணிந்த போலும் செஞ் செவி, எருவை;
|
|
குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து
|
|
அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட,
|
|
விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி
|
10
|
கொல் பசி முது நரி வல்சி ஆகும்
|
|
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப்
|
|
பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி,
|
|
முருந்து ஏர் முறுவல், இளையோள்
|
|
பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே.
|
பொருள் வலித்த
நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட்
குறுமகள்
|
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே,
|
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி,
|
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி,
|
5
|
உவந்து, இனிது அயரும் என்ப; யானும்,
|
|
மான் பிணை நோக்கின் மட நல்லாளை
|
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்,
|
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள்,
|
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய
|
10
|
நலம் புனை உதவியும் உடையன்மன்னே;
|
|
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல;
|
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி,
|
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல்,
|
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல!
|
15
|
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்;
|
|
மாறா வருபனி கலுழும் கங்குலில்,
|
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர்,
|
|
எம் மனை முந்துறத் தருமோ?
|
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே?
|
மகட் போக்கிய நற்றாய்
சொல்லியது. - கயமனார்
|
|
|
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும்,
|
|
பூ நெகிழ் அணையின் சாஅய தோளும்,
|
|
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
|
|
தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம்
|
5
|
இனையல் வாழி, தோழி! முனை எழ
|
|
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின்,
|
|
மறம் மிகு தானை, கண்ணன் எழினி
|
|
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்,
|
|
நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ
|
10
|
தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல்
|
|
மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
|
|
புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு,
|
|
கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு
|
|
இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர,
|
15
|
பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி,
|
|
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம்
|
|
வினை வலியுறூஉம் நெஞ்சமொடு
|
|
இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்
|
|
|
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன்,
|
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும்
|
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து,
|
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர,
|
5
|
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல்
|
|
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ,
|
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை,
|
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன,
|
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்,
|
10
|
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய
|
|
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே
|
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும்
|
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல்
|
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும்
|
15
|
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப,
|
|
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல்
|
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட,
|
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது,
|
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்,
|
20
|
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய,
|
|
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்,
|
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்
|
|
இழந்த நாடு தந்தன்ன
|
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
கல்லாடனார்
|
|
|
அம்ம, வாழி தோழி! 'பொன்னின்
|
|
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை
|
|
வினை நவில் யானை விறற் போர்ப்
பாண்டியன்
|
|
புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
|
5
|
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து,
|
|
தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல்
|
|
பழையர் மகளிர் பனித் துறைப் பரவ,
|
|
பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை,
|
|
உரு கெழு பெருங் கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
|
10
|
அலரும் மன்று பட்டன்றே; அன்னையும்
|
|
பொருந்தாக் கண்ணள், வெய்ய உயிர்க்கும்'
என்று
|
|
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
|
|
வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும்,
|
|
ஆண்டு அமைந்து உறைநர்அல்லர் முனாஅது
|
15
|
வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன்,
|
|
பெருங் கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
|
|
இருள் துணிந்தன்ன குவவு மயிர்க் குருளைத்
|
|
தோல் முலைப் பிணவொடு திளைக்கும்
|
|
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. - மாமூலனார்
|
|
![]() |
|
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
|
|
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
|
|
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
|
|
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
|
5
|
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு
அறியேன்,
|
|
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
|
|
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
|
|
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
|
|
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
|
10
|
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
|
|
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
|
|
அன்னேன் அன்மை நன் வாயாக,
|
|
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
|
|
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
|
15
|
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
|
|
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
|
|
நுனை குழைத்து அலமரும் நொச்சி
|
|
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கபிலர்
|
|
|
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
|
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர்
போல,
|
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
|
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
|
5
|
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
|
|
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
|
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
|
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
|
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
|
10
|
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
|
|
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும்
பெயர்க்
|
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
|
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
|
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
|
15
|
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
|
|
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
|
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
|
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
|
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
|
20
|
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
|
|
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
|
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
|
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச்
சொல்லியது.- நக்கீரர்
|
|
|
அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
|
|
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல்
அமிழ்தம்
|
|
குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப்
|
|
படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர்
|
5
|
நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக்
|
|
குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின்,
|
|
வெஞ் சுரம் போழ்ந்த, அஞ்சுவரு கவலை,
|
|
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள,
|
|
வெயில் தின வருந்திய, நீடு மருப்பு ஒருத்தல்
|
10
|
பிணர் அழி பெருங் கை புரண்ட கூவல்
|
|
தெண் கண் உவரிக் குறைக் குட முகவை,
|
|
அறனிலாளன் தோண்ட, வெய்து உயிர்த்து,
|
|
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள்கொல்லோ
|
|
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக்
|
15
|
கூழை உளர்ந்து மோழைமை கூறவும்,
|
|
மறுத்த சொல்லள் ஆகி,
|
|
வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - மதுரை எழுத்தாளன்
சேந்தம்பூதனார்
|
|
|
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும்
|
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே,
|
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர்
கோமான்,
|
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன்,
|
5
|
நேரா எழுவர் அடிப்படக் கடந்த
|
|
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என,
|
|
ஆழல் வாழி, தோழி! அவரே,
|
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி
|
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
|
10
|
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து
|
|
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல்
|
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
|
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில்
|
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
|
15
|
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி,
|
|
நிலை பெறு கடவுள் ஆக்கிய,
|
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
கல்லாடனார்
|
|
|
கேளாய், எல்ல! தோழி! வாலிய
|
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
|
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
|
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு
உரிஞுதொறும்,
|
5
|
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
|
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
|
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
|
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
|
10
|
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
|
|
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
|
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
|
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
|
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
|
15
|
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
|
|
நீர் ஒலித்தன்ன பேஎர்
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது. -மாமூலனார்
|
|
|
வினை நவில் யானை விறற் போர்த்
தொண்டையர்
|
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு
|
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்,
|
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி
|
5
|
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி,
|
|
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை
|
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும்
|
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,
|
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை
|
10
|
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது,
|
|
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப்
|
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப்
|
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து,
|
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும்
|
15
|
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை
|
|
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத்
தோள்
|
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர்
|
|
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும்,
|
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும்
|
20
|
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக்
கை,
|
|
வலம் படு வென்றி வாய் வாள், சோழர்
|
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த
|
|
அறல் என நெறிந்த கூந்தல்,
|
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -
தாயங்கண்ணனார்
|
|
|
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
|
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
|
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு
நெஞ்சமொடு
|
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
|
5
|
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
|
|
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல
|
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
|
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
|
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
|
10
|
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,
|
|
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
|
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
|
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
|
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
|
15
|
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
|
|
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
|
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.
|
செலவு உணர்த்திய தோழி,
தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு
அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்
|
|
|
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,
|
|
எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,
|
|
துவலை தூவல் கழிய, அகல் வயல்
|
|
நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்
|
5
|
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர,
|
|
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை
|
|
நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய
|
|
தோல் எறி பாண்டிலின் வாலிய மலர,
|
|
கோழிலை அவரைக் கொழு முகை அவிழ,
|
10
|
ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட,
|
|
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென
|
|
அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,
|
|
அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,
|
|
எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்
|
15
|
செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே;
|
|
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த
|
|
பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,
|
|
இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,
|
|
எயிறு தீப் பிறப்பத் திருகி,
|
20
|
நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே.
|
பிரிவு உணர்த்திய
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
|
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி,
|
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்,
|
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப்
|
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல்
|
5
|
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி,
|
|
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால்,
|
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி,
|
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து,
யான்
|
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக்
குறுமகள்
|
10
|
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என,
|
|
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்
|
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச்
|
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்
|
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல்,
|
15
|
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர்
|
|
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை,
|
|
மடத் தகை மெலியச் சாஅய்,
|
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே.
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
|
நனை விளை நறவின் தேறல் மாந்தி,
|
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ,
|
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என,
|
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,
|
5
|
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல்,
|
|
மதி உடம்பட்ட மை அணற் காளை
|
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து,
|
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு,
நின்
|
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு
|
10
|
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை,
|
|
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை
|
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ,
|
|
இரும் பிடி இரியும் சோலை
|
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே.
|
தலைமகற்குப் போக்கு
உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு
உடன்படச் சொல்லியது. - கயமனார்
|
|
|
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
|
|
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
|
|
ஆழல் வாழி, தோழி! கேழல்
|
|
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
|
5
|
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
|
|
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங்
காட்டு
|
|
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
|
|
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
|
|
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
|
10
|
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
|
|
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
|
|
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
|
|
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
|
|
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
|
15
|
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்
|
|
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
|
|
|
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
|
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
|
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
|
|
இன்றே இவணம் ஆகி, நாளை,
|
5
|
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
|
|
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
|
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார்
கோல்
|
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
|
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
|
10
|
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
|
|
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
|
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
|
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
|
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
|
15
|
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
செறி தொடி முன்கை, நம் காதலி
|
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
|
'நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே;
|
|
திதலை அல்குல் வரியும் வாடின;
|
|
என் ஆகுவள்கொல் இவள்?' என, பல் மாண்
|
|
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி,
|
5
|
இனையல் வாழி, தோழி! நனை கவுள்
|
|
காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு
|
|
முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப்
|
|
புலிக் கேழ் வேங்கைப் பூஞ் சினை புலம்ப,
|
|
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்
|
10
|
செந் நிலப் படு நீறு ஆடி, செரு மலைந்து,
|
|
களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம்
|
|
பல இறந்து அகன்றனர் ஆயினும், நிலைஇ,
|
|
நோய் இலராக, நம் காதலர்! வாய் வாள்,
|
|
தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின்,
|
15
|
வருநர் வரையாப் பெரு நாள் இருக்கை,
|
|
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப்
|
|
பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர்த்
தழும்பன்
|
|
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்,
|
|
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்,
|
20
|
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து,
|
|
எல் உமிழ் ஆவணத்து அன்ன,
|
|
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே!
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது;
பிரிவின்கண் வேறுபட்ட தோழிக்குத்
தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - நக்கீரர்
|
|
|
பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன்
|
|
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென,
|
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி
|
5
|
குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன்
|
|
பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண்,
|
|
நெடுஞ் சேண் இடைய குன்றம் போகி,
|
|
பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள்
|
|
நம் இன்று ஆயினும் முடிக, வல்லென,
|
10
|
பெருந் துனி மேவல்! நல்கூர் குறுமகள்!
|
|
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில்
நீர்
|
|
பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்ப,
|
|
பொன் ஏர் பசலை ஊர்தர, பொறி வரி
|
|
நல் மா மேனி தொலைதல் நோக்கி,
|
15
|
இனையல் என்றி; தோழி! சினைய
|
|
பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப்
|
|
போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து,
|
|
அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை,
|
|
செங் கண் இருங் குயில் நயவரக் கூஉம்
|
20
|
இன் இளவேனிலும் வாரார்,
|
|
'இன்னே வருதும்' எனத் தெளித்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளை வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள், வன்புறை எதிர்
அழிந்து, சொல்லியது. - மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார்
|
|
|
'செறுவோர் செம்மல் வாட்டலும்,
சேர்ந்தோர்க்கு
|
|
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்,
|
|
இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி,
|
|
நல் இசை வலித்த நாணுடை மனத்தர்
|
5
|
கொடு விற் கானவர் கணை இடத்
தொலைந்தோர்,
|
|
படு களத்து உயர்த்த மயிர்த் தலைப்
பதுக்கைக்
|
|
கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
|
|
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை
|
|
வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக
|
10
|
வருவர் வாழி, தோழி! பொருவர்
|
|
செல் சமம் கடந்த செல்லா நல் இசை,
|
|
விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட்
பாண்டியன்
|
|
பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின்
|
|
ஆடு வண்டு அரற்றும் முச்சித்
|
15
|
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -மதுரை
ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
![]() |
|
அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின்
|
|
அலர் முலை நனைய, அழாஅல் தோழி!
|
|
எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம்
|
|
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென,
|
5
|
ஊன் இல் யானை உயங்கும் வேனில்,
|
|
மறப் படைக் குதிரை, மாறா மைந்தின்,
|
|
துறக்கம் எய்திய தொய்யா நல் இசை
|
|
முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல்
|
|
பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல்
|
10
|
கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு,
|
|
குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
|
|
சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி
|
|
மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ,
|
|
பொருள்வயின் நீடலோஇலர் நின்
|
15
|
இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. -மாமூலனார்
|
|
|
அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து
|
|
உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும்,
|
|
சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ?
|
|
பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து,
|
5
|
விண்டு முன்னிய கொண்டல் மா மழை
|
|
மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,
|
|
வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி
|
|
சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ,
|
|
சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ
|
10
|
விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய,
|
|
களவன் மண் அளைச் செறிய, அகல் வயல்
|
|
கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ
|
|
மாரி அம் குருகின் ஈரிய குரங்க,
|
|
நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி,
|
15
|
பனி கடி கொண்ட பண்பு இல் வாடை
|
|
மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய,
|
|
'நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு
|
|
தொல் நலம் சிதையச் சாஅய்,
|
|
என்னள்கொல் அளியள்?' என்னாதோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர,
தோழிக்குச் சொல்லியது. - கழார்க்கீரன்
எயிற்றியார்
|
|
![]() |
|
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ
|
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப,
|
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின்
|
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ,
|
5
|
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து
|
|
இன்னா கழியும் கங்குல்' என்று நின்
|
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப,
|
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
|
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை
|
10
|
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு,
|
|
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
|
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு,
|
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
|
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும்,
|
15
|
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து
|
|
ஐய அமர்த்த உண்கண் நின்
|
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார்
|
|
![]() |
|
அளிதோதானே; எவன் ஆவதுகொல்?
|
|
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
|
|
'புலி என உலம்பும் செங் கண் ஆடவர்,
|
|
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
|
5
|
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
|
|
விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும்
|
|
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி,
|
|
புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின்,
|
|
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
|
10
|
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
|
|
ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே,
|
|
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?' என,
|
|
குறு நெடும் புலவி கூறி, நம்மொடு
|
|
நெருநலும் தீம் பல மொழிந்த
|
15
|
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே!
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
![]() |
|
'துனி இன்று இயைந்த துவரா நட்பின்
|
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது
|
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும்,
|
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய
|
5
|
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை
|
|
மூங்கில் இள முளை திரங்க, காம்பின்
|
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து
|
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை,
|
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி,
|
10
|
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை
|
|
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது,
அலங்குதலை
|
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும்
|
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய்
|
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச்
|
15
|
செம் முக மந்தி ஆடும்
|
|
நல் மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார்
|
|
|
அவரை ஆய் மலர் உதிர, துவரின
|
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
|
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல்
பகன்றைக்
|
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
|
5
|
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
|
|
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க்
கழனி
|
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
|
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
|
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
|
10
|
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
|
|
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
|
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
|
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
|
|
நமக்கே எவ்வம் ஆகின்று;
|
15
|
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!
|
தலைமகன் பிரிவின்கண்
வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்'
என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார்
மகனார் நெய்தல் தத்தனார்
|
|
|
'உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார்
|
|
நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்' என
|
|
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்
|
|
நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி,
|
5
|
மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில்,
|
|
செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை
|
|
வல் வில் இளையர் தலைவர், எல் உற,
|
|
வரி கிளர் பணைத் தோள், வயிறு அணி திதலை,
|
|
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில்,
|
10
|
மகிழ் நொடை பெறாஅராகி, நனை கவுள்
|
|
கான யானை வெண் கோடு சுட்டி,
|
|
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும்
|
|
அரு முனைப் பாக்கத்து அல்கி, வைகுற,
|
|
நிழல் படக் கவின்ற நீள்அரை இலவத்து
|
15
|
அழல் அகைந்தன்ன அலங்குசினை ஒண் பூக்
|
|
குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண்,
|
|
குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு |
|
கடுங் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்
|
|
கல் நெடுங் கவலைய கானம் நீந்தி,
|
20
|
அம் மா அரிவை ஒழிய,
|
|
சென்மோ நெஞ்சம்! வாரலென் யானே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சினைக் கழறி, தலைமகன் சொல்லிச், செலவு
அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை
|
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர்
|
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து,
|
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை,
|
5
|
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின்,
|
|
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும்
|
|
அரிய கானம் என்னார், பகை பட
|
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக்
|
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும்
|
10
|
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி,
|
|
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின்
|
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக்
|
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை
மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார்
|
|
|
அம்ம வாழி, தோழி! பல் நாள்
|
|
இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார்
|
|
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை
|
|
இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும்
|
5
|
பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார்
பூட்டி,
|
|
சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
|
|
ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ,
|
|
நெடுந் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும்
பூண்
|
|
பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
|
10
|
நல் எழில் இள நலம் தொலையினும், நல்கார்
|
|
பல் பூங் கானத்து அல்கு நிழல் அசைஇ,
|
|
தோகைத் தூவித் தொடைத் தார் மழவர்
|
|
நாகு ஆ வீழ்த்து, திற்றி தின்ற
|
|
புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை
|
15
|
நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த
|
|
வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து,
|
|
வேறு வேறு கவலைய ஆறு பரிந்து, அலறி,
|
|
உழை மான் இன நிரை ஓடும்
|
|
கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு
ஆற்றாளாகிய தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. - நக்கீரனார்
|
|
|
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
|
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
|
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
|
5
|
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
|
|
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
|
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
|
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
|
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
|
10
|
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
|
|
பணியாமையின், பகை தலைவந்த
|
|
மா கெழு தானை வம்ப மோரியர்
|
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த
|
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
|
15
|
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
|
|
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
|
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
|
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
|
|
நிரம்பா நீள் இடைப் போகி,
|
20
|
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல்
ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
|
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
|
|
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப்
போழ,
|
|
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
|
|
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
|
5
|
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
|
|
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
|
|
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
|
|
கழியாமையே, அழி படர் அகல,
|
|
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
|
10
|
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
|
|
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
|
|
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
|
|
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
|
|
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
|
15
|
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
|
|
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
|
|
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
|
|
நிரை வளை ஊருந் தோள்' என,
|
|
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச்
சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
|
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
|
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
|
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
|
5
|
பொம்மல் ஓதி பொதுள வாரி,
|
|
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
|
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
|
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
|
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
|
10
|
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
|
|
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
|
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
|
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
|
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
|
15
|
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
|
|
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
|
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
|
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
|
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
|
20
|
வெள் அரா மிளிர வாங்கும்
|
|
பிள்ளை எண்கின் மலைவயினானே.
|
உடன் போகாநின்ற
தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர்
மருத்துவன் தாமோதரனார்
|
|
|
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
|
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
|
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
|
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
|
5
|
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர்
|
|
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
|
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
|
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
|
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
|
10
|
போது வந்தன்று, தூதே; நீயும்
|
|
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
|
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
|
|
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
|
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
|
15
|
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
|
|
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
|
|
புலி மருள் செம்மல் நோக்கி,
|
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!
|
உடன்போக்கு நேர்ந்த
தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார்
|
|
|
கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ
|
|
வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர,
|
|
சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த்
|
|
தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல்
|
5
|
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச்
|
|
சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, 'நின்
|
|
அணி மாண் சிறுபுறம் காண்கம்; சிறு நனி
|
|
ஏகு' என, ஏகல் நாணி, ஒய்யென
|
|
மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய்,
|
10
|
நின்று தலை இறைஞ்சியோளே; அது கண்டு,
|
|
|
|
அருஞ் சுரத்து அல்கியேமே இரும் புலி
|
|
களிறு அட்டுக் குழுமும் ஓசையும், களி பட்டு
|
|
வில்லோர் குறும்பில் ததும்பும்,
|
15
|
வல் வாய்க் கடுந் துடிப் பாணியும் கேட்டே.
|
புணர்ந்து உடன் போயின காலை,
இடைச் சுரத்துப் பட்டதனை மீண்டு வந்த
காலத்துத் தோழிக்குத் தலைமகன்
சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
![]() |
|
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத்
தோன்றி,
|
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
|
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
|
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
|
5
|
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
|
|
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
|
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
|
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
|
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
|
10
|
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
|
|
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
|
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
|
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
|
|
திரு நுதல் பொலிந்த என் பேதை
|
15
|
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார்
|
|
|
புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,
|
|
பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்
|
|
இமயச் செவ் வரை மானும்கொல்லோ?
|
|
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
|
5
|
சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை
|
|
நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?
|
|
எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி
|
|
நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல்,
|
|
குழற் குரல், பாவை இரங்க, நத்துறந்து,
|
10
|
ஒண் தொடி நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய, பொறை
அடைந்து,
|
|
இன் சிலை எழில் ஏறு கெண்டி, புரைய
|
|
நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து
எடுத்து,
|
|
அணங்கு அரு மரபின் பேஎய் போல
|
15
|
விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க,
|
|
துகள் அற விளைந்த தோப்பி பருகி,
|
|
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்
|
|
புலாஅல் கையர், பூசா வாயர்,
|
|
ஒராஅ உருள் துடி குடுமிக் குராலொடு
|
20
|
மராஅஞ் சீறூர் மருங்கில் தூங்கும்
|
|
செந் நுதல் யானை வேங்கடம் தழீஇ,
|
|
வெம் முனை அருஞ் சுரம் இறந்தோர்
|
|
நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச்
சொல்லியது. -மாமூலனார்
|
|
|
'நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து,
|
|
அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து,
|
|
திறம் வேறு ஆகல் எற்று?' என்று ஒற்றி,
|
|
இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து,
|
5
|
உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை,
|
|
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை,
|
|
மருப்புக் கடைந்தன்ன, கொள்ளை வான் பூ
|
|
மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர,
|
|
மை பட்டன்ன மா முக முசுவினம்
|
10
|
பைது அறு நெடுங் கழை பாய்தலின், ஒய்யென
|
|
வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய்,
|
|
உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும்
|
|
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர்
|
|
தாம் பழி உடையர்அல்லர்; நாளும்
|
15
|
நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா, வயங்கு
வினை
|
|
வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த,
|
|
தோளே தோழி! தவறு உடையவ்வே!
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளது ஆற்றாமை கண்டு, ஆற்றாளாகிய
தோழிக்குத் தலை மகள் சொல்லியது. - பாலை
பாடிய பெருங்கடுங்கோ
|
|
|
தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க!
|
|
நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக!
|
|
ஏறுடை இன நிரை பெயர, பெயராது,
|
|
செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய
|
5
|
தறுகணாளர் நல் இசை நிறுமார்,
|
|
பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின்,
|
|
நட்ட போலும் நடாஅ நெடுங் கல்
|
|
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி,
|
|
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
|
10
|
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
|
|
செம் பூங் கரந்தை புனைந்த கண்ணி
|
|
வரி வண்டு ஆர்ப்பச் சூட்டி, கழற் கால்
|
|
இளையர் பதிப் பெயரும் அருஞ் சுரம்
இறந்தோர்,
|
|
தைஇ நின்ற தண் பெயல் கடை நாள்,
|
15
|
பொலங்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்
|
|
|
|
பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
|
|
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப,
|
|
வண்டற் பாவை உண்துறைத் தரீஇ,
|
20
|
திரு நுதல் மகளிர் குரவை அயரும்
|
|
பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை,
|
|
வாணன் சிறுகுடி, வணங்கு கதிர் நெல்லின்
|
|
யாணர்த் தண் பணைப் போது வாய் அவிழ்ந்த
|
|
ஒண் செங் கழுநீர் அன்ன, நின்
|
25
|
கண் பனி துடைமார் வந்தனர், விரைந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மதுரை
மருதன் இளநாகனார்
|
|
|
பொறி வரிப் புறவின் செங் காற் சேவல்
|
|
சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி,
|
|
அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு,
|
|
வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக்
|
5
|
குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்தி,
|
|
நெடுஞ் சேண் வந்த நீர் நசை வம்பலர்
|
|
செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப்
|
|
பல் காய் அம் சினை அகவும் அத்தம்
|
|
சென்று, நீர் அவணிர் ஆகி, நின்று தரு
|
10
|
நிலை அரும் பொருட் பிணி
நினைந்தனிர்எனினே,
|
|
வல்வதாக, நும் செய் வினை! இவட்கே,
|
|
களி மலி கள்ளின் நல் தேர் அவியன்
|
|
ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும்
|
|
பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின்
|
15
|
கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள்,
|
|
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின்,
|
|
மருந்தும் உண்டோ, பிரிந்து உறை நாட்டே?
|
செலவு உணர்த்திய தோழி,
தலைமகளது குறிப்பு அறிந்து, தலைமகனைச் செலவு
அழுங்கச் சொல்லியது. -
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
|
|
|
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
|
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
|
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
|
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
|
5
|
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
|
|
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
|
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
|
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
|
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
|
10
|
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
|
|
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
|
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
|
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
|
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
|
15
|
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
|
|
நில வரை எல்லாம் நிழற்றி,
|
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.
|
பிரிவின்கண் தலைமகள்
அறிவு மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்
|
|
|
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
|
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
|
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
|
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
|
5
|
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
|
|
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
|
|
மழலை இன் சொல், கழறல் இன்றி,
|
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
|
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண்
இராஅள்,
|
10
|
ஏதிலாளன் காதல் நம்பி,
|
|
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
|
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
|
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
|
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
|
15
|
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
|
|
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
|
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
|
|
செம் புடைச் சிறு விரல் வரித்த
|
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
|
தண் கதிர் மண்டிலம் அவிர், அறச் சாஅய்ப்
|
|
பகல் அழி தோற்றம் போல, பையென
|
|
நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார்,
|
|
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக,
|
5
|
கடையல்அம் குரல வாள் வரி உழுவை
|
|
பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது,
|
|
இரும் பனஞ் செறும்பின் அன்ன பரூஉ மயிர்,
|
|
சிறு கண், பன்றி வரு திறம் பார்க்கும்
|
|
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனந்தலை,
|
10
|
பொத்துடை மரத்த புகர் படு நீழல்,
|
|
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும்,
|
|
ஈரம் இல், வெஞ் சுரம் இறந்தோர் நம்வயின்
|
|
வாரா அளவை ஆயிழை! கூர் வாய்
|
|
அழல் அகைந்தன்ன காமர் துதை மயிர்
|
15
|
மனை உறை கோழி மறனுடைச் சேவல்
|
|
போர் புரி எருத்தம் போலக் கஞலிய
|
|
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி,
|
|
சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில்
|
|
வந்தன்று அம்ம, தானே;
|
20
|
வாரார் தோழி! நம் காதலோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள், தோழிக்குப் பருவம் கண்டு அழிந்து,சொல்லி
யது. - கருவூர் நன்மார்பன்
|
|
|
'நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும்,
|
|
ஒட்டாது உறையுநர் பெருக்கமும், காணூஉ,
|
|
ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல
|
|
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
|
5
|
மென் முலை முற்றம் கடவாதோர்' என,
|
|
நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து
|
|
உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி
|
|
ஆள்வினை மாரியின் அவியா, நாளும்
|
|
கடறு உழந்து இவணம் ஆக, படர் உழந்து
|
10
|
யாங்கு ஆகுவள்கொல் தானே தீம் தொடை
|
|
விளரி நரம்பின் நயவரு சீறியாழ்
|
|
மலி பூம் பொங்கர் மகிழ் குரற் குயிலொடு
|
|
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும்
|
|
நம்முடை மதுகையள் ஆகி, அணி நடை
|
15
|
அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி,
|
|
கையறு நெஞ்சினள், அடைதரும்
|
|
மை ஈர் ஓதி மாஅயோளே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -இருங்கோன் ஒல்லையாயன்
செங்கண்ணனார்
|
|
|
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
|
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
|
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
|
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
|
5
|
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
|
|
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல்
|
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
|
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
|
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
|
10
|
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
|
|
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
|
|
அறை இறந்து, அவரோ சென்றனர்
|
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு
ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
|
|
![]() |
|
நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
|
|
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும்,
|
|
செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி
|
|
பல் கவர் மருப்பின் முது மான் போக்கி,
|
5
|
சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர்
|
|
திரிவயின், தெவுட்டும் சேண் புலக் குடிஞைப்
|
|
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்தொறும்,
|
|
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு
|
|
அரிய ஆகும் என்னாமை, கரி மரம்
|
10
|
கண் அகை இளங் குழை கால்முதல் கவினி,
|
|
விசும்புடன் இருண்டு, வெம்மை நீங்க,
|
|
பசுங் கண் வானம் பாய் தளி பொழிந்தென,
|
|
புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
|
|
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
|
15
|
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,
|
|
இனிய ஆகுக தணிந்தே
|
|
இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே.
|
உடன்போக்கு வலித்த தோழி தலைமகற்குச் சொல்லியது. -
மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
'ஒழியச் சென்மார், செல்ப' என்று, நாம்
|
|
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து
|
|
எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று
|
|
ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர்,
|
5
|
காடு தேர் மடப் பிணை அலற, கலையின்
|
|
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
|
|
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, பயில் வரி
|
|
இரும் புலி வேங்கைக் கருந் தோல் அன்ன
|
|
கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை
|
10
|
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி,
|
|
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை
|
|
ஆடு செவி நோக்கும் அத்தம், பணைத் தோள்
|
|
குவளை உண்கண் இவளும் நம்மொடு
|
|
வரூஉம் என்றனரே, காதலர்;
|
15
|
வாராய் தோழி! முயங்குகம், பலவே.
|
உடன்போக்கு உடன்படுவித்த தோழி தலைமகட்குச்
சொல்லியது. - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
|
|
|
தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ,
|
|
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக,
|
|
நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை,
|
|
மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின்
|
5
|
சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர்
|
|
நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை,
|
|
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து
|
|
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை
|
|
துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனந்தலை,
|
10
|
கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க,
|
|
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த
|
|
அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க, |
|
அரம்பு வந்து அலைக்கும் மாலை,
|
|
நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே.
|
பிரிந்து போகாநின்ற தலைமகன், இடைச் சுரத்து நின்று,
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - குடவாயிற்கீரத்தனார்
|
|
![]() |
|
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர்
|
|
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல்
|
|
நெடு நிலை நடுகல் நாட் பலிக் கூட்டும்
|
|
சுரனிடை விலங்கிய மரன் ஓங்கு இயவின்,
|
5
|
வந்து, வினை வலித்த நம்வயின், என்றும்,
|
|
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது,
|
|
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது
|
|
அவிழினும், உயவும் ஆய் மடத் தகுவி
|
|
சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த
|
10
|
திண் சுவர் நோக்கி, நினைந்து, கண் பனி,
|
|
நெகிழ் நூல் முத்தின், முகிழ் முலைத் தெறிப்ப,
|
|
மை அற விரிந்த படை அமை சேக்கை
|
|
ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ,
|
|
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள்
|
15
|
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி,
|
|
'நல்ல கூறு' என நடுங்கி,
|
|
புல்லென் மாலையொடு பொரும்கொல் தானே?
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
![]() |
|
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
|
|
உலறி இலை இலவாக, பல உடன்
|
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
|
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
|
5
|
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
|
|
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
|
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
|
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
|
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
|
10
|
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
|
|
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
|
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
|
|
உவலை சூடிய தலையர், கவலை
|
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
|
15
|
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
|
|
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
|
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
|
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
|
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
|
20
|
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
|
|
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
|
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
|
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி
|
25
|
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே.
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
|
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
|
|
வலை வலந்தனைய ஆக, பல உடன்
|
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
|
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
|
5
|
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி,
|
|
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
|
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
|
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
|
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
|
10
|
செல்ப என்ப தோழி! யாமே,
|
|
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
|
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
|
|
இன்னா மொழிதும் என்ப;
|
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து,
தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி
தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார்
|
|
|
நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
|
|
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
|
|
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
|
|
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
|
5
|
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள்
|
|
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
|
|
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
|
|
கல்லுடை அதர கானம் நீந்தி,
|
|
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
|
10
|
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து
|
|
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
|
|
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
|
|
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
|
|
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
|
15
|
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர்,
|
|
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
|
|
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
|
|
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
|
|
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
|
20
|
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண்,
|
|
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
|
|
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
|
|
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
|
|
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
|
|
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
|
5
|
|
|
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
|
|
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
|
|
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
|
|
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
|
10
|
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
|
|
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
|
|
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
|
|
எழுதியன்ன கொடி படு வெருகின்
|
|
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
|
15
|
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
|
|
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
|
|
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
|
|
வெரு வரு கானம், நம்மொடு,
|
|
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
|
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
|
எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
|
|
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
|
|
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
|
|
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
|
5
|
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை
|
|
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
|
|
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
|
|
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
|
|
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
|
10
|
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென,
|
|
வைகு நிலை மதியம் போல, பையென,
|
|
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
|
|
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
|
|
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
|
15
|
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப,
|
|
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
|
|
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
|
|
அறல் மருள் கூந்தலின் மறையினள்,' திறல் மாண்டு
|
|
திருந்துகமாதோ, நும் செலவு' என வெய்து உயிரா,
|
20
|
பருவரல் எவ்வமொடு அழிந்த
|
|
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.
|
இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
|
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
|
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
|
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி!
|
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
|
5
|
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,
|
|
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
|
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
|
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
|
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
|
10
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர,
|
|
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
|
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
|
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
|
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
|
15
|
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,
|
|
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
|
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
|
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
|
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
|
20
|
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
|
|
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
|
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர்,
|
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
|
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
|
25
|
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;
|
|
அதுவே மருவினம், மாலை; அதனால்,
|
|
காதலர் செய்த காதல்
|
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - அதியன் விண்ணத்தனார்
|
|
|
இடை பிறர் அறிதல் அஞ்சி, மறை கரந்து,
|
|
பேஎய் கண்ட கனவின், பல் மாண்
|
|
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்,
|
|
மறம் மிகு தானை, பசும்பூண், பொறையன்
|
5
|
கார் புகன்று எடுத்த சூர் புகல் நனந்தலை
|
|
மா இருங் கொல்லி உச்சித் தாஅய்,
|
|
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
|
|
புலம் கந்தாக இரவலர் செலினே,
|
|
வரை புரை களிற்றொடு நன் கலன் ஈயும்
|
10
|
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
|
|
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
|
|
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
|
|
இரை தேர் கொட்பின் ஆகி, பொழுது படப்
|
|
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு,
|
15
|
வருவர் என்று உணர்ந்த, மடம் கெழு, நெஞ்சம்!
|
|
ஐயம் தெளியரோ, நீயே; பல உடன்
|
|
வறல் மரம் பொருந்திய சிள்வீடு, உமணர்
|
|
கண நிரை மணியின், ஆர்க்கும் சுரன் இறந்து,
|
|
அழி நீர் மீன் பெயர்ந்தாங்கு, அவர்
|
20
|
வழி நடைச் சேறல் வலித்திசின், யானே.
|
தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - ஒளவையார்
|
|
![]() |
|
பகலினும் அகலாதாகி, யாமம்
|
|
தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழிய,
|
|
தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
|
|
பனி மீக்கூரும் பைதல் பானாள்,
|
5
|
|
|
பருகுவன்ன காதலொடு திருகி,
|
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கத்து,
|
|
ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்மாதோ;
|
|
அருளிலாளர் பொருள்வயின் அகல,
|
10
|
எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து
|
|
யான் எவன் உளெனோ தோழி! தானே
|
|
பராரைப் பெண்ணைச் சேக்கும், கூர்வாய்,
|
|
ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய,
|
|
உள்ளே கனலும் உள்ளம் மெல்லெனக்
|
15
|
கனை எரி பிறப்ப ஊதும்
|
|
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே?
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தலைமகன் பிரிவின்கண் தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். - வடம வண்ணக்கன்
பேரிசாத்தனார்
|
|
![]() |
|
'சிறு நுதல் பசந்து, பெருந் தோள் சாஅய்,
|
|
அகல் எழில் அல்குல் அவ் வரி வாட,
|
|
பகலும் கங்குலும் மயங்கி, பையென,
|
|
பெயல் உறு மலரின் கண் பனி வார,
|
5
|
ஈங்கு இவள் உழக்கும்' என்னாது, வினை நயந்து,
|
|
நீங்கல் ஒல்லுமோ ஐய! வேங்கை
|
|
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை
|
|
மையல் அம் கடாஅம் செருக்கி, மதம் சிறந்து,
|
|
இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனந்தலை,
|
10
|
பெருங் கை எண்கினம் குரும்பி தேரும்
|
|
புற்றுடைச் சுவர புதல் இவர் பொதியில்,
|
|
கடவுள் போகிய கருந் தாட் கந்தத்து
|
|
உடன் உறை பழமையின் துறத்தல்செல்லாது,
|
|
இரும் புறாப் பெடையொடு பயிரும்
|
15
|
பெருங் கல் வைப்பின் மலைமுதல் ஆறே?
|
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகனைச் செலவு
விலக்கியது. -மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
![]() |
|
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
|
|
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
|
|
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
|
|
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
|
5
|
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
|
|
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
|
|
களிறு புறம் உரிஞ்சிய கருங் கால் இலவத்து
|
|
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம்
|
|
காடு மிக நெடிய என்னார், கோடியர்
|
10
|
பெரும் படைக் குதிரை, நல் போர், வானவன்
|
|
திருந்து கழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு,
|
|
நாம் செலின், எவனோ தோழி! காம்பின்
|
|
வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக்
|
|
கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது,
|
15
|
இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம்
|
|
தண் பெரு படாஅர் வெரூஉம்
|
|
குன்று விலங்கு இயவின், அவர் சென்ற, நாட்டே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு வேறுபட்ட
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
|
|
![]() |
|
இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று,
|
|
அருங் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை,
|
|
எழுதியன்ன திண் நிலைக் கதவம்
|
|
கழுது வழங்கு அரை நாள், காவலர் மடிந்தென,
|
5
|
திறந்து நப் புணர்ந்து, 'நும்மின் சிறந்தோர்
|
|
இம்மை உலகத்து இல்' எனப் பல் நாள்
|
|
பொம்மல் ஓதி நீவிய காதலொடு,
|
|
பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப,
|
|
வருவழி வம்பலர்ப் பேணி, கோவலர்
|
10
|
மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி
|
|
செவி அடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
|
|
புல்லி நல் நாட்டு உம்பர், செல் அருஞ்
|
|
சுரம் இறந்து ஏகினும், நீடலர்
|
|
அருள் மொழித் தேற்றி, நம் அகன்றிசினோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மாமூலனார்
|
|
|
'இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!' என
|
|
அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம்
|
|
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும்,
|
|
குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க,
|
5
|
ஐய ஆக வெய்ய உயிரா,
|
|
இரவும் எல்லையும் படர் அட வருந்தி,
|
|
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப,
|
|
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய,
|
|
பொருள் புரிந்து அகன்றனர்ஆயினும், அருள் புரிந்து,
|
10
|
வருவர் வாழி, தோழி! பெரிய
|
|
நிதியம் சொரிந்த நீவி போலப்
|
|
பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை,
|
|
நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர்
|
|
வசி படு புண்ணின் குருதி மாந்தி,
|
15
|
ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல,
|
|
இல் வழிப் படூஉம் காக்கைக்
|
|
கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
![]() |
|
'கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும்
|
|
சூழி மென் முகம் செப்புடன் எதிரின;
|
|
பெண் துணை சான்றனள், இவள்' எனப் பல் மாண்
|
|
கண் துணை ஆக நோக்கி, நெருநையும்,
|
5
|
அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும்,
|
|
அறியாமையின் செறியேன், யானே;
|
|
பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன்
|
|
அருங் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள்,
|
|
சேணுறச் சென்று, வறுஞ் சுனைக்கு ஒல்கி,
|
10
|
புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக்
|
|
கோடை உதிர்த்த குவி கண் பசுங் காய், |
|
அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப,
|
|
வறு நிலத்து உதிரும் அத்தம், கதுமென,
|
|
கூர் வேல் விடலை பொய்ப்பப் போகி,
|
15
|
சேக்குவள் கொல்லோதானே தேக்கின்
|
|
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை,
|
|
ஊன் புழுக்கு அயரும் முன்றில்,
|
|
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே.
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - குடவாயில்
கீரத்தனார்
|
|
![]() |
|
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
|
|
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
|
|
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
|
|
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
|
5
|
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
|
|
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
|
|
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
|
|
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
|
|
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
|
10
|
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
|
|
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
|
|
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
|
|
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
|
|
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
|
15
|
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
|
|
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
|
|
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
|
|
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
|
|
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
|
20
|
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
|
|
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
|
|
என்னுழியதுகொல் தானே பல் நாள்
|
|
அன்னையும் அறிவுற அணங்கி,
|
|
நல் நுதல் பாஅய பசலை நோயே?
|
தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -
வடமோதங் கிழார்
|
|
![]() |
|
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை
|
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி,
|
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும்
|
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
|
5
|
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை,
|
|
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென
|
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை,
|
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய
|
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை,
|
10
|
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின்
|
|
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள்
|
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத்
|
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள்,
|
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள்,
|
15
|
'செல்வேம்' என்னும் நும் எதிர்,
|
|
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே!
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச்
சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
|
|
![]() |
|
பசித்த யானைப் பழங்கண் அன்ன
|
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி
|
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப,
|
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு
|
5
|
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது,
|
|
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப்
|
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர்
|
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல்,
|
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும்
|
10
|
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்,
|
|
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ?
|
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
|
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ?
|
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே!
|
15
|
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ,
|
|
யாய் அறிவுறுதல் அஞ்சி,
|
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே.
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார்
|
|
![]() |
|
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின்
|
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர்
|
|
வருவர் என்பது வாய்வதாக,
|
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின்
|
5
|
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத்
|
|
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி,
|
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி!
|
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
|
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து
|
10
|
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின்
|
|
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு
|
|
ஆலி அழி துளி தலைஇக்
|
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!
|
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
- பறநாட்டுப் பெருங்கொற்றனார்
|
|
![]() |
|
அம்ம! வாழி, தோழி! காதலர்,
|
|
'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர்,
|
|
நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த
|
|
களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும்
|
5
|
உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது
|
|
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி,
|
|
'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள்
|
|
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை,
|
|
வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு,
|
10
|
மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம்
|
|
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய,
|
|
தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல்,
|
|
ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்;
|
|
சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள்,
|
15
|
உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ,
|
|
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது,
|
|
நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை,
|
|
வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை,
|
|
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும்
|
20
|
சோலை அத்தம் மாலைப் போகி,
|
|
ஒழியச் சென்றோர்மன்ற;
|
|
பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே?
|
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
|
|
![]() |
|
'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்,
|
|
நன்பகல் அமையமும் இரவும் போல,
|
|
வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து,
|
|
உள' என உணர்ந்தனைஆயின், ஒரூஉம்
|
5
|
இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப,
|
|
துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே!
|
|
நீ செல வலித்தனைஆயின், யாவதும்
|
|
நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர்
|
|
ஆவி அவ் வரி நீர் என நசைஇ,
|
10
|
மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனந்தலை,
|
|
களர் கால் யாத்த கண் அகல் பரப்பின்
|
|
செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்
|
|
அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்,
|
|
புற்று அரை யாத்த புலர் சினை மரத்த,
|
15
|
மைந் நிற உருவின், மணிக் கண், காக்கை
|
|
பைந் நிணம் கவரும் படு பிணக் கவலைச்
|
|
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்,
|
|
கோல் கழிபு இரங்கும் அதர,
|
|
வேய் பயில் அழுவம் இறந்த பின்னே?
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறியது. - மருங்கூர்ப்
பாகைச் சாத்தன் பூதனார்
|
|
![]() |
|
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து,
|
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து,
|
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர்
|
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்,
|
5
|
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர்
|
|
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப்
|
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து,
|
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து,
|
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு,
|
10
|
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை
|
|
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட
|
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில்,
|
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை,
|
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது;
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார்
|
|
![]() |
|
நீடு நிலை அரைய செங் குழை இருப்பை,
|
|
கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ,
|
|
ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின்
|
|
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
|
5
|
பைங் குழைத் தழையர் பழையர் மகளிர்
|
|
கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து,
|
|
குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும்
|
|
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய,
|
|
சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும்,
|
10
|
அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப்
|
|
பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி,
|
|
நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன்,
|
|
வேளிரொடு பொரீஇய, கழித்த
|
|
வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே!
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- மாமூலனார்
|
|
|
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின்
|
|
ஆக மேனி அம் பசப்பு ஊர,
|
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின்
|
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு
|
5
|
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின்
|
|
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள்
|
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி,
|
|
நீடலர் வாழி, தோழி! கோடையில்,
|
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது,
|
10
|
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய,
|
|
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து,
|
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும்
|
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து,
|
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என,
|
15
|
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா
|
|
நின் வாய் இன் மொழி நல் வாயாக
|
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது,
|
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம்
|
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல
|
20
|
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி,
|
|
மறுதரல் உள்ளத்தர்எனினும்,
|
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே.
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- கல்லாடனார்
|
|
![]() |
|
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
|
|
அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல்
|
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல்
|
|
|
யானும் அறிவென்மன்னே; யானை தன்
|
5
|
கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து,
|
|
இன்னா வேனில் இன் துணை ஆர,
|
|
முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட,
|
|
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம்
|
|
அரிய அல்லமன், நமக்கே விரி தார்
|
10
|
ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன்
|
|
மாட மூதூர் மதிற்புறம் தழீஇ,
|
|
நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால்,
|
|
தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த
|
|
குடை ஓரன்ன கோள் அமை எருத்தின்
|
15
|
பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு,
|
|
வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய,
|
|
நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின்,
|
|
ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ
|
|
வார் உறு கவரியின் வண்டு உண விரிய,
|
20
|
முத்தின் அன்ன வெள் வீ தாஅய்,
|
|
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி
|
|
நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப்
|
|
பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய்
|
|
நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று
|
25
|
அமிழ்தம் ஊறும் செவ் வாய்,
|
|
ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே!
|
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு
அழுங்கியது. - மதுரைத் தத்தங் கண்ணனார்
|
|
![]() |
|
'சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
|
|
மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி,
|
|
பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய,
|
|
ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின்
|
5
|
அவணது ஆக, பொருள்' என்று, உமணர்
|
|
கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை,
|
|
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப்
|
|
படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி,
|
|
'உண்ணா மருங்குல் இன்னோன் கையது
|
10
|
பொன் ஆகுதலும் உண்டு' என, கொன்னே
|
|
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்,
|
|
திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி,
|
|
செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர,
|
|
கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ,
|
15
|
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை,
|
|
வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை,
|
|
கள்ளி நீழல் கதறுபு வதிய,
|
|
மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை,
|
|
எமியம் கழிதந்தோயே பனி இருள்
|
20
|
பெருங் கலி வானம் தலைஇய
|
|
இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே!
|
முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன்
பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
![]() |
|
வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர்
|
|
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்,
|
|
பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப்
|
|
பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப,
|
5
|
அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட
|
|
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து
|
|
ஆண்மை வாங்க, காமம் தட்ப,
|
|
கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய,
|
|
இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி,
|
10
|
ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்;
|
|
நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு
|
|
உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர்
|
|
வாழ்தல் அன்ன காதல்,
|
|
சாதல் அன்ன பிரிவு அரியோளே!
|
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -
நரை முடி நெட்டையார்
|
|
|
உய் தகை இன்றால் தோழி! பைபய,
|
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும்
|
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்;
|
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக்
|
5
|
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள்,
|
|
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல்,
|
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு,
|
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி,
|
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்
|
10
|
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன்,
|
|
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும்,
|
|
யாணர் வேனில்மன், இது
|
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே?
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர்
மூலங்கிழார்
|
|
|
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள்,
|
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
|
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
|
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
|
5
|
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
|
|
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
|
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
|
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
|
10
|
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
|
|
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
|
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
|
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த
|
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
|
15
|
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து நின்று
|
|
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
|
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
|
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
|
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக் கருதிய நெஞ்சினைக் கழறிப்
போயது. -மதுரை மருதன் இளநாகனார்
|
|
![]() |
|
'விசும்பு தளி பொழிந்து, வெம்மை நீங்கி,
|
|
தண் பதம் படுதல் செல்க!' எனப் பல் மாண்
|
|
நாம் செல விழைந்தனமாக, 'ஓங்கு புகழ்க்
|
|
கான் அமர் செல்வி அருளலின், வெண் கால்,
|
5
|
பல் படைப் புரவி எய்திய தொல் இசை
|
|
நுணங்கு நுண் பனுவற் புலவன் பாடிய
|
|
இன மழை தவழும் ஏழிற் குன்றத்து,
|
|
கருங் கால் வேங்கைச் செம் பூம் பிணையல்
|
|
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்
|
10
|
சில் நாள் கழிக!' என்று முன் நாள்
|
|
நம்மொடு பொய்த்தனர்ஆயினும், தம்மொடு
|
|
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார்,
|
|
மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப,
|
|
உறை கழிந்து உலந்த பின்றை, பொறைய
|
15
|
சிறு வெள் அருவித் துவலையின் மலர்ந்த
|
|
கருங் கால் நுணவின் பெருஞ் சினை வான் பூச்
|
|
செம் மணற் சிறு நெறி கம்மென வரிப்ப,
|
|
காடு கவின் பெறுக தோழி! ஆடு வளிக்கு
|
|
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்
|
20
|
கல் கண் சீக்கும் அத்தம்,
|
|
அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே!
|
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - குடவாயிற்
கீரத்தனார்
|
|
|
தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
|
|
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
|
|
சால் பெருந் தானைச் சேரலாதன்
|
|
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
|
5
|
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,
|
|
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
|
|
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய,
|
|
சென்றனர்ஆயினும், செய்வினை அவர்க்கே
|
|
வாய்க்கதில் வாழி, தோழி! வாயாது,
|
10
|
மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,
|
|
ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென, குவவு அடி
|
|
வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ,
|
|
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி
|
|
கை தலை வைத்த மையல் விதுப்பொடு,
|
15
|
கெடு மகப் பெண்டிரின் தேரும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
- மாமூலனார்
|
|
![]() |
|
அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை
|
|
வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய,
|
|
எவன் ஆய்ந்தனர்கொல் தோழி! ஞெமன்ன்
|
|
தெரி கோல் அன்ன செயிர் தீர் செம் மொழி,
|
5
|
உலைந்த ஒக்கல், பாடுநர் செலினே,
|
|
உரன் மலி உள்ளமொடு முனை பாழாக,
|
|
அருங் குறும்பு எறிந்த பெருங் கல வெறுக்கை
|
|
சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு,
|
|
எழிற் குன்றத்துக் கவாஅன், கேழ் கொள,
|
10
|
திருந்து அரை நிவந்த கருங் கால் வேங்கை
|
|
எரி மருள் கவளம் மாந்தி, களிறு தன்
|
|
வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை
|
|
கல் ஊர் பாம்பின் தோன்றும்
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே?
|
தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- மாமூலனார்
|
|
![]() |
|
வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி,
|
|
பெறல் அருங் கேளிர் பின் வந்து விடுப்ப,
|
|
பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு
|
|
குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம்
|
5
|
அறிவுறூஉம்கொல்லோ தானே கதிர் தெற,
|
|
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை,
|
|
அழல் அகைந்தன்ன அம் குழைப் பொதும்பில்,
|
|
புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம்,
|
|
மறுதரல் உள்ளமொடு குறுக, தோற்றிய
|
10
|
செய் குறி ஆழி வைகல்தோறு எண்ணி,
|
|
எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்
|
|
விலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,
|
|
திருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,
|
|
இருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,
|
15
|
வருந்து தோள் பூசல் களையும் மருந்து என
|
|
உள்ளுதொறு படூஉம் பல்லி,
|
|
புள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே?
|
பொருள் முற்றி மறுத்தராநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பொருந்தில் இளங்கீரனார்
|
|
![]() |
|
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
|
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
|
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
|
|
நாளது செலவும், மூப்பினது வரவும்,
|
5
|
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
|
|
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
|
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
|
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
|
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
|
10
|
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
|
|
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
|
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
|
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
|
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
|
15
|
|
|
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
|
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
|
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
|
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
|
20
|
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
|
|
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
|
|
நம்மொடு நன் மொழி நவிலும்
|
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன்
பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச்
சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்
|
|
![]() |
|
மாவும் வண் தளிர் ஈன்றன; குயிலும்
|
|
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்;
|
|
மூதிலை ஒழித்த போது அவிழ் பெருஞ் சினை,
|
|
வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை
|
5
|
நரம்பு ஆர்த்தன்ன வண்டினம் முரலும்;
|
|
துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்,
|
|
தாது உகு தண் பொழில் அல்கி, காதலர்
|
|
செழு மனை மறக்கும் செவ்வி வேனில்
|
|
தானே வந்தன்றுஆயின், ஆனாது
|
10
|
இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப்
|
|
புலந்தனம் வருகம்; சென்மோ தோழி!
|
|
'யாமே எமியம் ஆக, நீயே
|
|
பொன் நயந்து அருள் இலையாகி,
|
|
இன்னை ஆகுதல் ஒத்தன்றால்' எனவே.
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
தங்கால் பொற்கொல்லனார்
|
|
![]() |
|
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
|
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த
|
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய,
|
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி,
|
5
|
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து,
|
|
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி
|
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது,
|
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும்,
|
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற்
|
10
|
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின்
|
|
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி,
|
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர்
|
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை
|
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம்
|
15
|
காலொடு துயல்வந்தன்ன, நின்
|
|
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
|
|
![]() |
|
'பனி வார் உண்கணும், பசந்த தோளும்,
|
|
நனி பிறர் அறியச் சாஅய், நாளும்,
|
|
கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார்,
|
|
நீடினர்மன்னோ, காதலர்' என நீ
|
5
|
எவன் கையற்றனை? இகுளை! அவரே
|
|
வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
|
|
மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது,
|
|
அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர்,
|
|
பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு,
|
10
|
வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை
|
|
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும்,
|
|
பொய்யா நல் இசை மா வண் புல்லி,
|
|
கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள்
|
|
முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை
|
15
|
அருவித் துவலையொடு மயங்கும்
|
|
பெரு வரை அத்தம் இயங்கியோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி
சொல்லியது.-மாமூலனார்
|
|
![]() |
|
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
|
|
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
|
|
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
|
|
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
|
5
|
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
|
|
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
|
|
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
|
|
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
|
|
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
|
10
|
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
|
|
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
|
|
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
|
|
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
|
|
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
|
15
|
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
|
|
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
![]() |
|
நிரை செலல் இவுளி விரைவுடன் கடைஇ,
|
|
அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று,
|
|
மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய,
|
|
பொழுது கழி மலரின், புனையிழை! சாஅய்,
|
5
|
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப்
|
|
புல் இலை நெல்லிப் புகர் இல் பசுங் காய்
|
|
கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்ப,
|
|
பொலம் செய் காசின் பொற்பத் தாஅம்
|
|
அத்தம் நண்ணி, அதர் பார்த்து இருந்த
|
10
|
கொலை வெங் கொள்கைக் கொடுந் தொழில் மறவர்
|
|
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த
|
|
எஃகு உறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய,
|
|
வளை வாய்ப் பருந்தின், வள் உகிர்ச் சேவல்
|
|
கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும்
|
15
|
|
|
செய் வினை வலத்தர் ஆகி, இவண் நயந்து,
|
|
எய்த வந்தனரே தோழி! மை எழில்
|
|
துணை ஏர் எதிர் மலர் உண்கண்
|
|
பிணை ஏர் நோக்கம் பெருங் கவின் கொளவே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
|
|
![]() |
|
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப,
|
|
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
|
|
சினவல் போகிய புன்கண் மாலை,
|
|
அத்த நடுகல் ஆள் என உதைத்த
|
5
|
கான யானைக் கதுவாய் வள் உகிர்,
|
|
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண்,
|
|
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை,
|
|
வருநர் இன்மையின் களையுநர்க் காணா
|
|
என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே
|
10
|
துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல்
|
|
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்,
|
|
பூதம் தந்த பொரி அரை வேங்கைத்
|
|
தண் கமழ் புது மலர் நாறும்
|
15
|
அம் சில் ஓதி ஆய் மடத் தகையே.
|
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன்
இளநாகனார்
|
|
![]() |
|
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
|
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
|
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
|
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
|
5
|
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
|
|
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
|
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
|
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
|
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
|
10
|
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,
|
|
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
|
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
|
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
|
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
|
15
|
உயிர் குழைப்பன்ன சாயல்,
|
|
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச்
சொல்லியது. - பரணர்
|
|
![]() |
|
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
|
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
|
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
|
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
|
5
|
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
|
|
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
|
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
|
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
|
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
|
10
|
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
|
|
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
|
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
|
|
கடல்அம் தானை கை வண் சோழர்,
|
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
|
15
|
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
|
|
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
|
|
ஓமை நீடிய உலவை நீள் இடை,
|
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
|
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
|
20
|
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
|
|
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
|
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
|
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
|
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
|
25
|
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
|
|
மேயினள்கொல்?' என நோவல் யானே.
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்
|
|
![]() |
|
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
|
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
|
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
|
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
|
5
|
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
|
|
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
|
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
|
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
|
10
|
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
|
|
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
|
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
|
|
வீ தேர் பறவை விழையும்
|
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
|
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
|
முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
|
|
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
|
|
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
|
|
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
|
5
|
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
|
|
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
|
|
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
|
|
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
|
|
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
|
10
|
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
|
|
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
|
|
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
|
|
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
|
|
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
|
15
|
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
|
|
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
|
|
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
|
|
ஓர் எயில் மன்னன் போல,
|
|
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!
|
பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
|
|
|
'சென்று நீடுநர்அல்லர்; அவர்வயின்
|
|
இனைதல் ஆனாய்' என்றிசின் இகுளை!
|
|
அம்பு தொடை அமைதி காண்மார், வம்பலர்
|
|
கலன் இலர் ஆயினும் கொன்று, புள் ஊட்டும்
|
5
|
கல்லா இளையர் கலித்த கவலை,
|
|
கண நரி இனனொடு குழீஇ, நிணன் அருந்தும்
|
|
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்,
|
|
அத்த எருவைச் சேவல் சேர்ந்த
|
|
அரை சேர் யாத்த வெண் திரள், வினை விறல்,
|
10
|
எழூஉத் திணி தோள், சோழர் பெரு மகன்
|
|
விளங்கு புகழ் நிறுத்த இளம் பெருஞ் சென்னி
|
|
குடிக் கடன் ஆகலின், குறைவினை முடிமார்,
|
|
செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி,
|
|
வம்ப வடுகர் பைந் தலை சவட்டி,
|
15
|
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்,
|
|
அஞ்சுவரு மரபின் வெஞ் சுரம் இறந்தோர்
|
|
நோய் இலர் பெயர்தல் அறியின்,
|
|
ஆழலமன்னோ, தோழி! என் கண்ணே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகன் தோழிக்குச் சொல்லியது. -
இடையன் சேந்தங் கொற்றனார்
|
|
![]() |
|
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
|
|
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
|
|
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
|
|
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
|
5
|
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
|
|
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
|
|
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
|
|
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
|
|
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
|
10
|
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
|
|
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
|
|
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
|
|
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
|
|
நசை தர வந்தோர் இரந்தவை
|
15
|
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
- மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்
|
|
![]() |
|
நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய,
|
|
தெருளாமையின் தீதொடு கெழீஇ,
|
|
அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து,
|
|
ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே!
|
5
|
நினையினைஆயின், எனவ கேண்மதி!
|
|
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை,
|
|
பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி,
|
|
நனவின் இயன்றதுஆயினும், கங்குல்
|
|
கனவின் அற்று, அதன் கழிவே; அதனால்,
|
10
|
விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சி,
|
|
சுவல்மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி
|
|
ஈண்டு பல் நாற்றம் வேண்டுவயின் உவப்ப,
|
|
செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு,
|
|
எய்திய கனை துயில் ஏற்றொறும், திருகி,
|
15
|
மெய் புகுவன்ன கை கவர் முயக்கின்
|
|
மிகுதி கண்டன்றோ இலெனே; நீ நின்
|
|
பல் பொருள் வேட்கையின், சொல் வரை நீவி,
|
|
செலவு வலியுறுத்தனை ஆயின், காலொடு
|
|
கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு,
|
20
|
உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல்,
|
|
அசைஇய பொழுதில் பசைஇய வந்து, இவள்
|
|
மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர,
|
|
ஒரு திறம் நினைத்தல் செல்லாய், திரிபு நின்று,
|
|
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப்
|
25
|
பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த
|
|
நிரம்பா நீள் இடைத் தூங்கி,
|
|
இரங்குவை அல்லையோ, உரம் கெட மெலிந்தே?
|
முன் ஒரு காலத்துப் பொருள் முற்றிவந்த தலைமகன் பின்னும்
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
|
|
![]() |
|
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
|
|
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
|
|
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
|
|
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
|
5
|
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
|
|
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
|
|
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
|
|
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
|
|
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
|
10
|
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
|
|
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
|
|
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
|
|
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
|
|
முனை அரண் கடந்த வினை வல் தானை,
|
15
|
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
|
|
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
|
|
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
|
|
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
|
|
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
|
20 |
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
|
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
- மதுரை இளங்கௌசிகனார்
|
|
![]() |
|
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
|
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
|
|
காடும் கானமும் அவனொடு துணிந்து,
|
|
நாடும் தேயமும் நனி பல இறந்த
|
5
|
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என,
|
|
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
|
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
|
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
|
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
|
10
|
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு,
|
|
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
|
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
|
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
|
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்
|
|
![]() |
|
தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
|
|
என் ஓரன்ன தாயரும், காண,
|
|
கை வல் யானைக் கடுந் தேர்ச் சோழர்
|
|
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
|
5
|
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர,
|
|
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
|
|
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
|
|
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
|
|
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
|
10
|
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ,
|
|
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
|
|
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
|
|
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
|
|
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
|
15
|
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி,
|
|
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
|
|
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
|
|
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - குடவாயிற்
கீரத்தனார்
|
|
![]() |
|
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
|
|
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
|
|
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
|
|
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
|
5
|
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்
|
|
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
|
|
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
|
|
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
|
|
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
|
10
|
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை
|
|
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
|
|
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
|
|
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
|
|
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
|
15
|
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது,
|
|
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
|
|
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய
|
|
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
|
|
நின்றாங்குப் பெயரும் கானம்
|
20
|
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே.
|
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு
அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
|
|
![]() |
|
அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
|
|
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
|
|
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
|
|
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
|
5
|
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும்,
|
|
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
|
|
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
|
|
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
|
|
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
|
10
|
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து,
|
|
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
|
|
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
|
|
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
|
|
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
|
15
|
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல்
|
|
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
|
|
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
|
|
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
|
20
|
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை
|
|
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
|
|
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
|
|
படு மழை உருமின் முழங்கும்
|
|
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச்
சொல்லியது. - நக்கீரனார்
|
|
![]() |
|
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன
|
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
|
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர்
|
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர்
|
5
|
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி,
|
|
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என்
|
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப்
|
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி
|
10
|
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ
|
|
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன்
|
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை
|
|
குன்று புகு பாம்பின் தோன்றும்,
|
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே!
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
- காவன் முல்லைப் பூதனார்
|
|
![]() |
|
கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி,
|
|
வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து
|
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய,
|
|
முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக்
|
5
|
கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி,
|
|
கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை
|
|
அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ,
|
|
வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர்
|
|
பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப,
|
10
|
சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ்
|
|
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி,
|
|
உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை,
|
|
ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா,
|
|
களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி,
|
15
|
இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின்,
|
|
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம்,
|
|
மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும்
|
|
நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி
|
|
தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர்,
|
20
|
வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர்
|
|
நீடலர் வாழி, தோழி! தோடு கொள்
|
|
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப,
|
|
தகரம் மண்ணிய தண் நறு முச்சி,
|
|
புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ்
|
25
|
வேனில் அதிரல் வேய்ந்த நின்
|
|
ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே.
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
மாமூலனார்
|
|
![]() |
|
தண் கயம் பயந்த வண் காற் குவளை
|
|
மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன,
|
|
நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண்
|
|
பனி வார் எவ்வம் தீர, இனி வரின்,
|
5
|
நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர்
|
|
ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை
|
|
அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின்,
|
|
வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை,
|
|
அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி,
|
10
|
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு,
|
|
மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல்
|
|
அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்,
|
|
திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து,
|
|
ஆடு கழை இரு வெதிர் நரலும்
|
15
|
கோடு காய் கடற்ற காடு இறந்தோரே!
|
பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
![]() |
|
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
|
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
|
5
|
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
|
|
எளியவாக, ஏந்து கொடி பரந்த
|
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
|
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
|
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
|
10
|
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
|
|
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
|
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
|
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
|
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
|
15
|
கோடை வெவ் வளிக்கு உலமரும்
|
|
புல் இலை வெதிர நெல் விளை காடே.
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
![]() |
|
சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி,
|
|
இமையக் கானம் நாறும் கூந்தல்,
|
|
நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம்
|
|
பருகுவன்ன காதல் உள்ளமொடு,
|
5
|
திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார்
|
|
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
|
|
உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட,
|
|
பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை
|
|
வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி,
|
10
|
ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ,
|
|
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
|
|
சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி,
|
|
மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்
|
|
பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,
|
15
|
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்,
|
|
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்,
|
|
வேய் கண் உடைந்த சிமைய,
|
|
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
உரை |
மேல் |