![]() |
தொடக்கம் |
அடை நெடுங் கல்வியார் |
283 |
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, |
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் |
|
பௌவ உறை அளவா, |
|
............................................. வி மயக்கி, |
|
5 |
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் |
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும், |
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும், |
|
மன்றுள் என்பது கெட... |
|
...........................................ானே பாங்கற்கு |
|
10 |
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க, |
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர, |
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும் |
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப, |
|
............................................ண்ட பாசிலைக் |
|
15 |
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே. |
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
| |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
|
344 |
செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, |
|
செறி வளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து, |
|
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு, |
|
நிறைசால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ |
|
5 |
புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து, |
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ |
|
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே, |
|
காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி.................. |
|
கணி மேவந்தவள் அல்குல் அவ் வரியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...............அடைநெடுங் கல்வியார் பாடியது.
|
345 |
களிறு அணைப்பக் கலங்கின, காஅ, |
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு; |
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி; |
|
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; |
|
5 |
தெறல் மறவர் இறை கூர்தலின், |
பொறை மலிந்து நிலன் நெளிய, |
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர், |
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் |
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி, |
|
10 |
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் |
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே |
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, |
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என; |
|
15 |
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு |
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் |
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே |
|
20 |
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|