![]() |
தொடக்கம் |
ஆலத்தூர் கிழார் |
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
36 |
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், |
|
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், |
|
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் |
|
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் |
|
5 |
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, |
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் |
|
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, |
|
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் |
|
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் |
|
10 |
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, |
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் |
|
சிலைத் தார் முரசம் கறங்க, |
|
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. |
|
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
| |
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
324 |
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை, |
|
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், |
|
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் |
|
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் |
|
5 |
ஊக நுண் கோல் செறித்த அம்பின், |
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, |
|
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் |
|
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர், |
|
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த |
|
10 |
வெண் காழ் தாய வண் கால் பந்தர், |
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து, |
|
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை |
|
வலம் படு தானை வேந்தர்க்கு |
|
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆலத்தூர் கிழார் பாடியது.
|