ஆலியார்

298
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே, இனியே
நேரார் ஆர் எயில் முற்றி,
5
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே.

திணை கரந்தை; துறை நெடுமொழி.
ஆலியார் பாடியது.