முகப்பு | தொடக்கம் |
உலோச்சனார் |
258 |
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் |
|
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் |
|
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, |
|
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த |
|
5 |
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி, |
புலம் புக்கனனே, புல் அணல் காளை; |
|
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை |
|
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் |
|
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி; |
|
10 |
ஆ தரக் கழுமிய துகளன், |
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................உலோச்சனார் பாடியது.
|
274 |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, |
|
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் |
|
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, |
|
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் |
|
5 |
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, |
கையின் வாங்கி, தழீஇ, |
|
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! |
|
திணை அது; துறை எருமை மறம்.
| |
உலோச்சனார் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|