முகப்பு | தொடக்கம் |
ஊன்பொதி பசுங்குடையார் |
10 |
வழிபடுவோரை வல் அறிதீயே; |
|
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; |
|
நீ மெய் கண்ட தீமை காணின்; |
|
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; |
|
5 |
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், |
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே |
|
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் |
|
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை |
|
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் |
|
10 |
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! |
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், |
|
நெய்தலங்கானல் நெடியோய்! |
|
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
203 |
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், |
|
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், |
|
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; |
|
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், |
|
5 |
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் |
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்! |
|
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், |
|
உள்ளி வருநர் நசை இழப்போரே; |
|
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் |
|
10 |
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் |
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! |
|
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.
|
370 |
.............................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், |
|
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|