முகப்பு | தொடக்கம் |
எருமைவெளியனார் |
273 |
மா வாராதே; மா வாராதே; |
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல், |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த |
|
செல்வன் ஊரும் மா வாராதே |
|
5 |
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் |
விலங்கிடு பெரு மரம் போல, |
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? |
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
303 |
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, |
|
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் |
|
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த |
|
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப |
|
5 |
ஆட்டிக் காணிய வருமே நெருநை, |
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், |
|
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் |
|
கயந்தலை மடப் பிடி புலம்ப, |
|
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
எருமை வெளியனார் பாடியது.
|