முகப்பு | தொடக்கம் |
ஐயூர் முடவனார் |
51 |
நீர் மிகின், சிறையும் இல்லை; தீ மிகின், |
|
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை; |
|
வளி மிகின், வலியும் இல்லை; ஒளி மிக்கு |
|
அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி, |
|
5 |
'தண் தமிழ் பொது' எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, |
கொண்டி வேண்டுவன் ஆயின், 'கொள்க' எனக் |
|
கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே; |
|
அளியரோ அளியர், அவன் அளி இழந்தோரே |
|
நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த |
|
10 |
செம் புற்று ஈயல் போல, |
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே! |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
|
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|
314 |
மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன், |
|
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந் தகை, |
|
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை, |
|
புன் காழ் நெல்லி வன் புலச் சீறூர்க் |
|
5 |
குடியும் மன்னும் தானே; கொடி எடுத்து |
நிறை அழிந்து எழுதரு தானைக்குச் |
|
சிறையும் தானே தன் இறை விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஐயூர் முடவனார் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|