ஒக்கூர் மாசாத்தனார்

248
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்!
இளையமாகத் தழை ஆயினவே;
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து,
இன்னா வைகல் உண்ணும்
5
அல்லிப் படூஉம் புல் ஆயினவே.

திணை அது; துறை தாபத நிலை.
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.