முகப்பு | தொடக்கம் |
ஒக்கூர் மாசாத்தியார் |
279 |
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; |
|
மூதில் மகளிர் ஆதல் தகுமே: |
|
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, |
|
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; |
|
5 |
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், |
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; |
|
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, |
|
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, |
|
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, |
|
10 |
ஒரு மகன் அல்லது இல்லோள், |
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
|