முகப்பு | தொடக்கம் |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் |
71 |
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, |
|
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, |
|
என்னொடு பொருதும் என்ப; அவரை |
|
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு |
|
5 |
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த |
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக; |
|
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து, |
|
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து |
|
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் |
|
10 |
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் |
பொய்யா யாணர் மையல் கோமான் |
|
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் |
|
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், |
|
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், |
|
15 |
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த |
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, |
|
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த |
|
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர் |
|
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே! |
|
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
| |
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
|