முகப்பு | தொடக்கம் |
ஓரம் போகியார் |
284 |
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என, |
|
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப, |
|
நூலரி மாலை சூடி, காலின், |
|
தமியன் வந்த மூதிலாளன் |
|
5 |
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த |
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத் |
|
திரிந்த வாய் வாள் திருத்தா, |
|
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரம்போகியார் பாடியது.
|