ஓரேருழவர்

193
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

திணையும் துறையும் அவை.
ஓரேருழவர் பாட்டு.