முகப்பு | தொடக்கம் |
ஒளவையார் |
87 |
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, |
|
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் |
|
எண் தேர் செய்யும் தச்சன் |
|
திங்கள் வலித்த கால் அன்னோனே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
88 |
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு |
|
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் |
|
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், |
|
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் |
|
5 |
விழவு மேம்பட்ட நல் போர் |
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
89 |
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், |
|
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! |
|
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, |
|
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! |
|
5 |
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன |
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, |
|
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை |
|
வளி பொரு தெண் கண் கேட்பின், |
|
'அது போர்' என்னும் என்னையும் உளனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
91 |
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் |
|
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, |
|
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! |
|
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! |
|
5 |
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி |
நீலமணி மிடற்று ஒருவன் போல |
|
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் |
|
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட |
|
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, |
|
10 |
ஆதல் நின் அகத்து அடக்கி, |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
|
92 |
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; |
|
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு |
|
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; |
|
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் |
|
5 |
கடி மதில் அரண் பல கடந்த |
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
93 |
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் |
|
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் |
|
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, |
|
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் |
|
5 |
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, |
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், |
|
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் |
|
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, |
|
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த |
|
10 |
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என |
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ |
|
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து |
|
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, |
|
அருஞ் சமம் ததைய நூறி, நீ, |
|
15 |
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. |
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
|
94 |
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், |
|
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல |
|
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் |
|
துன் அருங் கடாஅம் போல |
|
5 |
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
95 |
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, |
|
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, |
|
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, |
|
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, |
|
5 |
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் |
உண்டாயின் பதம் கொடுத்து, |
|
இல்லாயின் உடன் உண்ணும், |
|
இல்லோர் ஒக்கல் தலைவன், |
|
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. |
|
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
| |
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
|
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
98 |
முனைத் தெவ்வர் முரண் அவியப் |
|
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் |
|
இனக் களிறு செலக் கண்டவர் |
|
மதில் கதவம் எழுச் செல்லவும், |
|
5 |
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் |
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் |
|
இன நல் மாச் செலக் கண்டவர் |
|
கவை முள்ளின் புழை அடைப்பவும், |
|
மார்புறச் சேர்ந்து ஒல்காத் |
|
10 |
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் |
தோல் கழியொடு பிடி செறிப்பவும், |
|
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் |
|
மற மைந்தர் மைந்து கண்டவர் |
|
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், |
|
15 |
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, |
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் |
|
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் |
|
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து |
|
இறங்குகதிர் அலம்வரு கழனி, |
|
20 |
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! |
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
99 |
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், |
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய |
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, |
|
5 |
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், |
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், |
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் |
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, |
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் |
|
10 |
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய |
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் |
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ |
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின் |
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
|
100 |
கையது வேலே; காலன புனை கழல்; |
|
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; |
|
வட்கர் போகிய வளர் இளம் போந்தை |
|
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, |
|
5 |
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, |
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, |
|
வரிவயம் பொருத வயக் களிறு போல, |
|
இன்னும் மாறாது சினனே; அன்னோ! |
|
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; |
|
10 |
செறுவர் நோக்கிய கண், தன் |
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. |
|
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
| |
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
|
101 |
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; |
|
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், |
|
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ |
|
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி |
|
5 |
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் |
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் |
|
கோட்டு இடை வைத்த கவளம் போலக் |
|
கையகத்தது; அது பொய் ஆகாதே; |
|
அருந்த ஏமாந்த நெஞ்சம்! |
|
10 |
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
103 |
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் |
|
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, |
|
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் |
|
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! |
|
5 |
செல்வைஆயின், சேணோன் அல்லன்; |
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை |
|
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் |
|
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; |
|
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை |
|
10 |
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, |
அலத்தற் காலை ஆயினும், |
|
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
104 |
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: |
|
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் |
|
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் |
|
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை |
|
5 |
நுண் பல் கருமம் நினையாது, |
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனை அவர் பாடியது.
|
140 |
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் |
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! |
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த |
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில |
|
5 |
அரிசி வேண்டினேமாக, தான் பிற |
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, |
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் |
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் |
|
தேற்றா ஈகையும் உளதுகொல்? |
|
10 |
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவனை ஒளவையார் பாடியது.
|
187 |
நாடா கொன்றோ; காடா கொன்றோ; |
|
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; |
|
எவ் வழி நல்லவர் ஆடவர், |
|
அவ் வழி நல்லை; வாழிய நிலனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒளவையார் பாடியது.
|
206 |
வாயிலோயே! வாயிலோயே! |
|
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் |
|
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து |
|
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் |
|
5 |
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! |
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி |
|
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? |
|
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, |
|
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், |
|
10 |
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; |
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் |
|
மழுவுடைக் காட்டகத்து அற்றே |
|
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
|
231 |
எறி புனக் குறவன் குறையல் அன்ன |
|
கரி புற விறகின் ஈம ஒள் அழல், |
|
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, |
|
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் |
|
5 |
திங்கள் அன்ன வெண்குடை |
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
232 |
இல்லாகியரோ, காலை மாலை! |
|
அல்லாகியர், யான் வாழும் நாளே! |
|
நடுகல் பீலி சூட்டி, நார் அரி |
|
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ |
|
5 |
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய |
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
235 |
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! |
|
பெரிய கள் பெறினே, |
|
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! |
|
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
|
5 |
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! |
|
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! |
|
நரந்தம் நாறும் தன் கையால், |
|
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! |
|
10 |
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, |
இரப்போர் கையுளும் போகி, |
|
புரப்போர் புன்கண் பாவை சோர, |
|
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் |
|
சென்று வீழ்ந்தன்று, அவன் |
|
15 |
அரு நிறத்து இயங்கிய வேலே! |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; |
|
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் |
|
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று |
|
20 |
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
269 |
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் |
|
பயிலாது அல்கிய பல் காழ் மாலை |
|
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, |
|
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் |
|
5 |
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, |
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, |
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது |
|
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; |
|
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் |
|
10 |
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், |
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, |
|
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. |
|
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|
286 |
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் |
|
தன் ஓரன்ன இளையர் இருப்ப, |
|
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் |
|
கால் கழி கட்டிலில் கிடப்பி, |
|
5 |
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! |
திணை கரந்தை; துறை வேத்தியல்.
| |
ஒளவையார் பாடியது.
|
290 |
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர் |
|
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! |
|
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, |
|
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் |
|
5 |
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; |
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், |
|
உறைப்புழி ஓலை போல, |
|
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே. |
|
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
| |
ஒளவையார் பாடியது.
|
295 |
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண், |
|
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி, |
|
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின், |
|
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, |
|
5 |
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, |
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, |
|
வாடு முலை ஊறிச் சுரந்தன |
|
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. |
|
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
| |
ஒளவையார் பாடியது.
|
311 |
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், |
|
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை. |
|
தாது எரு மறுகின் மாசுண இருந்து, |
|
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு |
|
5 |
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; |
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் |
|
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. |
|
திணை அது; துறை பாண்பாட்டு.
| |
ஒளவையார் பாடியது.
|
315 |
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; |
|
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; |
|
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி |
|
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, |
|
5 |
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் |
கான்று படு கனை எரி போல, |
|
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
367 |
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் |
|
தமவேஆயினும் தம்மொடு செல்லா; |
|
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; |
|
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் |
|
5 |
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, |
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய |
|
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, |
|
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; |
|
10 |
வாழச் செய்த நல்வினை அல்லது |
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; |
|
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் |
|
முத்தீப் புரையக் காண்தக இருந்த |
|
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! |
|
15 |
யான் அறி அளவையோ இதுவே: வானத்து |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் |
|
பரந்து இயங்கு மா மழை உறையினும், |
|
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.............................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................ |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
392 |
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், |
|
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் |
|
பசலை நிலவின் பனி படு விடியல், |
|
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை |
|
5 |
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, |
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, |
|
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து |
|
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
10 |
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் |
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் |
|
சென்று யான் நின்றனெனாக, அன்றே, |
|
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி |
|
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை |
|
15 |
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் |
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் |
|
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, |
|
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை |
|
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து |
|
20 |
அரும் பெறல் அமிழ்தம் அன்ன |
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
|