முகப்பு | தொடக்கம் |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி |
182 |
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர் |
|
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத் |
|
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்; |
|
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி, |
|
5 |
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், |
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; |
|
அன்ன மாட்சி அனையர் ஆகி, |
|
தமக்கு என முயலா நோன் தாள், |
|
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.
|