முகப்பு | தொடக்கம் |
கருங்குழலாதனார் |
7 |
களிறு கடைஇய தாள், |
|
கழல் உரீஇய திருந்து அடி, |
|
கணை பொருது கவி வண் கையால், |
|
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து, |
|
5 |
மா மறுத்த மலர் மார்பின், |
தோல் பெயரிய எறுழ் முன்பின், |
|
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் |
|
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் |
|
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல |
|
10 |
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ! |
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து |
|
மீனின் செறுக்கும் யாணர்ப் |
|
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
224 |
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; |
|
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, |
|
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; |
|
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
|
5 |
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, |
|
பருதி உருவின் பல் படைப் புரிசை, |
|
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், |
|
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; |
|
10 |
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: |
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! |
|
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, |
|
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, |
|
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், |
|
15 |
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் |
கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
|
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|