முகப்பு | தொடக்கம் |
கருவூர்க் கதப்பிள்ளை |
380 |
தென் பவ்வத்து முத்துப் பூண்டு, |
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ, |
|
........................................ங் கடல் தானை, |
|
இன் இசைய விறல் வென்றி, |
|
5 |
தென்னவர் வய மறவன்; |
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, |
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, |
|
வேறுபெ.............................................த்துந்து, |
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; |
|
10 |
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; |
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்; |
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல, |
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; |
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் |
|
15 |
இலம்படு காலை ஆயினும், |
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
|