முகப்பு | தொடக்கம் |
கல்லாடனார் |
23 |
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, |
|
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; |
|
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், |
|
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் |
|
5 |
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் |
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் |
|
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; |
|
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் |
|
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் |
|
10 |
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, |
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, |
|
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, |
|
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் |
|
துன்னல் போகிய துணிவினோன்' என, |
|
15 |
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை |
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட |
|
கால முன்ப! நின் கண்டனென் வருவல் |
|
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, |
|
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை |
|
20 |
பூளை நீடிய வெருவரு பறந்தலை |
வேளை வெண் பூக் கறிக்கும் |
|
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. |
|
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
25 |
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல |
|
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, |
|
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, |
|
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, |
|
5 |
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை |
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, |
|
பிணியுறு முரசம் கொண்ட காலை, |
|
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் |
|
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! |
|
10 |
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, |
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் |
|
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, |
|
அவிர் அறல் கடுக்கும் அம் மென் |
|
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. |
|
திணை வாகை; துறை அரச வாகை.
| |
அவனைக் கல்லாடனார் பாடியது.
|
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
385 |
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, |
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, |
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, |
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, |
|
5 |
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை |
நீல் நிறச் சிதாஅர் களைந்து, |
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; |
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை |
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், |
|
10 |
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய |
வேங்கட விறல் வரைப் பட்ட |
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
|
391 |
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் |
|
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் |
|
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் |
|
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற |
|
5 |
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, |
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் |
|
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, |
|
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் |
|
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி |
|
10 |
நன............................................வினவலின், |
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் |
|
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, |
|
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, |
|
காண்கு வந்திசின், பெரும!........................... |
|
15 |
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் |
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் |
|
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், |
|
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, |
|
இன் துயி........................... ஞ்சால் |
|
20 |
துளி பதன் அறிந்து பொழிய, |
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! |
|
திணை அது; துறை கடைநிலை.
| |
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
|