முகப்பு | தொடக்கம் |
கழாத்தலையார் |
62 |
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? |
|
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, |
|
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, |
|
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் |
|
5 |
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, |
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, |
|
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் |
|
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; |
|
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; |
|
10 |
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் |
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, |
|
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, |
|
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் |
|
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், |
|
15 |
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; |
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, |
|
நாற்ற உணவினோரும் ஆற்ற |
|
அரும் பெறல் உலகம் நிறைய |
|
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! |
|
திணை தும்பை; துறை தொகை நிலை.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
|
65 |
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, |
|
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, |
|
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, |
|
உழவர் ஓதை மறப்ப, விழவும் |
|
5 |
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, |
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, |
|
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் |
|
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, |
|
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த |
|
10 |
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் |
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, |
|
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. |
|
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
| |
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
270 |
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
நிலம் தவ உருட்டிய நேமியோரும் |
|
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே |
|
5 |
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் |
சிறுவர் தாயே! பேரில் பெண்டே! |
|
நோகோ யானே; நோக்குமதி நீயே; |
|
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை |
|
இன் இசை கேட்ட துன் அரு மறவர் |
|
10 |
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார், |
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, |
|
விழு நவி பாய்ந்த மரத்தின், |
|
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. |
|
திணை கரந்தை; துறை கையறு நிலை. |
|
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
| |
கழாத்தலையார் பாடியது.
|
288 |
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் |
|
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, |
|
வென்றதன் பச்சை சீவாது போர்த்த |
|
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, |
|
5 |
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, |
|
அருகுகை ...................................... மன்ற |
|
குருதியொடு துயல்வரு மார்பின் |
|
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
|
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
289 |
ஈரச் செவ்வி உதவினஆயினும், |
|
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, |
|
வீறு வீறு ஆயும் உழவன் போல, |
|
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய |
|
5 |
மூதிலாளருள்ளும், காதலின் |
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, |
|
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; |
|
கேட்டியோ வாழி பாண! பாசறை, |
|
'பூக் கோள் இன்று' என்று அறையும் |
|
10 |
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? |
திணை ...............; துறை ................முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|